நண்பர்களே! நாளையும் நாளை மறுநாளும் சென்னையில் இருப்பேன். பகலில் புத்தகக் கண்காட்சி, மாலையில் கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்வது, நண்பர்களை சந்திப்பது திட்டம்.
ஒருவேளை மாலையில் மனுஷ் இருந்தால் நானும் உயிர்மை ஸ்டாலில் நேரம் செலவிடுவேன். இல்லாவிட்டால் இருக்க மாட்டேன். போரடிக்கும். ஸீரோ டிகிரி ஸ்டாலிலும் சிறிது நேரம் இருப்பேன்.
என்னென்ன புத்தகங்களை வாங்க வேண்டும் என ஒரு எளிய திட்டம் உண்டெனிலும், நான் போகிற போக்கில் ஆடு இலைதழைகளை கடித்து பார்த்து பொறுமையாக மேய்வதைப் போல புத்தகங்களை தேர்ந்தெடுக்கவே விரும்புவேன்.
அதனால் ஒவ்வொரு கடையாக திருவிழாவில் மிட்டாய் கடைகள் பக்கமாய் எட்டிப் பார்த்து நிற்கும் குழந்தையைப் போல திரிந்து கொண்டிருப்பேன். அந்த ஆர்வத்தில் உங்களில் யாரையாவது கவனிக்க தவறி விட்டால் பக்கத்தில் வந்து ஹலோ சொல்லுங்கள். பேசுவோம்.
பெரும்பாலான இலக்கிய நண்பர்களை, சக, மூத்த படைப்பாளிகளை கண்காட்சி அரங்குகளில், கூட்டத்தில் பார்த்து விடுவேன் என நம்புகிறேன். கண்காட்சிக்கு, வெளியே சந்திக்க விரும்பும் நண்பர்கள் மெஸஞ்சரிலோ என் எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள். சந்திப்போம், உரையாடுவோம்! வரும் போது தின்பண்டங்கள், பூங்கொத்து எடுத்து வாருங்கள் என்றெல்லாம் கேட்க மாட்டேன். நானே வாங்கித் தருகிறேன்.
Comments