முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்.டி ராஜ்குமார் - மிதமிஞ்சிய திறமையும், தேவைக்கு குறைவான வசதியும்



நாட்டார் வழக்காறு, தொன்மங்கள், மாந்திரிகக் குறிப்புகள், தலித் அழகியல், அதன் அரசியல் கூர்மை, இசையொழுங்கு, மலையாளச் சுவை கொண்ட குமரி மாவட்ட தமிழ், ஒற்றைத் தன்னிலையில் நிற்காமல் பலவாறாக உடைந்து பேசும் பிளவுண்ட நகுலன் மனநிலை, புக்காவஸ்கியிடம் காணும் அந்த நசிக்கப்படும் ஆணின் அவலத்தை பேசும் உருவகங்கள் என ஒரு காட்டாற்றைப் போன்ற கவியுலகம் என்.டி ராஜ்குமார் அண்ணனுடையது. அவர் என் மதிப்பீட்டின் படி குமரி மண்ணின் தலைசிறந்த கவிஞர். ஏனென்றால் வேறு யாரையும் நினைவுபடுத்தாத ஒரு தனித்துவம் அவருக்கு, அவருடைய மொழிக்கு உள்ளது. 


அதே நேரம் தன்னுடைய ஆற்றலுக்கு முழுமையான நியாயம் செய்யாதவர் என்றும் அவரை சொல்ல வேண்டும். நிரந்தர வருமானம், குடும்ப ஆதரவு, மக்களை அனுசரித்துப் போகும் பண்பு ஆகியவை என்.டி அண்ணனிடம் இல்லை. இது அவர் முழுமூச்சாக கவிதையில் ஈடுபட முடியாதபடி, போதுமான பொருளாதார ஸ்திரத்தன்மை, ஊடகத் தொடர்புகள் கிடைக்காமல் பண்ணி விட்டது. என்.டி அபாரமான பாடகரும் கூட. “மதுபானக் கடை” படத்தில் அவருக்கு என ஒரு நல்ல உடல்மொழி இருப்பதையும் கவனித்தேன். வெகுஜன ஊடகங்களில் ஒரு நல்ல சுற்று வருவார் என கணித்தேன். ஆனால் சொந்த ஊர் மண்ணை விட்டு அவரால் சென்னையில் இருக்க முடியாததால் அது நிகழவில்லை. 


அவரளவுக்கு இயற்கையான திறன் படைத்த கவிஞர்களை நான் தமிழில் மிக சொற்பமாகவே கண்டிருக்கிறேன். தேவைக்கு அதிகமான திறமையையும், தேவைக்குக் குறைவான ஏழ்மையையும் கடவுள் அவருக்கு அள்ளிக் கொடுத்து விட்டார். 


என்.டி அண்ணனிடம் பத்து நிமிடம் பேசினாலே அவ்வளவு படைப்பூக்கம் கிடைக்கும் - ஏனென்றால் பொல்லாப்பு, பொச்சரிப்பு அவரிடம் இல்லை. யாருடனும் தன்னை ஒப்பிடுவது, “என்னை இலக்கிய உலகத்தில் புறக்கணிக்கிறார்கள்” எனும் அங்கலாய்ப்பது இல்லை. எப்போதும் தன் கற்பனையில், உணர்வெழுச்சியில் உச்சத்தில் இருப்பவர் அவர். தானாக, தனக்குள், மூழ்கி இருப்பதே அவருக்கு மிகுந்த திருப்தி அளிக்கும். அதே போல பொய் சொல்லவும் வராது. மனதில் இருப்பது தடையின்றி அருவியாகக் கொட்டும். அப்புறம், தமிழ் எழுத்தாளர்களிலே அவ்வளவு கம்பீரமான, அருமையான குரல் யாருக்குண்டு? போனில் அவர் குரல் கேட்டாலே என் மனம் குளிர்ந்து விடும்.


என்.டி ராஜ்குமாருக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு என் அன்பும் முத்தங்களும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...