Skip to main content

சகிப்பின்மை பற்றி மற்றொரு பார்வை



Germaine Greer talking at the Hay Festival Cartagena in January 2011
இன்றைய ஹிந்துவில் ஹசன் சரூர் சகிப்பின்மை பற்றி ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார் (Strident Sensitivity Gags Free Speech). சகிப்பின்மை என்றாலே நாம் அதை வலதுசாரிகளுடன் அடையாளப்படுத்துகிறோம். ஆனால் பிரிட்டனில் இன்று இடதுசாரிகள் எப்படி சகிப்பின்மை அற்றவர்களாய் மாறி வருகிறார்கள் என ஹசன் சரூன் பேசுகிறார். ஜெர்மெய்ன் கிரெய்ன் (Female Eunuch எழுதியவர்) எனும் பெண்ணியவாதி “பால்மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரு ஆண் ஆணாகவே இருக்கிறான். அவன் பெண் அல்ல” என்று ஒரு கருத்து சொல்கிறார். உடனே அவரை எதிர்த்து கடுமையான பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவர் ஒரு “திருநங்கை வெறுப்பாளர்” என சித்தரிக்கப்படுகிறார். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு அளிக்கவிருந்த கௌரவப் பட்டம் ஒன்றை ரத்து செய்கிறது. கார்டிப் பல்க்லைக்கழகத்தில் அவர் நிகழ்த்தவிருந்த உரையை நூற்றுக்கணக்கான முற்போக்காளர்கள் போராடி தடை செய்கிறார்கள். தன் மீதான துவேசமும் தாக்குதல் சாத்தியங்களும் அதிகமாகி வருவதால் இனி பாதுகாப்பு உறுதி செய்யப்படாத பட்சத்தில் தான் எங்குமே சென்று பேசப் போவதில்லை என கிரெய்ன் தெரிவித்துள்ளார். இதற்கும் புதிய தலைமுறையில் பா.ஜ.க விடுத்த மிரட்டலுக்கு பின் ஞாநி கூறியதற்கும் அதிக வேறுபாடில்லை.

 
டிம் ஹண்ட் 2001இல் நோபல் பரிசு வாங்கின விஞ்ஞானி. அவர் ஒரு விருந்தின் போது தன்னுடைய காதலிகளை லேசாய் கிண்டலித்து ஒரு ஜோக் சொல்கிறார். உடனே அவர் பெண்களை அவமதித்து விட்டார் என ஒரு சேதி காட்டுத் தீ போல் பரவுகிறது. அவரைப் பற்றி பெண்ணியவாதிகளின் நூற்றுக்கணக்கான புகார்களை அவர் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார்கள். லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரி அவரை வேலை நீக்கம் செய்கிறது. அவர் பொது மன்னிப்பு கோரிய பின்னரே ராயல் அகாதெமியில் உறுப்பினராக நீடிக்க அனுமதிக்கப்படுகிறார். நம் நாடு இந்தளவுக்கு பயங்கரமாய் மாறவில்லை என்றாலும் அதை நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் விருது திரும்பத் தரும் சர்ச்சையில் நான் மாறுபட்டேன் என்பதற்காய் இடதுசாரி தோழர்கள் சிலர் என்னை “பா.ஜ.க” என அடையாளப்படுத்தி தாக்கினார்கள். ஒருவர் என் முனைவர் பட்ட நெறியாளரை தொடர்பு கொண்டு என்னைப் பற்றி புகார் செய்தார். அவர் நோக்கம் என்ன? என் ஆய்வை முடக்கி என்னை தண்டிப்பது. எதற்காய்? ஒரு மாற்றுக்கருத்து சொன்னதற்காக. (என்னுடைய கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள் மட்டும் தான் இவ்விசயத்தில் மிகவும் கண்ணியமாய் நடந்து கொண்டார்கள்.)

நாம் யாரும் ஒத்த கருத்து கொண்டவர்கள் அல்ல. கட்சி உறுப்பினர்களும் அல்ல. நாம் முரண்படுவோம். அதை வெளிப்படுத்தி உரையாடும் அவகாசம் நமக்கு மிகவும் அவசியம். இன்று நாம் அதிகமும் பொதுப் பிரச்சனைகளில் கருத்து சொல்வதால் ஏதாவது ஒரு அணி சார்ந்தே நிற்க நிர்பந்திக்கப்படுகிறோம். முன்பு எந்த அணியும் சாராது ஒரு எழுத்தாளனோ சிந்தனையாளனோ பேச முடியும். இன்று அப்படி பேச முடியாது. பேசினாலும் ஒருவர் உங்கள் மீது மை ஊற்றுவார். இன்னொருவர் உங்கள் மீது வலதுசாரி முத்திரை குத்தி பல்கலைக்கழகங்கள், அலுவலகங்களில் உங்களைப் பற்றி புகார் செய்து எதிர்காலத்துக்கு உலை வைக்க பார்ப்பார்.
 ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் ஒட்டின பார்வை இருக்கலாம். ஆனால் அப்பார்வையிலும் அவர் மாறுபடும் கோணங்கள் இருக்கும். ஒரு பிரச்சனையின் போது தன் மாறுபாடுகளை அவர் வெளிப்படுத்தினால் தம் தரப்பு பலவீனமாகும் என கருதி அவ்வணியினர் அவர் வாயை மூட சொன்னால் அதுவும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது தானே? ஒரே குரலில் ஒரே தொனியில் ஒன்றுசேர பேசும் ஆட்கள் போதுமென்றால் நாமெல்லாம் ஏன் படிக்கிறோம், சிந்திக்கிறோம், உரையாடுகிறோம்?
சரி, நம் சூழல் இப்படி சகிப்பின்மையின் விளிம்பில் வந்து தள்ளாடி நிற்பது ஏன்? ஊடகங்களின் வளர்ச்சியும், சமூக வலைதளங்களும் தான் பிரதான காரணம். முன்பு ஒருவருக்கு மாற்றுக்கருத்து இருந்தால் அவர் அதை தன்னுடைய அந்தரங்கமான நண்பர்களிடம் மட்டும் தெரிவிப்பார். எழுத்தாளர் என்றால் முன்னூறு பேர் படிக்கக் கூடிய கட்டுரையாக எழுதுவார். இன்று இதே மாற்றுக்கருத்து சுலபமாய் ஆயிரக்கணக்கானோரை போய் சேர்கிறது. பொது நீரோட்டத்தில் போய் கலக்கிறது. உடனே பொதுப்புத்தி கொண்டவர்கள் அவரை எதிர்த்து தாக்குகிறார்கள். வாயை மூடச் சொல்கிறார்கள். இந்த கடும் எதிர்வினைக்கு பயந்து இன்று சிந்திப்பவர்கள் ஒரு உத்தியை பின்பற்றுகிறார்கள். மாற்றுக்கருத்துக்களை தம் நெருங்கின நண்பர்களிடம் மட்டும் சொல்கிறார்கள். பேஸ்புக் போன்ற பொதுவெளியில் பொதுப்புத்திக்கு ஒத்த கருத்தை சொல்கிறார்கள்.

 இந்த இரட்டை நிலை தான் இன்று பலரின் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது. உதாரணமாய் ஒருவர் கடும் பெண் வெறுப்பாளராக இருப்பார். பொதுவெளியில் தன்னை ஆவேசமான பெண்ணிய ஆதரவாளராய் காட்டிக் கொள்வார். இந்த பாசாங்கு எந்த உரையாடலும் சாத்தியமற்ற ஒரு மரத்துப் போன நிலைக்கு நம்மை விரைவில் தள்ளி விடும். ஒருவர் தன் தவறான கருத்துக்களை கூட வெளிப்படையாய் சொன்னால் தான் அவை விவாதித்து திருத்தப்பட முடியும். இரு முரண் கருத்துக்களின் மோதல் தான் புது கருத்தாக்கங்களை தோற்றுவிக்கும். ஆனால் ஒத்த பொதுப்புத்தி கருத்துக்களே வெளியாகும் சூழலில் நாம் கிளிப்பிள்ளைகளாக மட்டுமே இருப்போம். ஆனால் பெரும் நிறுவனங்கள் மற்றும் கட்சிகளுக்கு இந்த இரட்டை நிலை கொண்ட கிளிப்பிள்ளைகள் தாம் வேண்டும். சமீபத்தில் ஸ்டாலின் ராஜாங்கமும் என்னிடம் இதைத் தான் குறிப்பிட்டார். ஒருவரின் சொல்லுக்கும் இதயத்துக்குமான தொலைவு அதிகரித்து வருகிறது என்றார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...