முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

“தவமாய் தவமிருந்து”

“தவமாய் தவமிருந்து” பார்த்துக் கொண்டிருந்தேன். மூன்றரை மணி நேரப் படம். சோகத்தையும் செண்டிமெண்டையும் பிழிகிறார்கள். சண்டைக்காட்சி, நகைச்சுவை போன்ற திணிப்புகளோ வில்லனோ நாயகனுக்கான நேரடி சவால்களோ இல்லை. ஆனால் நேரம் போவதே தெரியாமல் பார்க்க வைக்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் சாமர்த்தியமான திரைக்கதை - பத்து நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு சிக்கல் வருகிறது – அதற்கான தீர்வு, அத்தீர்வு பயனளிக்கிறதா, இல்லையென்றால் வேறு என்ன தீர்வுகள் உண்டு என கதை நகர்கிறது.

தப்பியோட்டம்

என் வாழ்வின் கணிசமான பகுதியை நான் பிரியமானவர்களுக்காக செலவழித்திருக்கிறேன். ஆனால் அவர்களில் எத்தனை பேர் இப்போது என்னுடன் இருக்கிறார்கள்? உறவுகளின் அழகு அதன் நிரந்தரமின்மை எனத் தோன்றுகிறது.

பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு!

அண்மையில் ஒரு நண்பருடன் பேசும்போது கமலின் காதல் காட்சி நடிப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்படி ஒரு குழைவு, கெஞ்சல், அணுக்கம், அக்கறை, சட்டென ஆதிக்கம், மூர்க்கம் என அவரது காதல் நடிப்பின் நுணுக்கங்கள் ஏராளம். அத்தனையும் பத்து நொடிக் காதல் காட்சிக்குள் வந்துவிடும் (உதா: வளையோசை கலகலகலவென; பூவாசம் புறப்படும்). “அப்படியே நிஜமாகவே லவ் பண்ற மாதிரி தெரியும்” என்றார் நண்பர் புன்னகைத்தபடி.

பரியேறும் பெருமாள்

“பரியேறும் பெருமாள்” படத்தை கடுமையாய் விமர்சித்து கார்ல் மார்க்ஸ் எழுதிய முகநூல் குறிப்பை படித்தேன். அப்பதிவின் ஆதார கருத்துக்கள் இவை: 1)    நல்லவன் – கெட்டவன் எனும் இருமையை எல்லா வணிக படங்களையும் போல இப்படமும் எடுத்தாள்கிறது. 2)    எதார்த்தத்தை விட மிகையே இப்படத்தில் அதிகம் உள்ளது. ஆகையால் கலையமைதி இல்லாத ஒரு படைப்பாக இது உருப்பெற்றுள்ளது.     “பரியேறும் பெருமாள்” ஒரு முழுமையான கலைப்படம் அல்ல ஒரு வணிகப் படம் என்பதை நான் ஏற்கிறேன். மாரி செல்வராஜும் எங்குமே இதை ஒரு கலைப்படம் எனக் கோரவில்லையே? விமர்சகர்களும் இதை உலக சினிமா என வகைப்படுத்தவில்லை. ஆகையால், கார்ல் மார்க்ஸ் மாய்ந்து மாய்ந்து இதில் உலக சினிமா இயல்பு இல்லை என நிறுவ வேண்டியதில்லை.

நன்றி இறையே!

கடந்த சில தினங்களாய் எழுதுவதில் ஒரு களைப்பு, அவநம்பிக்கை… நேற்று தூக்கத்தை தள்ளிப் போட்டு கொஞ்ச நேரம் எழுதினேன். இன்று முழுக்க எழுத மனம் ஒன்றவில்லை.