1) இதுவரையிலான தாமதத்துக்கும் குழப்பங்களுக்கும் காங்கிரஸ் செய்த அரசியல் ஒரு காரணமென்றால் அதிமுக ஆட்சியமைக்க முயன்றது இன்னொரு காரணம். ஏனோ திமுக கூட்டணி அதைப் பரிசீலித்தது என்று இப்போது தெரிகிறது. அதேநேரம் எடப்பாடியால் அவர்களுடன் உடன்படிக்கைக்கு வர இயலவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் விசிக உள்ளிட்ட கட்சிகள் தாமதித்துக் கொண்டே இருந்தன. தவெகவும் ஒன்றிரண்டு இடங்களுக்காக மழைக்காக டீக்கடை வாசலில் ஒதுங்கி நிற்பவர்களைப் போல காத்திருக்க நேர்ந்தது. அதிமுகவின் மனத்தில் யாரோ உருவாக்கிய ஒரு முட்டாள்தனமான கனவினாலும் பாஜகவை தவெக விரோதித்ததாலும் விஜய் ஏதோ பள்ளி மாணவனைப் போல திரும்பத்திரும்ப ஆளுநரைச் சந்திக்கவும் திரும்ப வெறுங்கையுடன் அனுப்பப்படவும் நேர்ந்தது. அதிமுக இதற்கு மேல் கனவு காண முடியாது என்று விழித்துக் கொண்டதும், எடப்பாடியார் வாழ்த்தி அறிக்கை விட்டதும், விசிக, ஐயுஎமெல் ஆகியவையும் தவெக பக்கம் வந்துவிட்டன. நாடகம் முடிந்தது. 2) ஒருவிதத்தில் தவெக ஆட்சியமைப்பதும் நல்லதுதான். விஜய் நேர்மையான முறையில் 108 இடங்களைப் பெற்றாரோ இல்லையோ நடந்ததை மாற்ற முடியாது. இப்போதைக்குச் சாத்தியம...