முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐ.பி.எல் watch-along இன்று

குஜராத்துக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றி போட்டியின் முதல் 6 ஓவர்களை என்னுடன் இணைந்து பார்க்க வாருங்கள். நேரலை வர்ணனையும் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில்களும் உண்டு. IPL qualifier 2 Watch-along நேரம் 7: 20 pm

நேசத்தின் அத்தாட்சிகள் - ஆர். அபிலாஷ்

உன்னை வெறுக்கும் தோறும் மேலும் மேலும் நேசிக்கிறேன் நேசிக்கும் தோறும் நீ அந்நியமாகிறாய் தொட்டால் உதிர்ந்து விடும் பூவைப் போல பலவீனமாக இருக்கிறாய் உன்னை முத்தமிட்டு உதிர்த்து விட விருப்பம் கொள்கிறேன் நீ வாடிப் போகும் போது கசியும் வாசனையை உள்ளங்கையில் வைத்து முகர ஏங்குகிறேன் உன் கண்ணீரைத் தொட்டு சுவைக்க அது மெல்ல மெல்ல இனிப்பதை விநோதமாய் வியந்தபடி ரசிக்கிறேன் இரவில் உன் இதயத்துடிப்புகளை கேட்டபடி படுக்கிறேன் நான் தூங்க ஆரம்பிக்கும் போது அவை நின்று போகின்றன திடுக்கிட்டு விழிக்கும் போது அவை படபடவென துடித்தபடி ஒரு விடுபட விரும்பும் பறவையை போல என்னிடம் இறைஞ்சுகின்றன வெகுநேரம் அறியாது ஒரு குழந்தையின் காலை மிதித்து இருந்து விட்டது போல் குற்றவுணர்வு அடைகிறேன். ஒரு பழம் அழுகிப் போன பின் தான் கனிந்து விட்டது என நம்புகிறாய் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு நினைவிழந்த கோழியை அப்படியே தோலுரித்து மெல்ல நுகர்ந்து அதன் சுவை அலாதியானது என்றபடி கழுத்தில் கத்தி வைக்கிறாய் கிழித்து திருகி தண்ணீரில் குருதி கரைவதைப் பார்க்கிறாய் நீ சமைக்கும் எல்லா அசைவப் பொருளிலும் குருதி வாசனை மேலிடுகிறது குருதி தான் உயிரின் வாசனை...

சைவ உணவு எனும் புதிர்

சைவம் மட்டுமே உண்டு வருவோர் வயதானதும் மிகவும் தளர்ந்து போவதை அதிகமாகக் காண்கிறேன். இது போக பல நரம்பியல் சிக்கல்கள், தோல் பிரச்சினைகள், தசையிழப்பினால் வரும் தளர்ச்சியும் ஏற்படுகின்றன. வைட்டமின் பி 12 இல்லாமை, omega-3 fatty acids, particularly eicosapentaenoic acid (EPA) மற்றும் docosahexaenoic acid (DHA) ஆகியற்றின் போதாமையால் இது நிகழும் என்கிறார்கள். இது ஏதோ நான் அரைகுறையாய் கவனித்துக் கண்டுபிடித்தது அல்ல. Impact of Vegan and Vegetarian Diets on Neurological Health: A Critical Review எனும் கட்டுரையில் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். வீகன் உணவுகள் இன்னும் மோசம் என்கிறார்கள். முக்கியமான காரணம்: நாம் வீடு, கார், பயணம் போன்ற உடைமைகள், வசதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கு அளிப்பதில்லை. ஒருவர் பெரிய வீட்டில் வாழ்வார். வங்கியில் பணமிருக்கும். ஆனால் காலையில் உப்மாவோ இட்லியோ சாப்பிடுவார். வேக வைத்த காய்கறி, முட்டை, சிக்கன், பனீர், சீஸ் எல்லாம் அவருக்கு அதிகச் செலவாகத் தெரியும். அது மட்டுமல்ல சிலர் காரெடுத்துப் போய் வசந்த பவன் போய் இட்லி சாப்பிடுவார்கள். பொங்கலை முழுங்குவ...

என்னுடைய watch-along மற்றும் கிரிக்கெட் வர்ணனை அனுபவம்

என்னால் தொடர்ச்சியாக ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே வர்ணிக்கவும் நுட்பங்களை விவாதிக்கவும் இயலுமா என ஒரு சந்தேகம் இருந்தது. டிவி வர்ணனையில் அவர்கள் விடாமல அரைமணிநேரம் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கும். ஆகையால் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயலலாம் எனும் நோக்கத்திலே நேற்று watch-along செய்தேன். இரண்டு விசயங்கள் ஆச்சரியப்படுத்தின - 1) 20 ஓவர்களும் இடைவிடாமல் வர்ணிப்பது கூட கடினம் அல்ல. அதுவும் கூட ஆளிருந்தால் அது ஒரு விசயமே அல்ல. 2) சும்மா உட்கார்ந்து ஆட்டத்தைப் பார்ப்பதைவிட இது ரொம்ப இன்பமான அனுபவமாக இருந்தது. செயலூக்கத்துடன் கிரிக்கெட் பார்க்க முடிந்தது. ஆட்டம் அலுக்கும்போது கவனம் சிதறும். பார்க்கப் பிடிக்காது. ஆட்டத்தை அலசுவதால் அலுப்படையும் இடங்களையும் உற்சாகமாகக் கடக்க முடிந்தது. இது ஒன்றும் கடுமையான வேலை அல்ல. டிவி வர்ணனையாளர்கள் பெரிய திரை முன்பு அமர்ந்து அவர்களுக்கு தொடர்ச்சியாக தரவுகளை அளிக்கும் அணியினரின் உதவியுடன், சக வர்ணனையாளருக்கு ஈடுகொடுத்துப் பேசுவார்கள். அது மட்டுமே வித்தியாசம். இணையம் இம்மாதிரி சின்னச்சின்ன பரிசோதனைகளைச் செய்து பார்க்க அனுமதிக்கிறத...

ஐபிஎல் watch-along

  வணக்கம். இன்று ஐ.பி.எல் தகுதிப் போட்டி 1 குஜராத்துக்கும் பெங்களூருக்கும் இடையில். அதையொட்டி ஒரு watchalong யுடியூபில் பண்ணலாம் என இருக்கிறேன். 7: 25க்கு ஆரம்பிக்கிறேன். ஆட்டத்தின் போக்கை ஒட்டி என் வர்ணனையும், கருத்துக்களும், கணிப்புகளும் இருக்கும். யாரெல்லாம் அதில் கலந்துகொள்ள விருப்பமோ பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். கீழே உள்ள தொடுவழியை கிளிக் செய்து இணையுங்கள். யாரும் இல்லாவிட்டால் முடித்துவிட்டு கிளம்புவதாகத் திட்டம். சும்மா ஒரு முயற்சி. பி.கு: watch-along என்பது இணையத்தில் கூட்டாக நேரலையில் ஒரு நிகழ்வைக் கண்டு கருத்துக்களைப் பகிரும் ஒரு ஏற்பாடு. https://youtube.com/live/LF9bYw8CZxM?feature=share

போராட்டங்களும் தொழில்சார்ந்த பிரதிநுத்துவமும்

  தமிழ்நாட்டு துப்புரவுப் பணியாளர்களின் பிரச்சினைகளை ஏதோ சமூகத்தின் விளிம்பில் நடப்பதாகப் பாவிப்பது நல்லதல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கத்தினர் மட்டும் இதில் ஆர்வம் காட்டினால் போதாது. ஏனென்றால் குறைந்தபட்ச ஊதியம், அதைப் பெறுவதிலுள்ள சிக்கல்கள் பின்னர் வேறுவகையான தொழிலாளர்களையும் பாதிக்கப் போகிறது - கடந்த சில ஆண்டுகளாகவே தொழிற்சாலையிலும் ஐ.டி உட்பட்ட பிற நிறுவனங்களிலும் வேலை நேரத்தை அதிகரித்து ஊதியத்தைக் குறைக்க அனுமதிக்கும்படி அரசை இந்தியாவின் பல நகரங்களில் தனியார் நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே பொருளாதார வீக்கம், அழுத்தம், அதனால் விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலையுயர்வு, வேலையின்மை உள்ளதால் அரசு இதற்குச் செவி சாய்க்காமல் உள்ளது. இன்னொரு புறம் அரசும் நேரடியாக வேலைக்கு ஆளெடுக்காமல் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைகிறது. இதனாலே மேற்சொன்ன துப்புரவுப் பணியாளர் சிக்கல்கள் தோன்றுகின்றன. எப்போதெல்லாம் அரசு ஒப்பந்தம் போடுகிறதோ அங்கெல்லாம் ஊழல் தோன்றும். ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு குறையும். எதிர்காலத்தில் அரசு செலவைக் குறைக்கும் நோக்கில் செய்வதாகச் சொல்லி ஊழியர்கள் எல்லாரையுமே ஒ...

லாட்டரிக் கொள்ளைக்காரர்களை எதிர்ப்பது

  மக்களாட்சியில் ஒரு நிலைகுலைவு - தேர்தல் மோசடி, வாக்கு எந்திர மோசடி, சினிமாக்காரர்களை வைத்து அரசியலைக் கைப்பற்றும் லாட்டரித் தொழிலதிபர் மோசடி - வரும்போது கிடைக்கிற ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள் அரசியல் பேசுவது நல்லது - அதனால் மக்களுக்கு நேரடியாகப் பணம் வரப் போவதில்லை. மக்கள் அரசியல்வாதிகள் அல்லர். அரசியல் அவர்களுக்குத் தொழில் அல்ல. ஆனாலும் அரசியல் அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. உதாரணமாக, ஒரு அரசாக நீங்கள் அமெரிக்க சார்பா, ரஷ்ய சார்பா என்பது உங்கள் நாட்டின் எண்ணெய் இறக்குமதியை பாதிக்கும். அது பொருளாதார நெருக்கடிக்கு, விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்லும். அண்மையில் நாட்டின் பிரதமரே இதை ஒப்புக் கொண்டார். மக்கள் மட்டும் அரசியல் பேசாமல் தம் போக்கு இருந்தால் அவர்கள் வேறு நாட்டுக்குத்தான் குடிபெயர வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதபோது மக்கள் பேசியே ஆக வேண்டும். மக்களாட்சி ஒழுங்காக நடக்கும்போது மட்டுமே மக்களால் - பொழுதுபோக்கு, படைப்பாக்கம், வாசிப்பு என - கொஞ்சம் சுயநலமாக இருக்க ஈயலும். சினிமா அரசியலுக்குள் வரும்போதெல்லாம் சாக்கடை நம் தண்ணீரில் கலக்கிறது, பின்வாசல் வழியாக பொரு...

சமூகமாற்றமும் குழந்தைகள் மீதான வன்முறையும்

இந்த தரவுகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் குழந்தைக் கடத்தல் 56% அதிகரிக்கிறது எனும் தகவல். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புரிதல் அதிகரித்திருப்பதாகவும், அதனால் அதிகமான அளவில் புகார் அளிக்கப்படுவதும், போஸ்கோ சட்டத்தில் வந்துள்ள சில மாற்றங்களும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கான காரணங்களில் சில என்றாலும் மிக முக்கியமாக 2021க்குப் பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வை குறிப்பிட வேண்டும் - வறுமை வளர்ந்தவர்களைவிட குழந்தைகளையே அதிகம் பாதுகாப்பற்றவர்களாக்குகிறது என்கிறார்கள் நிபுணர்கள். பொருளாதார மாற்றங்களால் குடும்பங்கள் சிதைகின்றன, அத்துடன் குழந்தைகளை கண்காணிக்கும், அவர்களுடைய நலனை விசாரிக்கும் உறவினர்கள், தாத்தா பாட்டிகள் குறைகிறார்கள். அடுத்து, ஏற்றத்தாழ்வுகள் மிகுவதுடன் எந்த அறத்திலும் விழுமியத்திலும் நம்பிக்கையில்லாத சமூகமும் இன்று தோன்றியுள்ளது - இதற்கு இணையமும் இன்றைய நவதாராளவாத சந்தையும் ஒரு காரணம்: இவை மனித வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக கணக்கிட்டு விற்கவும் வாங்கவும் முடியும், அதைத் தாண்டி - நுகர்வுக்கு அப்பால் - எதுவும் பொருட்டில்லை எனும் நிலையை எற்படுத்தின...

"ஷாட் ஓக்கேவா?" எனும் கொடூர ஆட்சி

  நாட்டின் நடக்கும் குற்றங்களின் மொத்தப் பழியையும் தவெக ஆட்சி மீது சுமத்தக் கூடாது என்பதை ஏற்கிறேன். குற்றங்களை மொத்தமாகத் தடுப்பது அல்ல, குற்றங்களில் இருந்து அடிப்படையான பாதுகாப்பளிப்பதும், குற்றங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதான நம்பிக்கை அளிப்பதும்தன அரசின் பணிகள். அதாவது ஒரு கட்டமைப்பும் அதற்கான நடைமுறையும் உள்ளதாகக் காட்டுவதற்கே அரசும் அமைச்சரவையும் முதல்வரும் இருக்கிறார்கள். சூலூர் சிறுமியின் கொலைச் சம்பவத்தில் காவல்துறை வேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்தது பாராட்டத்தக்கது. காவல் அதிகாரிகள் எப்படி ஊடகங்களிடம் பேசினார்கள், எவ்வளவு சீரியஸாகத் தெரிந்தார்கள் என்பது முக்கியமல்ல. அது optics. அதேநேரம், தவெக அரசு மேற்சொன்ன opticsக்காகத்தான் அக்குழந்தையின் சடலத்தை அவசரமாக எரித்தார்கள். தாயிடம் கூடக் காட்டாமல் அநீதி இழைத்தார்கள். குழந்தையின் தாய் ஆவேசமாகப் பேட்டியளித்ததும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதும் ரூட்ஸ் மீடியாவை கலங்க வைத்துவிட்டது. குழந்தையின் சடலத்தை வைத்து எதாவது ஊர்வலம் போவது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வந்து துக்கம் விசாரிப்பது, அறிக்கை விடுவதெல்லாம் நட...

நாவலாசிரியரின் குறிப்புகள் - 17

  ஒரு நாவல் நம் விரல் நுனியில் இருந்து தோன்றவில்லை. அது நம் அனுபவச் சேகரிப்பில் இருந்து மட்டும் வரவில்லை. ஒரு நாவல் நம் மொழிக்குள் இருந்து அசலாக எழுந்து வருகிறது. நம் மொழியே நம் மனம். ஆக, நாம் நாவலை எழுதுகையில் நம் மனத்தையே எழுதுகிறோம். மனத்தின் ஒரு பகுதியை நாவலாகக் கட்டமைக்கிறோம். அது தன்னையே படைக்கும் ஒரு படைப்பு. நாவலை அவ்விதத்தில் கனவுடன் ஒப்பிடலாம். நாம் ஒரு கனவைக் ‘காண்கிறோம்’. ஆனால் கனவு எழும்போது அது தன்னையே படைக்க ஆரம்பிக்கிறது. அது ‘தான்’ அதுவரைக்கும் எப்படியெல்லாம் இருந்தோமோ எனக் கருத்திற்கொண்டு அப்படியெல்லாம் இருக்க முடியுமோ, இருக்கக் கூடாதோ அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து தன்னையே கற்பனை செய்து படைக்கிறது. அதனால்தான் நாம் ஒரு கனவில் சிக்கியிருக்கையில் அவ்வளவு திகைப்பாக அதை உணர்ந்தபடியே கவனிக்கவும் செய்கிறோம். நாம் கனவிலும் இருக்கிறோம், கனவு நம்மில் இருந்து வளர்வதையும் கண்டு திகைக்கிறோம். கனவு நம்மில் இருந்து தோன்றவும் செய்கிறது, அது நமக்குள் இருந்து நம்மையே படைக்கவும் செய்கிறது. எனக்குள் இருந்து நாவலை எழுதுகிறவர் ஒரு படைப்பாளியா அல்லது என் நாவலே ஒரு ‘படைப்பாளிதானா’?...

நாவலாசிரியரின் குறிப்புகள் 16

  நேற்று இரவு ஒரு அரசியல் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளுங்கட்சியின் ஆலோசகரும் அமைச்சருமான ஒருவரைக் குறிப்பிட்டு அவர் ஒரு குட்டிச்சாத்தான், அவருக்கு தொடர்ந்து வேலை கொடுக்கவில்லை என்றால் அவர் உங்களை முழுங்கிவிடுவார் என்று சொன்னார். எனக்கு அந்த உருவகம் ரொம்ப உயிர்ப்பாக, வித்தியாசமாகத் தோன்றியது. நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்துக்கு அந்த குட்டிச்சாத்தனின் இயல்பு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம், கதையமைப்பையும் அது வலுவாக்கும் எனத் தோன்றியது. உடனே இரவுணவை முடித்துவிட்டு அதை எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் வேறென்னென்னமோ செய்திருந்துவிட்டு சட்டென நாவலைத் திறந்து எழுத ஆரம்பித்ததும் கடும் புயல் மழையில் வீட்டின் சுவர்களைப் பெயர்த்துக் கொண்டு வெள்ளம் பாய்வதைப் போல சொற்கள் பெருக்கெடுத்து ஓடின. விடியும்போதுதான் எழுதுவதை நிறுத்தினேன். எழுதும்போதே அது நன்றாக வந்துள்ளதாக உணர்ந்தேன். ஒரு அரசியல் நேர்முகத்தில் இருந்து என் நாவலுக்கு ஒரு திறப்பு வருமென யாராவது சொல்லியிருந்தால் கட்டாயம் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நாம் எதைச் செய்தால...

கூட்டணி தர்மம்

கூட்டணி தர்மம் என்பது தேர்தலுக்காகவா தேர்தலுக்குப் பின்பானதா? தேர்தலுக்குப் பின்பானதென்றால் இப்போதுள்ள தவெக-விசிக கூட்டணியே அதற்கு உதாரணம். தேர்தலுக்கு முன்பானதென்றால் திமுக-விசிக. இரண்டுக்கும் வேறுவேறு தர்மம். தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் இருந்தவர்கள் பின்பும் இருக்க வேண்டும் என்றில்லை. ஏனென்றால் அவர்கள் கூட்டணியை பரஸ்பரம் பலம் சேர்ப்பதற்காக இணைந்தார்கள். காங்கிரஸும், விசிகவும் இடதுசாரிகளும் ஒரு கூட்டணியில் இணைகையில் அதற்கு ஒரு தார்மீக பலம் வருகிறது. இது ஒரு பெரிய கட்சியை நோக்கி உதிரி வாக்காளர்களை ஈர்க்கவும் கட்சி வாககளர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் உதவுகிறது. ஆகையால் இந்த தேர்தலுக்கு முந்தைய கூட்டணியால் திமுகவும் பயனடைந்துள்ளது. (கூட்டணிக் கட்சிகள் எந்தளவுக்கு வேலை செய்தன என்பதற்குள் நான் வரவில்லை. அது இங்கு பொருட்டல்ல.) ஆகையால் ஏதோ திமுகவின் உதவியாலே கூட்டணிக் கட்சிகள் வென்றதாகக் கோருவதும் இப்போது அவர்கள் வெளியேறியதும் சபிப்பதும் கொஞ்சம் மலினமானது. நியாயமற்றது. அடுத்து இதே போல ஒரு கூட்டணி அமையாது என்று திமுகவினர் சொல்ல முடியுமா? அமையக் கூடுமெனில் ஏன் இப்போதே அந்த உறவில் வருத்தத்தைக்...

ஒரு ரியாலிட்டி ஷோ அமைச்சரவை

  விசிக அமைச்சரவையில் இணைவது தமிழ்நாட்டில் முற்போக்குச் சிந்தனையை, பகுத்தறிவை நம்புவோருக்கு ஒரு பெரிய வீழ்ச்சிதான். அதில் சந்தேகமே இல்லை. தனிப்பட்ட முறையில் இது விசிகவுக்கு பலனளிக்கும் என்பதிலும் அதே சமயத்தில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் 'நேரடி அதிகாரத்தில்' பங்கேற்கலாம். அவர்கள்தாம், தலித்தியமோ, அம்பேத்கரியமோ, அயோத்திதாசரியமோ அல்ல. இதில் தெளிவு அவசியம் - அமைச்சர் பதவி தனிமனிதருக்குத்தானே ஒழிய கருத்தியலுக்கு அல்ல. தவெக ஒரு அம்பேத்கரிய கட்சி அல்ல. (அது கட்சியே அல்ல, ஒரு ஒற்றைத் தலைமையை வழிபடும் தொகுப்பே என்பது வேறுவிசயம்.) நான் இதையேதான் திமுக ஆட்சிக்கு வந்தாலும் சொல்லியிருப்பேன். மேலாதிக்கத்தின் பகுதியாவது கருத்தியலை நம்புவோரின் பிரதிந்தி அல்லர். ஆனால் திமுகவில் கருத்தியல் சார்ந்து ஒரு தலைமையை வழங்குபவராக விசிகவினர் இருந்திருக்க முடியும். அமைச்சரவையில் அவர்கள் இணைக்கப்படாதது குறித்து எனக்கு வருத்தமே. அதேநேரம், தவெகவுக்குள் வன்னி அரசுவால் ஒரு தலைமையை வழங்க முடியாதென்றே நினைக்கிறேன். இதுதான் முக்கியமான வித்தியாசம். காரணம் கருத்தியல் முரண் அல்ல. தவெகவுக்கு அடிப்படையில் 'தல...

யாராலும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டுக் காளை

வி.சி.க தவெக அமைச்சரவையில் இணைந்ததை வரவேற்று எழுதியுள்ள டி. தர்மராஜ் வெற்றுக் குறிப்பானை நிரப்புவதற்கான சிறந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதாவது விஜய் ஒரு காலிக் குறிப்பான் என்று டி. தர்மராஜ் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இப்போது அதை தலித் அரசியலால், அல்லது அயோத்திதாசரியத்தால், நிரப்ப வாய்ப்பு வந்துள்ளது, அதற்கான தகுதி விசிகவிடம் மட்டுமே உண்டு என்று அவர் கூறுகிறார். இங்குதான் ஒரு பிரச்சினை வருகிறது - ஒரு வெற்றுக் குறிப்பானை அவ்வாறு நிரந்தரமாக, சாராம்சமாக நிரப்ப இயலாது என்று பின்னை மார்க்ஸிய கோட்பாட்டாளர் எர்னெஸ்டோ லேக்ளோவ் (Laclau) சொல்கிறார். அவரது Hegemony and Socialist Strategy எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "மூலகங்களில் இருந்து தருணங்கள் நோக்கிய நிலைமாற்றமானது எப்போதுமே நிறைவடைவது இல்லை." “The transition from the ‘elements’ to the ‘moments’ is never complete.” மூலகம் என்று அவர் சொல்வது வெற்றுக் குறிப்பானை. இந்த வெற்றுக் குறிப்பானை நேரடியாக நாம் ஒரு காலிக் கோப்பையாகப் புரிந்து கொள்ளலாகாது. இது ஒரு பொருள் அல்ல, ஒன்றை நாம் நம் இருப்பாக ...

பொய்யாட்டம்

  விசிக, காங்கிரஸ், ஐ.யு.எம்.எல் அமைச்சரவையில் இணைவதுடன் தவெக தன்னை ஒரு திமுக குளோன் கட்சியாக மாற்றிக் கொண்டு விடும். திமுகவின் அரசியலைப் பேசிக் கொண்டே தன்னை இன்னும் ஸ்டைலான திமுகவாகவும் எதிர்-திமுகவாகவும் காட்டும். அத்தோடு, இனிமேல் தவெகவை எதிர்க்கும் பொறுப்பை (அதாவது எதிர்க்கட்சி அந்தஸ்தை) பாஜக எடுத்துக் கொள்ளும். ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டும் இருப்பதாலும், அதிமுக ஏற்கனவே தவெக 'கூட்டணியில்' உள்ளதாலும் (என்னவொரு குழப்பம் ஐயா) அவர்கள் தம்மை எதிர்க்கட்சி என்றும் கோர மாட்டார்கள். ஆனால் அப்படியே பாவனை செய்வார்கள். இப்போதே பாஜக ஆதரவாளர்கள் ஒரு பக்கம் தவெகவை ஆதரிப்பதையும் இன்னொரு பக்கம் சாடுவதையும் ஊடகங்களில் பார்க்க முடியும். இதெல்லாம் தெளிவாக அவர்களுக்குத் தெரிந்தே நடக்கிறது. தவெக திமுக நகல் 1 என்றால் பாஜக திமுக நகல் 2. இந்த இரண்டு நகல்களும் இனி மோதிக் கொள்வதே நம் களமாக இருக்கும். இந்த மோதலும் நிஜ மோதல் அல்ல. ஒருவித நடிப்புதான். இதை ஒரு 'பரவச அனுபவமாக' நம் மீடியா மாற்றும். என்ன சிக்கல் என்றால் தவெகவை இனி யார் விமர்சித்தாலும் அவர்கள் இந்த பொய்யாட்டத்தின் பகுதியாக வேண்டி இருக்கும...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...

ருத்துராஜின் தலைமை

  நேற்றைய சி.எஸ்.கே போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சன் ரைசர்ஸ்ஸ் அணி ஒரு சிரமமான ஆடுதளத்தில் கொஞ்சம் நெருக்கடியான நிலையில் இருந்தார்கள். கிளாஸன் வந்தது ஒரு முக்கியமான தருணம். அவர் அவுட் ஆகியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்திருக்கும். அவர் கிட்டத்தட்ட ரன் அவுட் ஆக வேண்டியது. தட்டுத்தடுமாறி தப்பித்தார். அவரை அது எரிச்சலூட்டியது. "என்ன இது! நம்ம ரேஞ்சுக்கு இப்படி டொக் டொக் என்று டொக்கு வைத்து ஒற்றை ஓட்டம் எடுக்கவே சிரமப்படவா?" என்று நினைத்து அவர் நூர் அஹமதை குச்சிகளை விட்டு இடத்தை உருவாக்கி மட்டையை நேராக வீசி பவுண்டரி அடித்தார். அப்போதுதான் அவர் அந்த ஆடுதளத்தில் அடிக்க வேண்டிய வேகத்தை உணர்ந்து கொண்டார். டைமிங் கிடைத்தது. அடுத்த ஓவரிலும் இப்படித்தான் அவர் ஒற்றை ஓட்டங்களை எடுக்க முடியாதபடி களத்தடுப்பு அமைய அவர் பந்தைத் தூக்கி அடிக்கத் தொடங்கினார். இந்த அதிரடி ஓட்டங்களே சன் ரைசர்ஸுக்கு ஒரு செலுத்துவிசையை அளித்தது. ஒருவேளை களத்தடுப்பாளர்கள் ஒற்றை ஓட்டத்தை அவருக்குக் கொடுத்திருந்தால் அந்த அடியைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாமோ என்றும் கூட நினைத்தேன். கிளாஸனின் ஈகோ ...

ரவி மோகன்: உறவின் சாராம்சம்

  நேற்று இரண்டாவது முறையாக ரவி மோகனின் பத்திரிகையாளர் சந்திப்புக் குமுறலைப் பார்த்துக் கொண்டிருந்தேன் . அதில் அவர் தன்னால் மனதைக் குவித்து நடிக்க முடியாததால் விவாகரத்து முடியும்வரை புதிய படத்தில் நடிக்கப் போவதில்லை எனக் கூறுவதையும் அதை அடுத்து ஒரு பத்திரிகையாளர் அவரிடம் அவர் தன் மனதை இயல்பாக்கி தன் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோருவதையும் " சத்தியமா என்னால முடியலீங்க " என்று சொல்வதையும் கவனித்தேன் . இது ஒரு முக்கியமான பிரச்சினை . நான் என் விவாகரத்தை எதிர்கொண்ட காலத்தில் வேலைக்குச் செல்வது ஒரு நல்ல கவனச்சிதறலக இருந்தது என்றாலும் சில நாட்களில் நான் ஒரு தீவிர கொதி நிலையில் இருப்பேன் . யாரைப் பார்த்தாலும் மூக்கில் ஒரு குத்து விடலாமோ என்றிருக்கும் . கோபம் ஒரு வியாதியாகவே எனக்குள் தோன்றியிருந்தது . கட்டுப்படுத்த முடியாத சினம் . எவ்வளவு வெளியே கொட்டினாலும் உள்ளுக்குள் கடலைப் போல ஆர்ப்பரிக்கும் சினம் . இன்னொரு பக்கம் எந்தக் கணமும் அழக் கூடிய நிலையில் இருப்பேன் . சில நேரங்களில் வகுப்...