Skip to main content

Posts

Showing posts from May, 2026

தமிழ்நாட்டின் சுதேசி "மோடி" ஆட்சிக்கட்டில் ஏறினால் என்னவாகும்?

1) இதுவரையிலான தாமதத்துக்கும் குழப்பங்களுக்கும் காங்கிரஸ் செய்த அரசியல் ஒரு காரணமென்றால் அதிமுக ஆட்சியமைக்க முயன்றது இன்னொரு காரணம். ஏனோ திமுக கூட்டணி அதைப் பரிசீலித்தது என்று இப்போது தெரிகிறது. அதேநேரம் எடப்பாடியால் அவர்களுடன் உடன்படிக்கைக்கு வர இயலவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்ததால் விசிக உள்ளிட்ட கட்சிகள் தாமதித்துக் கொண்டே இருந்தன. தவெகவும் ஒன்றிரண்டு இடங்களுக்காக மழைக்காக டீக்கடை வாசலில் ஒதுங்கி நிற்பவர்களைப் போல காத்திருக்க நேர்ந்தது. அதிமுகவின் மனத்தில் யாரோ உருவாக்கிய ஒரு முட்டாள்தனமான கனவினாலும் பாஜகவை தவெக விரோதித்ததாலும் விஜய் ஏதோ பள்ளி மாணவனைப் போல திரும்பத்திரும்ப ஆளுநரைச் சந்திக்கவும் திரும்ப வெறுங்கையுடன் அனுப்பப்படவும் நேர்ந்தது. அதிமுக இதற்கு மேல் கனவு காண முடியாது என்று விழித்துக் கொண்டதும், எடப்பாடியார் வாழ்த்தி அறிக்கை விட்டதும், விசிக, ஐயுஎமெல் ஆகியவையும் தவெக பக்கம் வந்துவிட்டன. நாடகம் முடிந்தது. 2) ஒருவிதத்தில் தவெக ஆட்சியமைப்பதும் நல்லதுதான். விஜய் நேர்மையான முறையில் 108 இடங்களைப் பெற்றாரோ இல்லையோ நடந்ததை மாற்ற முடியாது. இப்போதைக்குச் சாத்தியம...

எதிரிக்கு நண்பனை நண்பனாக்கி எதிரியாக்குவது

செய்தி: //ஆளுநர் மாளிகையின் கெடுபிடிகள் மற்றும் அதிமுக-திமுக இடையேயான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதன் ஒரு பகுதியாக தனது கூட்டணியில் இருந்த விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவளிக்க அவர் முழு சுதந்திரம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை விசிக தனது ஆதரவை தவெக-விற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இதன் மூலம் விஜய்யின் தலைமையிலான அரசு அமைவது உறுதியாகியுள்ளது.// ஸ்டாலின் ஆசியுடன் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு என்பதே ஒரு சுவாரஸ்யமான கதையாடல்தான். ராகுல் காந்தி செய்த சீண்டலின் அடுத்த கட்டம் இது. 'வஞ்சிக்கப்பட்ட வாலிபனைத்' தம் நாடகத்தின் 'நடிகனாக்கி' விட்டார்கள். விஜய் இந்த 'நாடகத்தில்' வேடத்தை ஏற்றுக்கொண்டு இதை ஆரம்பித்தால் அவரால் தனக்கான வசனங்களை ஒப்பித்து காட்சிகளில் நடிக்கவும் முடியாது, எதிராக எதையும் பேசி திரைக்கதையை மாற்றவும் இயலாது. இந்த 'நாடகம்' அரங்கேறினால் அதற்குள் பல முரணான வசனங்களும் காட்சி...

நிஜந்தனின் "பிறழ்" - இரு தேகங்களுக்கு இடையே

  "பிறழ்" ஒரு தனித்துவமான நாவல். கோபிகிருஷ்ணனின் கதைகளுடன் ஒப்பிடலாம் என்றாலும் அவரது அக்கறைகள் மனபிறழ்வை அடக்கப்பட்ட காமத்தின் வெளிப்பாடுகள் எப்படி சமூக மனத்துடன் முரண்படுகின்றன என்பதே. நிஜந்தனின் நாயகனுக்கு இம்மாதிரி காமத்தையும் அது நடத்தையில் ஏற்படுத்தும் சிதைவுகளையும், தனிமனித-சமூக உறவுகளில் வெளிப்படும் அபத்தமான கணங்களையும் தள்ளி நின்று பார்க்கிற சாத்தியமோ அவசாசமோ இல்லை. கோபிகிருஷ்ணன் காமத்தை கொஞ்சம் சர்ரியலாகவும் சில இடங்களிலில் கனிவாகவும் பிரியமாகவும் பார்க்க நிஜந்தனோ ஒருவர் அதன் பகுதியாகவே மாறி துன்புறுவதை, மெல்ல மெல்ல அழிவதைக் காட்டுகிறார். கோபிகிருஷ்ணனுடையது அபத்த நகைச்சுவை நாடகம் என்றால் நிஜந்தனுடையது துன்பியல் நாடகம். "பிறழ்வின்" நாயகனின் பிரச்சினை வளர்ந்த பெண்ணுடல்கள் தாம். குழந்தையாக இருக்கையீல் அவர் அத்தகைய பெண்களின் (அம்மா, டியூசன் ஆசிரியை) ஏற்பையே அதிகமும் நாடுகிறார். அவர் நேசிக்கிற பெண்கள் நிதானமாகவும் பொறுப்பாகவும் தம் உணர்ச்சிகளைத் தமக்குத் தேவையானபடி வெளிப்படுத்தி பிறரையும் கையாளக் கூடியவர்களாக உள்ளார்கள் (அவர் நேசிக்கிற - டியூசன் டீச்சரை நினைவுப...

வாசிப்பதும் எழுதுவதும் - செயலின்மையும் செயலும்

வாசிப்பு நம்மூரில் அதிகமும் ரொமாண்டிசைஸ் பண்ணப்படுகிறது. என்னால் அதை ஏற்க முடிவதில்லை. சொல்லப்போனால் வாசிப்பது குறித்து எனக்கு ஒரு குழப்பமான பார்வையே உள்ளது. நான் எப்போதெல்லாம் நிதானமான, சமநிலையுடன் இருக்கிறேனோ அப்போதெல்லாம் எழுத்தில் கவனம் செலுத்துவேன். நான்கைந்து மணிநேரங்கள் எழுதுவேன். மனம் சமநிலையில் இல்லை, ஒரே தவிப்பாக இருக்கிறது என்றால் கன்னாபின்னாவென்று புனைவுகளை வாசிப்பேன். கடந்த சில தினங்களாக அப்படித்தான் என் நாவலை எழுதாமல் புனைவுகளாக வாசித்துத் தள்ளுகிறேன். ஒரு புத்தகத்தை எடுத்து நூறு பக்கங்கள் படித்துவிட்டு இன்னொன்றுக்குள் தாவி அதைவிட்டு மற்றொன்றை வாசித்து முடித்து அடுத்தடுத்து படிக்க வேண்டிய நாவல்களைத் தேர்வு பண்ணுகிறேன். இது ஏன், எப்படி என்று தெரியவில்லை (அதனாலே குழப்பம் என்கிறேன்). நான் நிறைய வாசிக்கிறேன் என்றால் நான் நன்றாக இல்லையென்று அர்த்தம். நான் நிறைய எழுதுகிறேன் என்றால் ஜாலியாக இருக்கிறேன் என்று பொருள். அதனாலே என்னுடைய புத்தக அலமாரிகளை நான் ஒரு மருத்துவமனையாகவே பாவிக்கிறேன். என் எழுதுமேஜையோ என் குத்துசண்டைப் பயிற்சி அறை. ஏனென்றால் வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க...

மனுஷுக்கு வாழ்த்துகள்

  திமுக ஆட்சிக் காலத்தில் சில இலக்கியவாதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பல்வேறு குழுக்களில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. எனக்குத் தெரிந்தே சிறப்பாகச் செயல்பட்டவர்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். (எனக்கு அங்கு நடந்தவற்றில் நேரடியாகத் தெரிந்தது குறைவு என்பதால் சொல்கிறேன்.) அவர்களில் நூலகக ஆணைக் குழுவின் தலைவராக மனுஷ்ய புத்திரன் சிறப்பாகச் செயலாற்றினார் என்று நான் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஊருக்கே தெரிந்த உண்மை அது. குறைவான அதிகாரமும் எல்லையும் கொண்ட சிறிய பொறுப்புதான். அதை வைத்தே என்னவெல்லாம் செய்தார் என்று யோசித்துப் பார்க்க வியப்பாக உள்ளது. நூலக அரங்குகளை கூட்டங்களுக்காகச் சிறப்பாக நடத்தினார். அதற்கு ஒரு எழுத்தாளர் அங்கு பொறுப்பில் இருக்க வேண்டியிருக்கிறது. (இனி பாருங்கள். தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்.) நான் கவனித்ததை மட்டும் சொல்கிறேன்: இன்ஸ்டாவில் மாணவர்களை கவிதை வாசிக்க வைத்தது, அதற்குப் பயிற்சி அளித்தது, எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் அவர்களுடன் தொடர்ந்து உரையாட வைத்தது, கவிதை தினமன்று கூட்டங்கள் நடத்தியது, பல கல்லூரிகளில் பேசி அங்குள்ள அரங்குகளில் கூட்டங்கள் நடத்தி...

இருவிதமான சமூகங்கள்

                                                                           (வெல்பெக்)   பிரஞ்சு நாவலாசிரியர் மிஷல் வெல்பெக்கின் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் (Louisiana Channel). அதில் அவரிடம் எப்படி எழுத்தாளராக முடிவெடுத்தீர்கள் என்று கேட்கிறார்கள். அவர் "எழுத்தாளராவதென்றால் எழுதி ஜீவனம் நடத்த முடிவது. நான் நாற்பது வயதை அடைந்தபோதுதான் என் புத்தகத்தில் இருந்து பணம் வரத் தொடங்கியது. Elementary Particles நன்றாக விற்றது. உடனே என் அலுவலக வேலையை உதறித் தள்ளிவிட்டு எழுத்தாளரானேன். ஆகையால் நான் எழுத்தாளராக வேண்டுமா என்பதை நான் தீர்மானிக்கவில்லை. மக்கள் முடிவெடுத்தார்கள்" என்கிறார். இத்தனைக்கும் வெல்பெக் ஒரு இலக்கிய எழுத்தாளர். பின்நவீனத்துவர். வணிகப் படைப்பாளி அல்லர். இந்த பிரஞ்சு இலக்கியவாதிகளை நினைத்து பொறாமை கொள்ளாமல் இருக்க இயலவில்லை. ஒரு சில ஆண்டுகளிலேய...

சிந்திக்க அனுமதிக்காத சினிமா

  நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கையில் நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் உணர்வுகளையும் தொகுத்துக் கொள்ள அவகாசமொன்றை அது அளிக்கிறது. அதனாலே வாசிக்க வாசிக்க தெளிவாகவும் கூர்மையாகவும் சிந்திக்கிற, நினைத்ததைத் தொகுத்துச் சொல்கிற, பளிச்சென்று முடிவெடுக்க இயல்கிறது. வாசிப்பவர்கள் நினைத்ததை எல்லாம் உணர்வுவயப்பட்டுச் செய்பவர்கள் அல்லர். அதுவே பக்குவம். ஆனால் சினிமா இதை அனுமதிப்பதில்லை. சினிமா நமக்குள் பிம்பங்களையும் ஒலிகளையும் அனுப்பியவாறே இருக்கிறது. இவையே எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் உணர்வுகளாகவும் இருப்பதால் நம்மால் இவற்றைப் பரிசீலிக்க இயல்வதில்லை. அங்கு கற்பனைக்கும் சிந்தனைக்குமான இடம் மிகமிகக் குறைவு. வாசித்து ஒரு சொல் நமக்குள் சென்று அது ஒலியாக, பிம்பமாக மாறி உணர்வாகவோ சிந்தனையாகவோ உருக்கொள்ள சில நுண் வினாடிகள் எடுக்கும். சினிமா அதை அனுமதிக்காமல் ரெடி மேடாக எல்லாவற்றையும் அளிக்கிறது. அதாவது சினிமா பார்க்க நீங்கள் பாமரராக இருந்தாலே போதும். சொல்லப்போனால் 99% வெகுஜனப் படங்கள் உங்களை ஒரு பாமரராகக் கருதியே கதை சொல்கின்றன. நீங்கள் உங்களை அவ்வாறு மாற்றியே ரசிக்க முடியும். தமிழில் வெற்றி ப...

குற்றவுணர்ச்சி இல்லாத 'தலைவர்'

  கரூர் சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். கூட்ட நெரிசடியில் மக்கள் மிதிபட்டு இறக்கிறார்கள். ஒரு நிதானமான, கனிவான மனிதர் தன்னைத் தலைவராகவும் கருதக் கூடியரென்றால் அந்த இடத்தில் இருந்து ஓட மாட்டார். நிலைமையைப் பரிசீலிப்பார். அம்மக்களைக் காப்பாற்றுவதற்கும் மருத்துவ உதவி செய்வதற்கும் தன்னால் ஆனவற்றைச் செய்வார். அடுத்து நடந்த 'விபத்திலோ' 'குற்றத்திலோ' தன் பங்கு என்னவென யோசிப்பார். கூட்டம் நடந்த இடத்தைத் தேர்ந்ததிலோ அளித்ததிலோ தவறுகள் இருக்கலாம். ஆனால் கூட்டம் அதிகமாவதை அறிந்ததும் அதை சரிவர ஒழுங்குபடுத்துவதும் கூட்டம் அதிகமானால் அவர்களைப் படிப்படியாக வெளியேற்றி விபத்தைத் தவிர்ப்பதும் ஒரு ஒருங்கிணைப்பாளரின் பொறுப்பு. ஆக எப்படிப் பார்த்தாலும் விஜய்க்கு அதில் பங்குண்டு. அவர் தன்னால் நேரடியாக அது நிகழவில்லை என நினைத்தாலும் கூட அவருக்கு அதில் பங்குண்டு எனும்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். இதயத்தில் இருந்து சிந்திப்போர் அப்படியே இருப்பர். ஆனால் விஜய் ஒரு வித்தியாசமான மனிதர் - சிலருக்கு இயல்பிலேயே பிறரிடத்தில் தன்னை வைத்துப் பார்த்து இரங்குகிற, வருத்தப்படுகிற திறன் இருக்...

மூன்று மாநில தோல்விகள் சொல்வதென்ன?

  மே.வங்கத்தில் மமதா பேனர்ஜியின் தோல்வி என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே நான் பல வங்காளிகளிடம் பேசி வருகிறேன் (மாணவர்கள், சக-ஊழியர்கள், எழுத்தாளர்கள்). யாருமே மமதா மீது ஆதரவு நிலையில் இல்லை. ஒரு பிரபலமான தலைவரை எப்படி மக்கள் வெறுக்க முடியும் என எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதுவும் பாஜகவுக்கு சரியான முட்டுக்கட்டை போடும், அதிரடி கருத்துக்களை வைக்கும் கட்சி அவர்களுடையது என்பதால் அவர்கள் மீது தமிழ்நாட்டில் ஒரு நேர்மறையான பார்வையே இருக்கும். ஆனால் சொந்த ஊரில் அப்படி இல்லை. வளர்ச்சியின்மை, ஊழல், வாரிசு அரசியல், வளர்ச்சியற்ற ஏற்றத்தாழ்வான எல்லா மாநிலங்களிலும் தோன்றும் அராஜக கும்பல்களின் வளர்ச்சி, வன்முறை, குற்றங்கள் அங்கும் உண்டு. வங்க அடையாளப் பெருமிதம் மட்டுமே மமதாவை இத்தனை நாட்கள் காப்பாற்றியது என்பது என் பார்வை. இப்போது மக்கள் தாங்க முடியாத இடத்துக்கு நகர்ந்துவிட்டார்கள். அடுத்து பல லட்சம் சிறுபான்மை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செயது. சுமார் 5% மமதா ஆதரவு வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள் என்று யோகேஷ் யாதவ் அண்மையில் ஒரு நேர்முகத்தில் சொன்னார், கட்டுரைகளில...

தனிப்பெரும்பான்மை ஆட்சிக்கும் தமிழ்நாட்டின் துணிச்சலுக்கும் வைக்கப்பட்ட வேட்டு

  இம்முறைகள் த.வெ.க பெற்றுள்ள இடங்கள் தற்காலிகமான எழுச்சியாக மட்டும் இருக்க இயலாது. வழமைபடி திமுக வென்றால் அவர்கள் கூட்டணி 150-160 என்றும், அதிமுக கூட்டணி 50-60 என்றும் பிரிந்துவிடும். மீத இடங்களே மூன்றாவது அணியினருக்கு. இப்போதோ விஜய் இரண்டு கட்சிகளிடம் உருந்து 70–40 என்று இடங்களைப் பறித்துவிட்டார். இனி வரும் தேர்தல்களில் அவர் மீதான வசீகரம் குறைந்தாலும் அவர் கட்சியை அப்போது நன்றாக வளர்த்திருப்பார் என்பதாலும், மக்களில் ஒரு பகுதியினரின் நம்பிக்கையைப் பெற்றிருப்பார் என்பதாலும் ஒட்டுமொத்தமுள்ள 234 தொகுதிகளை மூன்று கட்சிகளும் பிரித்துக் கொள்ளும் நிலை ஏற்படும். களம் அப்படி மாறிவிட்டால் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெற்று வலுவான ஆட்சி அமைக்க இயலாது போகும். எதிர்காலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். கூட்டணி ஆட்சி, தொங்கு சட்டமன்றம், கட்சிகள் உடைவது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல - குடும்ப நல நீதிமன்றத்தில் வக்கீல்கள் உடைத்து விளையாடுவதைப் போல ஒன்றிய அரசு மாநில அரசை வைத்து விளையாடும். இரு கட்சி ஆதிக்கம் அதைச் சுலபத்தில் அனுமதிக்காது, ஆகையால் விஜய்யின் இந்த வலுவான ...

ஜோக்கர்களை ஆதரிக்கத் தேவையில்லை

பொதுமக்கள் நினைப்பதையும் நம்புவதையும் எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் நினைக்கவோ நம்பவோ ஏற்கவோ அவசியமில்லை. கடந்த சில வாரங்களாகவே இத்தகைய ஒரு தரப்பு வாதத்தை நான் பார்க்கிறேன் - எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மக்களின் உணர்வுகளில் இருந்து விலகி நிற்கிறார்கள், அது ஒரு தவறு என்று. நிச்சயமாக இல்லை. அப்படி அவர்கள் நிற்பதே சரி என நினைக்கிறேன். மக்களின் போக்குகளைப் புரிந்துகொள்வது வேறு அதை விமர்சிக்காமல் ஏற்பது வேறு. பின்னது வெகுஜன வணிகப் படைப்பாளிகள், ஊடகவியலாளர்களின் குணம், இலக்கு. அவர்கள் வெகுஜனத்தைப் பயன்படுத்தி சம்பாதிப்பவரக்ள். எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் வெகுமக்கள் போக்கிற்கு எதிராகவோ விலகியோ நின்று சிந்திப்பவர்கள். தேர்தலை கணிப்பதோ தேர்தலை வழிநடத்துவதோ அவர்கள் பணியல்ல. தோற்கும் கட்சியைக் கூட அவர்கள் ஆதரிக்கலாம். அரைநூற்றாண்டுக்கு மேலாக இடதுசாரிகள் ஆட்சியில் இல்லாதபோது கூட இடதுசாரி ஆதரவாளர்களாக இருந்த எழுத்தாளர்கள் இல்லையா? கடுமையான அராஜகவாதிகளாகவும் படைப்பாளிகள் இங்கு இருந்திருக்கிறார்கள். அதுவே சரி. பொதுமக்களிடம் அனுபவத்தின் திரட்சியான ஞானம் இருக்கும். ஆனால் பகுத்தறிவோ கருத்துக்களை அ...