முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ஷாட் ஓக்கேவா?" எனும் கொடூர ஆட்சி

 நாட்டின் நடக்கும் குற்றங்களின் மொத்தப் பழியையும் தவெக ஆட்சி மீது சுமத்தக் கூடாது என்பதை ஏற்கிறேன். குற்றங்களை மொத்தமாகத் தடுப்பது அல்ல, குற்றங்களில் இருந்து அடிப்படையான பாதுகாப்பளிப்பதும், குற்றங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதான நம்பிக்கை அளிப்பதும்தன அரசின் பணிகள். அதாவது ஒரு கட்டமைப்பும் அதற்கான நடைமுறையும் உள்ளதாகக் காட்டுவதற்கே அரசும் அமைச்சரவையும் முதல்வரும் இருக்கிறார்கள். சூலூர் சிறுமியின் கொலைச் சம்பவத்தில் காவல்துறை வேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்தது பாராட்டத்தக்கது. காவல் அதிகாரிகள் எப்படி ஊடகங்களிடம் பேசினார்கள், எவ்வளவு சீரியஸாகத் தெரிந்தார்கள் என்பது முக்கியமல்ல. அது optics.

அதேநேரம், தவெக அரசு மேற்சொன்ன opticsக்காகத்தான் அக்குழந்தையின் சடலத்தை அவசரமாக எரித்தார்கள். தாயிடம் கூடக் காட்டாமல் அநீதி இழைத்தார்கள். குழந்தையின் தாய் ஆவேசமாகப் பேட்டியளித்ததும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதும் ரூட்ஸ் மீடியாவை கலங்க வைத்துவிட்டது. குழந்தையின் சடலத்தை வைத்து எதாவது ஊர்வலம் போவது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வந்து துக்கம் விசாரிப்பது, அறிக்கை விடுவதெல்லாம் நடந்து குழந்தையைக் கூட பாதுகாக்க வக்கில்லாத அரசு என்பதான தோற்றம் வந்துவிடுமோ என பந்துவிட்டார் ஜான். உடனே அவர் தன் கட்சியின் ஜோம்பிகளை அழைத்து அத்தாயின் ஒழுக்கத்தைக் கேள்வி கேட்கும்விதமாக காணொளிகளையும் பின்னூட்டங்களையும் பதிவேற்ற வைத்தார். கதையாடலை அப்பெண்ணுக்கு எதிராக மாற்றினார். இது அவரைக் கொஞ்சம் அச்சுறுத்தி வைக்கவும்தான். கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதும் சங்கீதா தரப்பை இப்படித்தான் தரங்கெட்டு விமர்சித்தார்கள். இது அவர்களின் வழமையான உத்தி. அவர்களுக்குத் தேவை தம் ரீல்ஸ் அடிப்படையிலான பிம்பத்துக்கு பாதகம் வராதிருப்பது. அப்படி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்படிச் சிந்திப்பதில் வியப்பில்லை.
விஜயண்ணா ரொம்ப தாமதமாக ஒரு அறிக்கை வெளியிட்டதும், போனில் பெற்றோரிடம் பேசியதாக செய்தி வந்ததும் அவர் வேறொரு லோகத்தில் இருக்கிறார், ஆட்சியை அவர் பொருட்டு வேறு யாரோ செய்கிறார்கள் என்பதால்தான். வியூக வகுப்பாளர்களே வழக்கு விசாரணையில் முடிவெடுக்கிற விசித்திர ஆட்சியை இப்போதுதான் பார்க்கிறேன்.
ஒரு நல்ல ஆட்சியில் எதிர்க்கட்சியின் விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தையும் பெற்றோரையும் ஆறுதல் சொல்வார்கள். சடலத்தை அவசரமாக எரிக்காமல், பெற்றோரை அவமதிக்காமல் நடைமுறையை நிகழ அனுமதிப்பார்கள். மக்கள் குற்றவாளியின் கைதினால் அமைதி கொள்வார்கள் என நம்புவார்கள். இச்சம்பம் இந்த ஆட்சி ஒரு புள்ளியில் நிலையாக இல்லை, அது எல்லாவற்றையும் ஊடக மேலாண்மையாகப் பார்க்கிறார்கள்,அதைக் குறித்தே அதிக கவலை கொள்கிறார்கள் எனக் காட்டுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...