நியூஸ் 18 சேனலின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து குணசேகரன் விலகுகிறார் எனும் செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன் . ஹசீப் முகமதைப் போன்றே இவரும் பதவி விலக வற்புறுத்தப்பட்டாரா அல்லது வேறு என்ன நடந்தது எனத் தெரியவில்லை . ஹிந்துவின் என் . ராம் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல நியூஸ் 18 நிர்வாகத்துக்கு இவர்களை நீக்கும்படி தில்லியில் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே நேரடியாக ஆணை வருகிறது . அதாவது சில சமூக நோக்கும் நேர்மையும் கொண்ட ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெரிக்க கால்கள் நமது ஜியின் வரவேற்பறையில் இருந்து நீள்கின்றன . முதலில் ஹசீப் முகமதுக்கு என்ன நடந்தது என அறிவோம் . இப்போது குணசேகரனுக்கும் அது நடக்கிறது . வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இந்துத்துவாவை எதிர்த்துப் பேசும் அனைத்து நெறியாளர்களும் வெளியே அனுப்பப்பட வேண்டும் எனும் திட்டம் அவசரமாய் நிறைவேற்றப்படுகிறது . விகடன் போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தவர்களுக்கும் இது நடந்தது . உயிர்மை இணையதளமும் பேஸ்புக்கில் பகிரப்படக் கூடாது என இவர்களால் முடக்கப்பட்டது . இதன...