பல்லவிக்கு இன்று பிறந்த நாள். அதை ஒட்டி சில சிந்தனைகள். அவளுடைய வருகை என் வாழ்வில் நிறைய ஒளியைக் கொண்டு வந்துள்ளதை உணர்கிறேன். இந்த ஆண்டும் அவள் அவ்வாறே இருக்க வேண்டுமென விரும்புகிறேன். நானும் அவளும் இருவேறான மனநிலைகளும், ஆளுமைகளும் கொண்டவர்கள் - எனக்கு என் நாவல் எழுத்து ஒழுங்காக நடந்தால் மட்டும் போதும். அவளுக்கு பல சின்ன விசயங்கள் ஒழுங்காக நிகழ வேண்டும். எனக்கு இத்தெளிவு உள்ளதால் வேறெதைக் குறித்தும் கவலையில்லை. வயதாகிறதா? நல்லது. இன்னும் சில பத்தாண்டுகள் கடுமையாக தினமும் எழுத்தில் உழைத்தால் போதும். எழுதும் திட்டங்களை நிறைவேற்றி விட்டுச் செத்தால் போதும். இதற்கு அப்பால் யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பொருட்டில்லை. என் பணம், வேலை, சூழல் குறித்து அக்கறையில்லை. சுவற்றில் ஒரு ஆணியை அடித்து ஒரு படத்தைத் தொங்க விடுவோமே அதுதான் நான். என் ஆணி என் நாவல் எழுத்து. பல்லவி ஒரு பட்டம். அவளுக்கு எப்போதும் பறக்கிற ஒரு குதூகலமும், விழுந்துவிடுவோமே எனும் பயமும் உண்டு. அவளுடைய அணுகுமுறையில் ஒரு அனுகூலம் பல்வேறு சின்னச்சின்ன மகிழ்ச்சிகள் இருக்குமென்பது. எனக்கு நேரடி உலகில் அனைவருடனும் இணங்கிச் ...