Skip to main content

கமல் தவற விட்ட வாய்ப்பு

 


விஜய் என்னதான் ஒரு கோமாளித் தலைவர் என்றாலும் அவர் தன் கட்சியை ஆரம்பித்தது முதலே வைத்த 'பிட்ச்' எனக்குப் பிடித்திருந்தது. (அவருக்கு வியூகம் வகுத்துக் கொடுத்தவர்கள் விளம்பர நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.) ஏரியல், சர்ப் எக்ஸல் விளம்பரங்களில் கறைதான் 'ஒரே ஒரு எதிரி'. விஜய்க்கு ஸ்டாலினே ஒரே எதிரி. இன்னும் சொல்லப்போனால் அவர் திமுக என்றுகூட கூட முயலவில்லை. தொடர்ச்சியாக ஸ்டாலின் சார் என்றே பேசிப்பேசி தன்னை அவருக்குச் சமமாக பாவித்துக் கொண்டார். என்னதான் அவர் பாஜகவை விமர்சிக்காதது சிலருக்குப் பிரச்சினையாகத் தெரிந்தாலும் அதுவும் ஒரு நல்ல உத்திதான் எனத் தோன்றுகிறது - இது மாநிலத் தேர்தல். இங்கு பாஜகவைத் தாக்கிப் பேசினால் அதற்குத்தான் திமுக இருக்கிறதே என்று மக்கள் யோசிப்பார்கள். திமுக பாஜகவுக்குப் பணிந்து விட்டார்கள் (ஒருவேளை நம்புவார்கள்), நானே பாஜகவின் ஒரே எதிரி என்றால் நிச்சயமாக நம்ப மாட்டார்கள். தொடர்ந்து ஊழலை முன்னிலைப்படுத்தியது, அதுவும் ஸ்டாலின் ஊழல் செய்கிறார் என்று அதை ஹைலைட் செய்தது, அதிகமாக வரி வாங்குவதாக, அவரது ஆட்சியினால் விலைவாசி அதிகரித்துவிட்டது என்றது மக்களிடம் நேரடியாகப் போய்ச் சேரும் நோக்கில்தான். எனக்கு அவரது இந்தப் பாணி ஜெயலலிதாவின் பிரச்சார பாணியை நினைவுபடுத்தியது. கிட்டத்தட்ட ஜெயலலிதா இருந்தால் பேசுவதைதான் விஜய்யும் பேசுகிறார். விஜய்க்காக செலவு செய்யும் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட எல்லா சேனல்களையும் வளைத்துப் போட்டுவிட்டார்கள். ஏன் ஆங்கிலச் சேனல்களுக்கும் காசு கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

இத்தனைக்கும் ஒரு கொந்தளிக்க வைக்கும் பிரச்சினை (76-இல் கலைஞர் மீதான 'விஞ்ஞானபூர்வ ஊழல்' குற்றச்சாட்டு, ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணம், தலைவர்களின் அகந்தையான நடத்தை) என ஒன்றுமே இல்லை. ஆனாலும் அப்படி இப்படிப் பேசி ஒரு பிரச்சாரப் போரை நடத்தி முடித்துவிட்டார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது கமல் ஏன் இதை கடந்த தேர்தலில் செய்யவில்லை என்பதே. கமல் தன் தேர்தல் பிரச்சாரம் முழுக்கவே உண்மையில் யாரை எதிர்க்கிறார் என்பதே தெளிவாக இருக்கவில்லை. யாரையும் பேரைச் சொல்லிக் குறிப்பிட்டு இலக்காக்காமல் கொள்கை ரீதியான தூய்மைவாத பிம்பத்தை உருவாக்கி அரசியல் செய்ய முயன்றார். அந்த 'பிட்ச்' தவறாகிப் போயிற்று. இன்று விஜய்க்கு அமைந்ததை விட மிகச்சிறந்த வாய்ப்புகள் அன்று கமலுக்கு இருந்தது. ஆளுங்கட்சி தடுமாறியது. ஜெயலலிதா சந்தேகத்துக்குரிய முறையில் மரணமடைந்திருந்தார். ஒன்றிய அரசு அதிமுக மீதேறி சவாரி செய்தது. ஸ்டாலின் தன்னை நிரூபித்திருக்கவில்லை. அவர் தன் தொகுதியில் வென்றிருக்கவும் முடியும், பாஜகவுக்கும் சீமானுக்கும் போன வாக்குகளை ஹைஜேக் பண்ணி கூடுதல் சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கவும் முடியும். ஆனால் விஜய்க்கு இருப்பதைப் போன்ற தெளிவான இலக்கு அவருக்கு இருக்கவில்லை. அவர் அத்தேர்தலை ஒரு தற்காலிகப் புரோஜெக்டாகப் பார்த்தார் என நினைக்கிறேன். திமுக ஜெயித்ததும் படம் நடிக்கப் போனார். திமுகவிடம் கட்சியை ஒப்படைத்து எம்.பி சீட் பெற்று அங்கும் உடன்பிறப்பாகவே பேசினார். இவ்வளவு செய்துவிட்ட பின்னர் இத்தேர்தலில் அவர் எப்படி கட்சிக்கு தொகுதிகள் கேட்டுப் பெற முடியும்? கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தற்கு சிறந்த சமகால உதாரணமாக 'மையம்' மாறியது.
கமலை அப்படி திமுக வளர்த்து விடுமா என்ன? அமுக்கி விடுவார்கள். அதுதான் நடந்தது. நான் ஆரம்பத்தில் விஜய்யும் தேர்தலுக்குப் பின் உதய்யின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் பன்ணுவார், திமுகவிடம் சேர்ந்து அவர்களுக்காகப் பிரச்சாரம் பண்ணுவார் என்று நினைத்தேன். ஆனால் இதற்கு மேல் அவர் அதையெல்லாம் செய்ய மாட்டார் எனத் தோன்றுகிறது. அவரது எதிர்காலத்தைக் கணிக்க இயலவில்லை என்றாலும் அவர் தனியாக நின்று இப்படியான கோமாளித்தனங்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார் எனத் தோன்றுகிறது. அடுத்து வரும் ஆட்சியையும் இப்படியே அவர் விமர்சித்து நகைச்சுவை பண்ணிக் கொண்டிருந்தால் அவர் தன்னைத் தக்க வைப்பார்.
இந்தக் கூத்துக்களின் நடுவே கமலை நினைத்தால்தான் பாவமாக உள்ளது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...