முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார்.

ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன். சட்டை பேண்ட் போட்டாலும் இவர்கள் மனதுக்குள் சின்னக் கவுண்டர், பெரிய தேவர்கள் தாம். உடம்பைப் பார்க்கிறான், வெட்டுறா கையை, ஊர்விலக்கம் பண்றா, இதாண்டா பஞ்சாயத்து தீர்ப்பு வகையறா தான். 

கவனித்துப் பாருங்கள், பாலியல் குற்றச்சாட்டுகளில் சட்ட நடவடிக்கையை விரும்பவோ ஊக்குவிக்கவோ மாட்டார்கள். (நான் கோணங்கி பிரச்சினையில் சட்டநடவடிக்கையையே கோரினேன்.) ஆனால் மற்ற குற்றச்சாட்டுகளில் ஏன் போலீஸ் எப்.ஐ.ஆர் போடவில்லை, ஏன் கைது பண்ணவில்லை எனக் கேட்பார்கள். பாலியல் அத்துமீறலை மட்டும் சட்டப்பிரச்சினையாகப் பார்ப்பதில் இவர்களுக்கு சிரமம் உள்ளது. மனம் பாலியலில் அலைபாய்ந்து கொண்டே இருக்கும், பாலுடல் எப்போதும் பாதுகாப்பற்றது எனும் பயம் ஒரு பஞ்சாயத்து மனநிலையை இவர்களுக்குள் உருவாக்கி தக்க வைக்கிறது. இதுதான் எந்த ஆண் எந்த பெண்ணுடன் பேசுகிறான் என கவனித்துக் கொண்டே இருக்க வைக்கிறது. மீ டூ எனும் நவீன கட்டப்பஞ்சாயத்தை இந்த நிலப்பிரபுத்துவ மனநிலையின் பாசாங்கான முற்போக்கு வெளிப்பாடு எனக் காட்டவே நான் ஒரு தனி புத்தகத்தையே எழுதினேன். பாலியல் குற்றங்களை  அந்தரங்கக் குற்றமாக அன்றி திருட்டு, அடிதடி, செயின் பறிப்பு, மோசடி எனும் அளவில் சாமான்யமாக கருதப் பழக வேண்டும். அப்போதே அக்குற்றங்கள் குறையும். ஒழுக்கப் பிறழ்வு, அந்தரங்க களங்கம் எனப் பார்க்கப் பார்க்க குற்றம் செய்ய மறைமுக ஊக்கமாகவே அது முடியும்.
இம்முறை பெண்ணுடலில் இருந்து ஆணுடலுக்கும் கண்காணிப்பை நீட்டித்திருக்கிறார்கள். அதை மட்டுமே என்னால் 'பாஸிட்டிவ்வாக' பார்க்க முடிகிறது. 
 இந்த மீடியா கட்டப்பஞ்சாயத்து அரசியலை தமிழ் ஹிந்து முன்னெடுப்பது கண்டிக்கத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...