Skip to main content

Posts

Showing posts from March, 2026

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இந்தியாவின் டி20 உலக்கோப்பை வெற்றி 2026 - சில எண்ணங்கள்

ஒருதலைப்பட்சமாக இப்போட்டி மாறியதற்கு ஆடுதளம் முக்கியமான காரணம். கடந்த 12 ஆண்டுகளாகவே அகமதாபாத் மைதானத்தின் ஆடுதளத்தில் டி20 இன்னிங்ஸின் ம்ட்டையாட்ட சராசரி 165-175தான். கறுப்பு மண்ணால் ஆன ஆடுதளம் சற்று மெத்தனமாக, பவுன்ஸ் குறைவாக இருக்கும். நியுசிலாந்து அதற்காகவே தயாராகி வந்தார்கள். அதனாலே அது ஒரு இறுதிப் போட்டிக்கு ஏற்றதாக இருக்காது என நினைத்தேன். இம்மாதிரி கோரிக்கைகள் ஆடுதளத் தயாரிப்பாளரிடமும் சென்றிருக்கும். ஆகையால் அவர் செம்மண்ணும், கறுப்பு மண்ணும் கலந்த ஒரு ஆடுதளத்தைத் தயாரித்தார். அதில் பந்துக்கு ஓரளவுக்கு வேகமும் பவுன்ஸும் இருந்தது. பந்து பழையதானதும் ரொம்பவே நின்று வந்தது. அதாவது ஆரம்பத்தில் செம்மண்ணும், கடைசிப் பகுதியில் கறுப்பு மண்ணும் தத்தம் வேலைகளைச் செய்தன. இந்தியாவின் ஆரம்பத்திலேயே குண்டு மழை பொழியும் ஆட்டபாணி இதற்குத் தோதாக இருந்தது. கறுப்பு மண் தன் வேலையைச் செய்ய ஆரம்பித்தபோது நம் ஸ்கோர் 15வது ஓவரில் 203ஆக இருந்தது. இதுவே 120ஆக இருந்திருந்தால் நம்மால் 160-170தான் எடுக்க முடிந்திருக்கும். நியுசிலாந்து பெங்களூர் டிராபிக்கில் நகர்ந்து நகர்ந்து பைக் ஓட்டி சிக்னலை வெறித்துப் பா...

புரவி இலக்கியக் கூடுகை 3

  புரவியில் நான் கலந்து கொண்ட இரண்டாவது கூடுகை. கடந்த சனியும் ஞாயிறும் ஒசூரில் உள்ள தேன்கனிக்கோட்டையில் ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்ட ஆசிரமத்தில் நடந்தது. கோடையின் வறட்சி என்னுடைய ஆற்றலையும் உலர வைத்தாலும் மிகுந்த உற்சாகமான இரு நாட்களாக அது அமைந்தது. நான் முதல் நாள் தாமதமாகப் போனதாலும், இரண்டாவது நாள் தாமதமாக எழுந்ததாலும் இரண்டு அமர்வுகளைத் தவற விட்டேன். நான் கலந்து கொண்ட அமர்வுகளில், குறிப்பாக சூழலியல், சிறார் இலக்கியம் ஆகியவற்றில், பலவற்றைக் கற்றுக் கொண்டேன். இம்மாதிரிச் சந்திப்புகளும் கலந்துரையாடல்களும் சூழலில் இருந்து நிறைய உத்வேகத்தை உறிஞ்சிக் கொள்ள, என் அகத்தின் மின்கலத்தை மின்னேற்ற உதவும். அதனால்தான் சிரமம் பார்க்காமல் போவது அவசியம் என நினைத்தேன். அவ்வாறே நடந்தது. இன்னொரு விசயம் நான் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் என் நாவலில் நாயகனின் மனைவியின் பாத்திரம் வருகிறது. அவளது பின்னணியை, பாத்திர வார்ப்பை மாற்ற முடிவெடுத்தேன். அவ்வாறே கதையிலும் சில மாற்றங்கள் செய்தேன். இது கதைக்கு புதிய ஒரு பரிமாணத்தை அளித்தது. ஆனாலும் அதன்பிறகு அவளது பெயர் அவளது காலகட்டத்துக்குப் பொருத்தமாக இல்லைய...

வருண் சக்கரவர்த்தியின் தடுமாற்றம்

  வருண் சக்கரவர்த்தியை எதிரணி மட்டையாளர்கள் அடித்துப் பிளப்பதைப் பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. இந்த உலகக்கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா நமக்கெதிராக டி20 தொடரை ஆடினார்கள். அப்போதே இதற்கான முயற்சியை தொடங்கினார்கள். ஆனாலும் அப்போது வருண் கொத்துக்கொத்தாக விக்கெட்டுகள் எடுத்ததால் அவர் அடிவாங்கியது பெரிதாகத் தெரியவில்லை. இந்த உலகக்கோப்பையிலோ வருணுக்கு விக்கெட்டுகளும் விழவில்லை. அவர் வந்ததுமே சிக்ஸர்களாக அடிக்கிறார்கள். அவர் முகமும் பார்க்க ஏதோ வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட அப்பாவி மாணவனைப் போல மாறிவிடுகிறது. அணித்தலைவர் சூரியகுமாரால் இந்த ஆட்டப்பகுதியைக் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை, விக்கெட் எடுப்பதும் அசாத்தியமாகிறது. பும்ரா, அர்ஷதீப்பை சீக்கிரமாகக் கொண்டு வந்தால் இறுதி ஓவர்கள் பாதிக்கப்படும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா போவதால் இந்த ஒரு முக்கியமான கண்ணி அறுபட்டதும் தடுமாறுகிறோம். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இ தீவுகள் ஆகிய அணிகள் எல்லாமே மத்திய ஓவர்களில் அதிக ரன் அடித்தது இதனால்தான். வருண் சக்கரவர்த்திக்கு என்னவாயிற்று? அவரது புதிர்மை ...

டி20 உலகக்கோப்பை 2026: இறுதிப் போட்டி மைதானத்தின் அவலம்

  இறுதிப் போட்டியையும் மும்பை வான்கேடில் நடத்தினால் செமையாக இருந்திருக்கும். ஆனால் குஜராத்தின் அழுது வடியும் ஆடுதளத்தில்தான் ஆடப்போகிறார்கள். பாஜக ஆள்வதால் எல்லா இறுதிப் போட்டிகளையும் அங்குதான் நடத்த வேண்டும் எனப் பிடிவாதம் பிடிப்பது சரியல்ல. அந்த மைதானத்தின் ஆடுதளம், அங்குள்ள விளக்குகளின் அமைப்பு, தொலைவான எல்லைக்கோடுகள் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு ஏற்றவை அல்ல. பந்து மட்டையாளருக்கு வராது, விளாசினாலும் சிக்ஸர் வராது, விளக்குகளின் அமைப்பினால் களத்தடுப்பின்போது கேட்ச் பிடிப்பது சிரமம். கோழிக்கோடு கெட்டி அல்வாவில் ஈ சிக்கிக் கொண்டதைப் போலத்தான் அங்கு பந்தும். அது மைதானத்தை விட்டு வெளியே சுலபத்தில் போகாது. எல்லாம் தலையெழுத்து!

டி20 உலகக்கோப்பை 2026 - அரை இறுதி

நேற்று இந்தியா-இங்கிலாந்து போட்டிதான் இந்த உலகக்கோப்பையின் மிகச்சிறந்த போட்டி என்பேன். புலன்களால் உணரக் கூடிய திகிலை அந்த ஆட்டம் தந்தது. அதுவும் பெத்தல் தன்னந்தனியாக தன் அணியை மீட்டுக் கொண்டு வந்து சதமடித்தது, 14வது ஓவருக்குப் பிறகு நிதானித்து கடைசி வரை கொண்டு வந்தது எனக்கு பழைய சச்சினை நினைவுபடுத்தியது. ஜாக்ஸுக்குப் பிறகு சாம் கரனை அனுப்பியது ஆட்டத்தை நிதானப்படுத்தி கூட்டணியை உருவாக்க உதவியது என்றாலும் அது ஒரு எதிர்மறையான முடிவே. அவர்கள் அதற்குப் பதிலாக ஓவர்ட்டனை அனுப்பி 5 பந்துகளில் 15 அடிக்கக் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் டாஸன், ஆர்ச்சர் எல்லாருமே சிக்ஸர் அடிக்கக் கூடியவர்கள்தாம். சாம் கரன் பெத்தல் மீது அழுத்தத்தை அதிகப்படுத்தி விட்டார். பெத்தல் இளைஞர். சதம் அடித்தபின்னர் அவர் மீதான நெருக்கடி அதிகரித்தது. அந்த முக்கியமான சந்தர்பத்தில் இங்கிலாந்து எடுத்த முடிவுதான் இந்தியாவை திரும்ப போட்டிக்குள் வர அனுமதித்தது. அதன்பிறகு பும்ரா, அர்ஷ்தீப், ஹர்த்திக் இங்கிலாந்தின் கழுத்தை நெரித்தார்கள். நியாயமாக பெத்தலுக்கும் பும்ராவுக்கும் இணைந்தே ஆட்டநாயகன் விருதைக் கொடுத்திருக்க வேண்டும். பிரமாத...

ராஜேஷ் குமார்

  "சாய் வித் சித்ராவில்" வணிக நாவலாசிரியர் ராஜேஷ் குமாரின் நேர்முகத்தைப் பார்த்தேன். எனக்கு அவரது நாவல்கள் பிடிக்காது என்பதை முதலிலே சொல்லி விடுகிறேன். அவை வணிகப் படைப்புகள் எனபதால் அல்ல. லாஜிக் கன்னாபின்னாவென்று இருக்கும். அதைப் பற்றி யோசிக்க அவகாசம் கொடுக்காதபடி கதையை வேகமாக நகர்த்துவார் என்பதால். ஆனால் இந்த நேர்முகத்தைப் பார்த்தபோது அவர் ஏன் அப்படி எழுதுகிறார் என்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடிந்தது. அவரிடம் ஒருவிதமான குழந்தைமை உள்ளது. எதையும் மிக மிக நேரடியாகப் புரிந்துகொள்கிறார். குழந்தைகளிடம் சாமியிடம் வேண்டினால் எதைக் கேட்டாலும் கொடுக்கும் என்று சொன்னதும் நம்புமே ராஜேஷ் குமாரும் அம்மாதிரி யோசிக்கிறவரே. ஒரு கருத்தை, உணர்வு வெளிப்பாட்டை அதன் மறைமுகமான சாத்தியங்களைப் பரிசீலிப்பவரோ நேரடியாக வெளிப்படாவற்றைத் (unmanifested) தேடுகிறவரோ அல்லர் அவர். மொழி விளையாட்டுகளும் அவரிடம் அதிகம் இருக்காது. அதேநேரம் ரொம்பத் தீவிரமான உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கிறவரோ எழுதுகிறவரோ அல்லர். எளிய நேரடியான விதிமுறைகளின் படி ஆடப்படும் விளையாட்டுதான் அவரது நாவல்கள். அவ்விளையாட்டுதான் அவரது வாழ்க...

பாதி பாலத்தைத் தாண்டியதன் பிரச்சினைகள்

கடந்த முறை பாகிஸ்தானை இந்தியா முறியடித்தபோதும் இது நடந்தது - ஏதோ உலகத்தையே வென்றது போல மக்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடினார்கள். ஊடகங்களும் அதை ஊக்கப்படுத்தின. இது இந்திய அணியின் அடுத்தடுத்த ஆட்டங்களின் தரத்தை பாதித்தது. அவர்கள் கவனம் சிதறியவர்களாகவும், அதிக அழுத்தத்தினால் தடுமாறுகிறவர்களாகவும் தோன்றினார்கள். அரை இறுதிப் போட்டியை நாம் அடைகிற இத்தருணத்திலும் அத்தகைய கொண்டாட்டங்களின் மிகையை நோக்கிச் செல்கிறோம். இதுவும் நம்மை பாதிக்கும் என்றே நம்புகிறேன். ஆகையால் இது நல்லதல்ல. மிகையை விட மட்டுப்படுத்தப்பட்ட கொண்டாட்டங்களே ஏற்றவை. தொடர்ச்சியாக சஞ்சு சாம்ஸன் உலகையே வென்றுவிட்டதாக நாம் பாவிப்பது, அந்த உணர்வை மிகைப்படுத்துவது அவரை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளும். நம் அணி வீரர்கள் அதிகமாக சமூக வலைதளங்களைப் பின் தொடர்கிறார்கள். நாம் ஏன் ஒன்று முடியும் முன்பே அது நிறைவுற்றுவிட்டதாகப் பாவித்து கொண்டாட ஆரம்பிக்கிறோம்? இது என்ன மாதிரி மனநிலை? இதை நான் முன்பு கண்டதில்லை? இதற்கு சமூகவலைதளங்கள் மட்டுமே காரணமா? இல்லை, சமூகவலைதளங்கள் இந்தப் போக்கின் வெளிப்பாடு மட்டுமே. வெவ்வேறு சமூகக் காரணிகள் நம்மை இந்...