முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு கவிதை வாசிப்புப் பயிலரங்கு



ஒரு தோழி நவீன கவிதை வாசிக்க நான் கூட இருந்தேன். அவர் படிக்கப் படிக்க தன் அபிப்ராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் "உங்களுக்கு இன்னும் சரியாகப் படிக்கத் தெரியவில்லை. ஒரு கவிதையில் உடனடியாகத் திறந்து கொள்ளாத பல தளங்கள் இருக்கும். கற்பனையால் விரிக்க வேண்டிய இடங்கள் இருக்கும். கற்பனையில் கண்டதைத் தெளிவாகச் சொல்லவும் ஒரு மொழி இருக்கிறது. இதை முறையாகக் கற்றுக் கொள்ளலாம்." என்று சொன்னேன். அவர் எப்படி என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா தோன்றியது. ஏன் இதை ஒரு இணையப் பயிலரங்காக நடத்தக் கூடாது? அதில் அவரைக் கலந்துகொள்ளச் சொல்லிவிட்டேன்.

என்னுடைய திட்டம் ஐந்து பகுதிகளாக தலா 45 நிமிடப் பயிலரங்குகள். 45 நிமிடம் முடிந்ததும் 15 நிமிடங்கள் கேள்வி-பதில். கவிதைக்கு பெரிய சந்தை மதிப்பில்லை என்பதால் கவிஞர்கள், கவிதை வாசகர்களிட கட்டணம் வாங்குவதில் அர்த்தமில்லை. ஆகையால் இது முழுக்க இலவசம்தான். நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கிறேன்.

ஏற்கனவே கவிதை எழுதுவதற்கான வகுப்புகளை நடத்தி இருக்கிறேன். ஆனால் இது அப்படியானது அல்ல. என் நோக்கம் இங்கு கவிதையெழுதச் சொல்லித் தருவதல்ல. வாசிப்பதற்கு உதவுவதும், வாசித்ததைப் பற்றிக் குறிப்பெழுதவும் பேசவும் கற்றுத் தருவதுமே. சில வகுப்புகளில் இடுபணிகள் இருக்குமென்பதால் வகுப்பில் பேசவும் தரப்பட்ட பணியை ஈடுபாட்டுடன் செய்யவும் விருப்பமுள்ளவர்கள் மட்டுமே வந்தால் போதும்.

இதில் எத்தனை பேர்களுக்குக் கலந்துகொள்ள விருப்பமோ கமெண்டில் தெரிவியுங்கள். தொடுவழியை நாளைப் பகிர்கிறேன். நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...