Skip to main content

Posts

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சும்மா விளையாட்டுக்கு...

செய்யறிவைப் பயன்படுத்தி ஒரு சிறிய விளையாட்டை உருவாக்கினேன். ஆங்கில வாக்கிய அமைப்பைக் கற்பதற்கான மிக எளிய விளையாட்டு இது. சொற்களைச் சரியான வரிசையில் சொடுக்கினால் கதையின் முதல் வாக்கியம் வரும். இப்படி அடுத்தடுத்து வாக்கியங்களை உருவாக்கினால் மொத்த கதையும் கிடைக்கும். இதை ஒரு கால்பந்து விளையாட்டாக உருவாக்கக் கேட்டேன். பிராம்ட் கொடுப்பது எளிதுதான். ஆனால் இது இலவசச் செய்யறிவு என்பதாலே ஏனோ தொடர்ந்து பல்வேறு தவறுகளைச் செய்தது. ஒவ்வொன்றாகத் திருத்தி இறுதி வடிவத்தை உருவாக்க நேரம் பிடிக்கிறது. ஆனால் நல்ல அனுபவம். நீங்களும் முயன்று பார்க்கலாம். என்னுடைய ஆசை கதையமைப்புக்குப் பயிற்சி அளிக்கும் விளையாட்டு ஒன்றை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் என்பது. ஒரு சம்பவம், அதை அடுத்து சில விருப்பத் தேர்வுகள். சரியானதைச் சொடுக்கினால் கதை அடுத்த கட்டத்துக்குப் போகும். இப்படி 8-10 மையக் காட்சிகளை உருவாக்கினால் மொத்த கதையும் வர வேண்டும். பயனர் இதை விளையாடி கதையின் அமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும். நிரலாக்கம் தெரிந்தவர்களால் இன்னும் சிக்கலான கதையமைப்பு விளையாட்டுகளை உருவாக்க இயலும். மற்றவர்களுக்கு எளிமையான விளையா...

நரேட்டிச் செட்டிங் - ஊடகங்களின் தன்னழிவுப் பாதை

  இன்று ஊடகங்கள், குறிப்பாக செய்தி ஊடகங்கள், ஒருவித தற்கொலைப் பாதையில் போய்க் கொண்டிருக்கின்றன. மக்களுக்குச் செய்தியில் ஆர்வமுள்ளது. ஆனால் அவர்களுக்கு பொய்ச் செய்திகளில் விருப்பதில்லை. பொய்ச் செய்தி என்றால் பிரச்சாரம். பொய்ச்செய்தி என்றால் நரேட்டிவ் செட் செய்வது. என்னைப் பொறுத்தவரையில் இதுதான் இன்று செய்தி ஊடகங்களை உள்ளிருந்து அரிக்கிறது. நமது பெரும்பாலான விவாதங்களைப் பாருங்கள் - அவை ஒன்று ஆளுங்கட்சிக்காகப் பிரச்சாரம் செய்ய உத்தேசிக்கப்படுபவை. அல்லது மூன்றாவது அணிக் கட்சிக்காக நரேட்டிவ் செட் செய்பவை. சிலநேரங்களில் ஆளுங்கட்சியில் உள்ள கூட்டணிக் கட்சியினரை உடைப்பதற்காக நடத்தப்படுபவை. ஒரு சின்ன வட்டத்துக்குள் நடக்க வேண்டிய அதிகாரப் பகிர்தலுக்கான சமூக அழுத்தத்தை ஏற்படுத்த இன்று விவாதங்கள் நடத்தப்படுகின்றன, அரசியல் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. மக்கள், குறிப்பாக இளைஞர்கள், வெளிப்படையாகவே இதைப் பற்றிப் பேசுவதை பொதுவிடங்களில் கேட்கிறேன். இந்தச் சேனல் ஆளுங்கட்சி உடையது, அது பாஜகவின் சேனல், இது விஜய்யின் சேனல். இதைவிட பெரிய அவமானம் இல்லை. கேட்க சொப்பன சுந்தரி ஜோக் நினைவு வந்தது. இன்று இத்'த...

ஆச்சரியப்படுத்தும் அஸோஸியேட் அணிகள்

  தற்போது நடந்துவரும் (ஆண்கள்) டி20 உலகக்கோப்பையில் அஸோஸியேட் அணிகள் பெரிய ஓட்டலுக்கு வெளியே பெரிய கூட்டத்துடன் ஆரவாரமாக நடக்கும் நடைபாதைக் கடைகளைப் போல கலக்குகின்றன. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா நன்றாகவே ஆடியது, இன்றைய போட்டியில் நமீபியாவும் ஆச்சரியப்படுத்துகிறது. இந்த அணிகள் முன்பு இருந்ததைப் போல மாத இறுதியில் தொப்பையைத் தள்ளிக்கொண்டு ஜாலியாக ஆடும் சல்லிசான அணிகள் அல்ல. நல்ல ஊதியத்துடன் அந்தந்த நாட்டு அரசுகள் தரும் தரமான நிதி ஒதுக்கீடு, தரமான உள்கட்டமைப்புடன் தயாராகின்றன. அத்தோடு இப்போது நேபாளத்தில் கூட தனியார் கிரிக்கெட் லீக் நடக்கிறது. கன்னாபின்னாவென லீக் தொடர்கள் பெருகிவிட்டன. அங்கு நல்ல பயிற்சியும் அனுபவமும் இந்த அஸோஸியட் அணி வீரர்களுக்குக் கிடைக்கிறது. கடைசியாக, டி20 வடிவமே பெரிய தடபுடல் அணிகளையும் அனுபவமற்ற புதிய அணிகளையும் கிட்டத்தட்ட சமப்படுத்தி விடுகிறது. கொஞ்சம் அனுபவமும் நாசூக்கும் இருந்தால் அவர்களால் இந்த உலக்கோப்பையிலே கூட சில போட்டிகளை வென்றிருக்க முடியும். ஐ.ஸி.ஸியும் இந்த அணிகளுக்குப் போதுமான வாய்ப்புகள் அளித்து கிரிக்கெட்டை உலக விளையாட்டாக்க தீவிரமாகவே முயல்கி...

Mother Mary Comes to Me

  இதைப் படிக்கையில் ஏற்பட்ட முதல் எண்ணம் இப்புத்தகத்தை அருந்ததி ராய் இப்படி எழுதியிருக்கக் கூடாது என்பது. இது ஒரு சுயசரிதை. தனக்கும் அவரது அம்மாவுக்குமான உறவை முன்வைத்து தன் வாழ்க்கையை எழுதுகிறார் அருந்ததி ராய். பயங்கர வெளிப்படையாக எழுதுகிறார் என்று சொல்ல முடியாது - அன்னையின் பிம்பம், அவரை மையமிட்டு எழுதுவதால் வரும் தயக்கம் தோளில் தட்டி எச்சரிக்கும் சமிக்ஞையாக அவருக்கு இருந்திருக்க வேண்டும். எதைச் சொன்னாலும் அது தன்னை நோக்கி மட்டும் வராது எனும் உணர்வு அவரைத் தடுக்கிறது என நினைக்கிறேன். ஆகையால் யாரையும் காயப்படுத்தலாகாது எனும் ஜாக்கிரதை அவரது எல்லா பக்கங்களிலும் தெரிகிறது. தன் அன்னையைக் குறித்த ஆழமான அலசலும் இல்லை. அன்னையைக் குறித்த ஒரு உணர்ச்சிகரமான நிலைப்பாட்டை ஆரம்பத்திலேயே எடுப்பதால் அதை மீறிப் போய் எதார்த்தமாக அவரைக் காண ராயால் முடிவதில்லை எனத் தோன்றுகிறது. இதன் பலம் 'கேட்க' இனிமையான ராயின் நடை. மனத்தின் லயங்களுக்கு வடிவம் கொடுப்பதைப் போன்ற வாக்கிய அமைப்புகள். கவிதைக்கு அருகில் வருகிற நளினமும் மென்மையும் கொண்ட பல பகுதிகள். அதாவது இது 'கவித்துவம்' அல்ல. மொழியின் கவித...

'கௌரவக்' கொத்தடிமைகளின் பிரச்சினை

  ஒரு மளிகைக் கடை முன்பு ஒரு சின்ன டிரக்கில் இருந்து மூட்டைகளை ஒருவர் சுமந்து உள்ளே எடுத்துப் போய்க் கொண்டிருந்தார். மூங்கில் போன்ற மனிதர். சிக்ஸ் பேக் வைத்திருந்தார். இரண்டிரண்டு மூட்டைகளாக அநாயசமாக கமல் ஶ்ரீதேவியை உப்புமூட்டை எடுப்பதைப் போல தூக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். மொத்தமாக முப்பது மூட்டைகளுக்கு மேல் இருக்கும். சும்மா ஒரு மூட்டைக்கு இத்தனை என்று பார்த்தால் அந்த அரைமணியில் அவர் 600-700 ரூபாய் சம்பாதிப்பார் என்று தோன்றியது. ஒருநாளைக்கு 1000-2000 வரை சம்பாத்தியம் வரும். எனக்கு இதைக் குறித்து யோசித்தபோது தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரியில் உள்ள கௌரவ விரிவுரையாளர்களின் கூலிப் பிரச்சினை நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு மாதச் சம்பளம் 27,000. ஒரு வகுப்புக்கு ரூ 300 என்று கேள்விப்பட்டேன். அதாவது மூட்டை தூக்குபவரை விடக் குறைவான சம்பளம். சென்னையில் பிச்சைக்காரர்கள் சராசரியாக ஒருநாளைக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு காணொளி பார்த்தேன். அவர்கள் இந்த கௌரவப் பேராசிரியர்களை விட அதிகமாகச் சம்பாதிக்கிறார்கள். ஒருவர் மூட்டை தூக்க உடல் வலு மட்டும் போதும். ஆனால் விரிவுரையாளராக முனைவர்...

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...