முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...

சினிமாவும் சர்வாதிகாரமும்

  அரசியலை கேடுகெட்டதாகக் காட்டி மக்களாட்சியே படிக்காத முரடர்கள், திருடர்கள், ரௌடிகளின் ராஜ்ஜியம்தான் எனச் சித்தரித்ததில் பெரும் பங்கு இந்திய வெகுமக்கள் சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் (குறிப்பாக ஆக்‌ஷன் படங்கள்) உண்டு. அதேநேரம் இவர்களுக்கு எதிர்நிலையில் அதிகாரிகளையும் (ஐ.ஏ.எஸ்) காவல் அதிகாரிகளையும் படித்த இளைஞர்களையும் சினிமா வைத்தது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீய சக்தி vs தூய சக்தியானமக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார வர்க்கம், இளைஞர் திரள். இந்த தூய சக்தியின் முக்கியமான குணம் அது தன்னெழுச்சியாகச் செயல்படவும், அதிகாரத்தைக் கொண்டோ வன்முறையின் வழியாகவோ தீய சக்தியைக் கட்டுப்படுத்துவார்கள் என்பது. இந்தத் தூய சக்தியை நாம் அப்படியே நீட்டித்தால் அரசியலற்ற அதேநேரம் அதிகாரமிக்க ஒரு வர்க்கம் வருகிறது. சினிமாவில் இவர்களை எப்போதும் அதிகாரத்தில் விளிம்பில் இருப்பவர்களாகவும் இவர்கள் கொந்தளித்தால் அதிகாரத்தின் மையத்தை அடைந்து கோட்டையைப் பிடிப்பார்கள் என்றும் காட்டுவார்கள். இவர்கள் யாரைக் குறிப்புணர்த்துகிறார்கள் புரிந்துகொள்ள நாம் இவர்களுக்கு எதிர்நிலையில் உள்ளவர்கள் (தீய சக்தி) எ...

ஒரு எளிமையான கேள்வி

  தேர்வுத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்கள் நடத்திய நாடு தழுவிய போராட்டத்திற்கு வெற்றி. ஒன்றிய அமைச்சர் பிரதான் ராஜினாமா பண்ணிவிட்டார். இப்போது கேட்போம்: மாணவர்கள் தம் வலிமையைக் காட்ட முடிந்தது, மாணவர்கள் முன் மோடி அரசு பலவீனமாகத் தோன்றியது, பாஜக எதிர்ப்புக் குரல் அதன் நிர்வாகக் கோளாறைப் பொறுத்தமட்டில் நாடு முழுக்க ஒலித்தது என்பதைத் தாண்டி இந்தப் போராட்டங்களின் நேரடிப் பயன் என்ன? ஒன்றுமில்லை. இந்த ஜென் ஸீ போராட்டம் ஜென் ஸீத்தனமாகவே - அதாவது சுயநலமாகவே - அமைந்தது. அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது ஒரு பக்கம் நேரடிப் பயனற்றது எனில், போலீஸை ஏவி விட்டு அடித்தமைக்காக எங்களிடம் அரசு மன்னிப்புக் கோர வேண்டும், எங்கள் மீது இடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், எங்கள் மீது எதிர்காலத்தில் வழக்குப் போட மாட்டீர்கள் என்பதற்கு உத்தரவாதம் வேண்டும் என முழுக்க முழுக்க தம்மைக் குறித்தே இருக்கிறது. மற்றவர்களுக்காக என்ன கேட்டார்கள்? உணர்ச்சிகளையும் தன்னலத்தையும் கடந்து என்னவுள்ளது? ஒன்றுமில்லை. நம் ஊரில் பெருங்கூட்டத்தைப் பார்த்தாலே கருத்துச் சொல்வோருக்கு பயமாகிறது. நாம் கூட்டத்துக்கு ஆதரவாக ம...

பீட்ஸா, பர்க்கர் புரட்சி

  எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படாமல் கொஞ்சம் நிதானமாக யோசிப்போம். கரப்பான்கள் தம்மை எதிர்க்கட்சிகளிடம் இருந்து விலக்கி வைத்துக் கொண்டு இதை ஒரு மாணவர் பிரச்சினையாக மட்டும் மாற்றினார்கள். அப்போதும் கூட இப்பிரச்சினையைத் தடுப்பதற்கான அமைப்புசார் மாற்றங்களை அவர்கள் கோரவில்லை. அரசே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கட்டும் என விட்டுவிட்டார்கள். அவர்களுடைய பெரும்பாலான கோரிக்கைகள் தம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதே. இதுதான் முக்கிய கோரிக்கை என்றால் போராடாமலே இருந்திருக்கலாமே. அடுத்து, அமைச்சர் பிரதானின் ராஜினாமா. அவருக்கு இன்னொரு பொறுப்பைக் கொடுத்துவிட்டு அவரைப் போன்ற அல்லது அவரைவிடக் கேவலமான ஒருவரை அமைச்சராக பாஜகவுக்கு எவ்வளவு நேரமாகும்? கடைசியாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கான இழப்பீடு. இதை மட்டும் கேட்டிருந்தால் அதை அரசு ஆரம்பத்திலேயே கொடுத்திருக்கும். பிரதானின் ராஜினாமா ஒரு உணர்ச்சிகரமான நாடகத்தை அரங்கேற்ற மட்டுமே உதவியது. அடுத்து இதை ஒரு தண்டனையாக எடுத்துக் கொள்ளலாமா? அதாவது பிரதான் நேரடியாக ஊழலில் ஈடுபட்டார், இத்தனை நூறு கோடிகளைச் சம்பாதித்தார் என்று கோர முடியுமா? அதற்கான ஆதாரம்...

இவரை அமைச்சராக்கத்தான் போராடினீர்களா?

  கரப்பான் பூச்சிகள் போராடி பதவி நீக்கம் செய்த பிரதானுக்குப் பதில் கல்வி அமைச்சராகப் போகிறவர் பிரல்ஹாத் ஜோஷி. இவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? 90களின் துவக்கத்தில் ஹுப்பாலி இத்கா மைதானத்தில் 'தேசியக் கொடி ஏற்றுகிறோம்' எனும் பெயரில் இஸ்லாமியர் அம்மைதானத்தை தம் பிராத்தனைகளை நடத்துவதைத் தடுக்க முயற்சி எடுத்தவர். இவர் முன்னின்று நடத்திய கலவரங்களில் ஆறு பேர்கள் கொல்லப்பட்டார்கள். நூறு பேர்களுக்கு மேல் காயம்பட்டார்கள். இதனால் அப்பகுதி கர்நாடகாவின் மினி அயோத்தியா என அழைக்கப்படுகிறது. அப்போது துவங்கி எதாவது ஒரு இஸ்லாமிய வழிபாட்டு விவகாரத்தை வைத்து பாஜக கர்நாடகத்தில் கலவரம் பண்ணி வருகிறார்கள். அண்மையில், இவர் கர்நாடகாவில் இஸ்லாமிய ஆண்கள் இந்துப் பெண்களை ஏமாற்றிக் கல்யாணம் பண்ணுவதாக, லவ் ஜிகாத் பண்ணுவதாகக் குற்றம் சாட்டினார். இவரது சகோதரர், சகோதரி உள்ளிட்டோர் ஒரு முன்னாள் எம்.எல்.ஏவிடம் தேர்தலில் போட்டியிட இடம் பெற்றுத் தருவதாகக் கூறி ரெண்டு கோடிக்கு மேல் வாங்கி ஏமாற்றிவிட்டனர். அவர் வழக்குத் தொடுத்ததும் ஜோஷி தனக்கும் தன் சகோதர சகோதரிக்கும் சம்மந்தம் ...

குடும்பமும் ஆண்களின் அரசியல் நீக்கமும் - ஆர் அபிலாஷ்

  நவீன நடைமுறைகள் அடிப்படையிலேயே பாசிசத்தன்மை கொண்டவையாக உள்ளன; சமூக நடைமுறைகள் பெரும்பாலும் நேரடியானவை. ஆனால் நவீன தேசங்களின் நடைமுறைகளோ ஆட்டத்தின் விதிமுறைகளை ஒரு தரப்புக்குச் சார்பாக எழுதிவிட்டு மறுதரப்பை ஆட அழைப்பவை. பெயருக்கு மட்டுமே சமத்துவம், குமுத்துவம் எனப் பேசுவார்கள். திருமணமோ விவாகரத்தோ முன்பு உறவினரும் ஊராரும் கூடிப் பேசி இணைத்து வைப்பார்கள்; சரியாக வரவில்லை என்றால் ஒரு பேரத்திற்கு, சமரசத்திற்கு உட்பட்டுப் பிரித்து விடுவார்கள். பலரும் முறையாகப் பிரியாமலே வேறு இணையருடன் வாழ ஆரம்பித்து அப்படியே தொடர்வார்கள். சொத்திலும் உற்பத்தியிலும் பங்கில்லாத பெண்கள் தம் உறவினரைச் சார்ந்து வாழும் அவலம் ஏற்பட்டது. இஸ்லாத்தில் இது இன்னும் முற்போக்காக இருக்கும் (ஆனால் நவீன விவாகரத்துச் சட்டத்தின்படி வழக்கு நடத்தும் இஸ்லாமியரோ அலைந்து திரிந்து அவமானப்பட்டு துன்புறுகிறார்கள்). இன்றும் ஏழை எளியோர் மட்டுமே பழைய முறைப்படி எளிதாகப் பிரிந்து நிம்மதியாக வாழ்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே குடும்ப உறவைச் சட்டத்துக்குள் கொண்டு வரும் மேம்போக்கான முயற்சி தொடங்கியது என்றாலும் இந்தியா சுதந்திரம்...

கரப்பான்களின் இந்துப் பெரும்பான்மைவாதம்

  கரப்பான் பூச்சிக் கிளர்ச்சியைப் பொறுத்தவரையில் பரவலாகப் பேசப்படாத ஒரு விசயம் இஸ்லாமியரின் இன்மை. இக்கிளர்ச்சி பெரும்பாலும் இந்துப் பெரும்பான்மை இளைஞர்களால் ஆனதாகத் தோன்றியது. மதநல்லிணக்கமோ மதசார்பின்மையோ வலியுறுத்தப்படாதது. சிறுபான்மையினர் நலன் ஒரு விழுமியமாக முன்னிறுத்தப்படாதது. இது என்னதான் தேர்வுத்தாள் கசிவு குறித்தப் போராட்டம் என்றாலும் பிரதான போராட்ட வெளிக்கு வெளியே ஒரு பக்கம் மோடி எதிர்ப்பு, கேலி, பகடி, கொண்டாட்டம் என விரிவடைந்தது. இன்னொரு பக்கம் ஜெய் பீம் என தலித் விடுதலைப் பரிமாணமும், பாரத் மாதா கீ ஜெய் என இந்துப் பெரும்பான்மைவாத தேச பக்திக் கோஷங்களும் எழுப்பப்பட்டன. சிறுபான்மையினரின் இல்லாமையை நாம் இக்கிளர்ச்சியின் கொண்டாட்டத்தில் கவனிக்கவில்லை என்பதே ஒருவிதத்தில் இத்தேசத்தின் போதத்தில் உள்ள 'இந்துப் பெரும்பான்மையே இந்தியா' எனும் கிறக்கத்தைக் காட்டுகிறதோ எனும் சந்தேகம் எழுப்புகிறது. இல்லாவிட்டால் இதைப் பலரும் சுட்டிக் காட்டி விமர்சித்திருப்பார்களே. இந்து + இந்தியா - பாரதம் என்பதே அசலான இந்தியா எனும் கட்டமைப்பை இக்கிளர்ச்சி மறைமுகமாக ஏற்றுக் கொண்டது ஒருவிதத்தில் இதன் ...