முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முதலையுடன் டின்னர் பார்ட்டி

ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதன் மீதான அதிகாரமும் கட்டுப்பாடும் புதிய முதலாளித்துவ சக்திகளிடம் போகும். அவர்களிடம் நன்றி காட்டாவிடில் அக்கட்சியால் நீடிக்க இயலாது. ஆகையால் தாம் கொண்டு வரும், தம்மிடம் ஆதரவு கேட்டு நிதி தரும் சிறிதும் பெரிதுமான நிறுவனங்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள் புதிய கட்சிக்காரர்கள். கன்னாபின்னாவென கட்டணத்தை உயர்த்தி தனியார் பேருந்து முதலாளிகளைச் சம்பாதிக்க தவெக அரசு கண்மூடித்தனமாக அனுமதிப்பது இதற்குத்தான். இம்மாதிரி 'ஒப்பந்தங்கள்' தேர்தலுக்கு முன்பே முடிந்திருக்கும். சரியான கொள்கையோ இலக்கோ இல்லாமல் மக்கள் வாக்களிக்கும்போது இப்படித்தான் அவர்கள் கைமாற்றி புதிய முதலாளிகளுக்கு ஆட்டு மந்தையாக விற்கப்படுகிறார்கள். அல்லது பழைய முதலாளிகள் புதிய அரசைப் பணிய வைக்க இயல்வதால் அவர்களிடம் நேரடியாக மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இது தவெகவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல நேபாளத்திலும் ஒரு ரேப்பரை (பாலேந்திர ஷா) ஜென் ஸீயும் மத்திய வர்க்கமும் ஆதரவு கொடுத்து பிரதமர் ஆக்கியபோதும் நடந்தது. பல முடிவுகளை அவர் மக்கள் விரோதமாக எடுத்தார். எதிர்த்துப் போராடிய மக்களை காவல்...

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் இரு இடதுசாரி கட்சிகளிடமும் சில கேள்விகள்

1) தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்துக்கும், பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத்துக்கும் எதிராகப் போராட்டம் பண்ணுகிறீர்கள். அரசு உங்களைத் துளியும் பொருட்படுத்துவதில்லை. அதே நேரம், நீங்கள் ஆதரவைத் திரும்ப பெறுவோம், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடில் எனச் சொன்னால் இறங்கி வருவார்கள். அதைச் செய்யாமல் நீங்கள் ஏன் பம்முகிறீர்கள்? 2) அரசின் முடிவில் தலையிடக் கூடாது, ஆனால் அறிவுறுத்துவோம், விமர்சிப்போம், போராடுவோம் என்றால் என்ன மாதிரி ஆதரவு நடவடிக்கை இது? 3) உங்கள் நோக்கம் பெயருக்குப் போராடுவதா அல்லது அரசின் மீது அழுத்தம் போட்டு மக்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதா? பின்னது எனில் உங்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டை நீங்கள் ஏன் எடுப்பதில்லை? 4) பாஜகவின் ஆளுநர் ஆட்சி வரக் கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகச் சொல்கிறீர்கள். ஆனால் தவெக அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்காரர் ஒருவரே சட்டத்துறை அமைச்சராக உள்ளார். பாஜகவை விமர்சித்து ஒரு சொல்லைச் சொல்லக் கூட தவெகவினர் தம் கூட்டணிக் கட்சி அமைச்சரை அனுமதிப்பதில்லை. சபாநாயகர் உடனே நேரடியாகத் தடை போடுகிறார். அமித் ஷா வந்ததும் விஜய...

இன்று சற்று உயர்ந்துவிட்ட நிலையில் டபிள்யூ ஹெச் ஆடன் தமிழில் ஆர். அபிலாஷ்

  பனிமலைக்கு அப்பால், சிற்றோடைச் சரளைக்கற்களுக்கு மேல் ஓடுகிற  காற்று நுழையாத பழத்தோட்டத்தில் சேர்ந்து நடந்த இதே போன்ற மாலைகளை நினைத்துப் பார்க்கிறோம், இன்று சற்று உயர்ந்து விட்ட நிலையில், இரவுகள் வரும் பனியைச் சுமந்து; தனித்தச் சாலைகளில் எதிரி மிகுதியான எளிய வினாக்களைத் தொடுக்கிறான் என்பதால் மரித்தவர் ஊளையிடுவர் நிலக்கூம்புகளில் கடுங்காற்றடிக்கும் தமது உறைவிடங்களில் இருந்து ஆனால் இப்போது ஆனந்தமே, இருவரும் அருகருகில் இல்லையெனினும், பள்ளத்தாக்கில் வழியெங்கும் பண்ணைகள் ஒளிர்வதைப் பார்க்கிறோம்; சம்மட்டியடி நிற்கிறது கீழே ஆலைக் கொட்டகையில் வீடு திரும்புகிறார்கள் பணியாளர்கள் அத்தோடு. விடியலில் சப்தங்கள் கொண்டு வரும் சுதந்திரத்தைச் சிலருக்கு, ஆனால் இந்த அமைதியை அல்ல எப்பறவையும் மறுதலிக்க முடியாது: தற்காலிகமெனினும் இங்கே இதோ, இப்போதைக்குப் போதுமானது ஏதோ ஒன்று நிறைவேறியது இந்நேரம், விரும்பியோ சகித்துக் கொண்டோ. (மார்ச் 1928) ஆங்கில மூலம்: Taller To-day - W. H Auden Taller to-day, we remember similar evenings, Walking together in a windless orchard Where the brook runs...

ஒற்றன் - டபிள்யு ஹெச் ஆடன் தமிழில் ஆர். அபிலாஷ்

  அவனுக்குத் தெரிந்தது , கணவாயின் மீதான கட்டுப்பாடே , இப்புதிய மாவட்டத்திற்கான துருப்புச்சீட்டு , ஆனால் யார் அதைப் பெறுவர் ?   பயிற்சி பெற்ற ஒற்றனான அவன் ஒரு சூழ்ச்சிக்கார வழிகாட்டியின் பழைய தந்திரங்களால் மயக்கப்பட்டு ஒரு பொறியில் போய் விழுந்துவிட்டான் . கிரீன்ஹெர்த்தில் ஒரு அணை அமைப்பதற்கான அருமையான இடம் இருந்தது அத்தோடு , ரயில் நிலையங்களைச் சற்று அருகே அமைக்க முயன்றிருந்தால்   மின்தொடர்பும் எளிதாகி இருந்திருக்கும் . அவர்கள் அவனது சேதிகளை உதாசீனித்தனர் : பாலங்கள் கட்டப்படவில்லை ; தொல்லை வருகிறது .  வாரக்கணக்காய் பாலைவனத்தில் வருந்திக் கிடந்தவனுக்கு கனிவாகத் தொனிக்கிறது தெருவோர இசை . இருளில் ஓடி மறையும் நீரினால் எழுப்பப்படும் அவன் தான் ஏற்கனவே கனாக் கண்ட சகிக்காக அடிக்கடி நிசியைப் பழித்திருக்கிறான் . அவர்கள் சுடத்தான் போகிறார்கள் ,  ஒரு போதும் இணைந்திராத எளிதில் இருவரைப் பிரிக்கும் வகையில் . ( ஜனவரி 1928)   ஆங்கில மூலம் :   The Secret Agent - W.H Auden Cont...

எனக்குச் சொல்லத் தெரிந்தால் - டபிள்யு ஹெச் ஆடன் தமிழில் ஆர். அபிலாஷ்

நான் தான் சொன்னேனே என்பதைத் தவிர காலம் வேறேதும் சொல்லாது. நாம் கொடுக்க வேண்டிய விலையைத் தவிர காலத்துக்கு ஒன்றும் தெரியாது; எனக்குச் சொல்லத் தெரிந்தால் உங்களுக்குச் சொல்கிறேன். கோமாளிகள் வேடிக்கை காட்டும்போது நம்மால் அழ முடிந்தால், இசைக்கலைஞர்கள் இசைக்கையில் நம்மால் தடுமாற முடிந்தால், காலம் ஒன்றும் சொல்லாது நான்தான் சொன்னேனே என்பதைத் தவிர … அடிக்கும் காற்று எங்கிருந்தோ தானே வர வேண்டும், இலைகள் அழுகிட காரணங்கள் இருக்கத்தானே வேண்டும், காலம் ஒன்றும் சொல்லாது நான்தான் சொன்னேனே என்பதைத் தவிர … ஒருவேளை சிங்கங்கள் எல்லாம் எழுந்து கிளம்பினால், நீரோடைகளும் போர் வீரர்களும் ஓடிப் போனால்; காலம் நான்தான் சொன்னேனே என்பதைத் தவிர ஒன்றுமே சொல்லாதா? எனக்குச் சொல்லத் தெரிந்தால் உங்களிடம் சொல்கிறேன். ஆங்கில மூலம்: “If I Could Tell You” - WH Auden Time will say nothing but I told you so. Time only knows the price we have to pay; If I could tell you I would let you know. If we should weep when clowns put on their show, If we should stumble when musicians play, Time will say nothing but I told you so. . . . T...

காப்காவின் நாட்குறிப்புகள்

அங்கங்கே புரட்டிப் படிக்க ஏற்ற புத்தகம். காப்காவின் நாவல்கள், சிறுகதைகளைவிட வாசிக்க எளியவை அவரது நாட்குறிப்புகள். படித்துக் கொண்டு வந்தபோது சில விசயங்கள் ஆச்சரியப்படுத்தின: 1) தொனி - இதில் வழக்கமான காப்காத்தனமான இருண்மை, அச்சம், நிலைகுலைவில் இருந்து ஒளியை நோக்கிச் செல்கிறவரின் சுழலில் சிக்கிக் கொண்ட குழப்பம், அவநம்பிக்கை இல்லை. உருவகத்தன்மை குறைவு. விளையாட்டுத்தனம், பகடி, காமம் பீறிடும் இடங்கள், ஒழுங்கீனம், மீறல் சார்ந்த அசூயை, பிரிட்டீஷ் படைப்பாளிகளிடம் நாம் காண்கிற அடங்கின தொனியிலான கேலி, கிண்டல், மிகை மீதான பகடி உண்டு. இதனாலே இது நிஜமாகவே காப்காதானா எனஆரம்பத்தில் தோன்றும். ஆனால் போகப் போக இந்த எண்ணம் மாறும். 2) அந்நியமாதல் - காப்கா தன் நாவல்களில் அலுவலகம், நீதிமன்றம், குடும்பம், அதிகாரத்துவ அமைப்புகள் ஆகிய நிறுவனங்களிடம் நவீன மனிதர் அந்நியமாவதை, அதன் நகைச்சுவையை, அவலத்தைப் பேசினார். இக்குறிப்புகளில் பெரும்பாலும் தனிநபர்களிடத்து அவர் அந்நியமாக உணரும் பல சந்தர்ப்பங்கள் வருகின்றன. குடும்பச் சிக்கல்கள், மனைவியுடன் பாலுறவு, நண்பர்களின் நடத்தை, உணவகத்தில் காண நேரும் பருத்த உடல் கொண்ட பெண்...

ரிஸ்க் எடுக்காதபோது எதை இழக்கிறோம்?

டேனியல் கெல்மானின் "இயக்குநர்" நாவலைப் படித்தபோது ஏற்பட்ட முதல் இப்படி ஒரு நாவலை யாராவது தமிழில் எழுதியிருந்தால் என்னவாகி இருக்கும்? ஒன்றும் ஆகியிருக்காது. பெரிய சலனங்கள் எழுந்திருக்காது. ஐரோப்பாவிலும் ஆங்கிலத்திலும் இந்நாவல் பெரிதாக விவாதிக்கவும் பாராட்டவும் படுகிறது. புக்கர் குறும்பட்டியலில் நுழைந்திருக்கிறது. இவ்விதத்தில் ஐரோப்பிய படைப்பாளிகள் அதிர்ஷ்டசாலிகள். இந்தியாவில் பிறந்து இந்திய மொழிகளில் எழுதுவது பிறக்கும் முன்னே இறப்பதற்கு சமானமானது. அடுத்து இத்தகைய நாவலைத் தமிழில் எழுத வாய்ப்புண்டா எனக் கேட்போம். குறைவே. பொதுவாக தமிழில் நாம் நிறைய ஆராய்ச்சி செய்து வரலாற்றுத் தகவல்களைச் சேகரித்து நாவல் எழுதுவதில்லை. தமிழில் நவீனத்துவ காலம் முதற்கொண்டே உள்ள இலக்கியப் போக்கு ஒருவரது தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதுதான். வெகுஜன நாவல்களில் உள்ள போக்கு அரசர்களை தமிழ்தேசிய அடையாளமாக, சாகசக்காரர்களாக, சாதனையாளர்களாகச் சித்தரிப்பது, அவர்களை நம்மூர் தேசியத் தலைவர்களுடன் இணைவைக்கும்படியாக எழுதுவது(நேரு-இந்திரா - "கல்கியின் பொன்னியின் செல்வன்"...