டிவீஷா ஷர்மா எனும் நடிகையின் கொலை வழக்கு குறித்த செய்தி அறிக்கையை ஹிந்துவில் பார்த்தேன். அதில் "வரதட்சிணைக் கொலைக்கு உள்ளாகும் மகள்கள்" எனும் தொடரை தலைப்பாக வைத்திருந்தார்கள். இத்தகைய குற்றங்களைக் கண்டிக்கும் அதே சமயம் இதைக் குறித்த ஒரு சட்டத்திருத்தம் இன்று அவசியமென்றும் வலியுறுத்த வேண்டியுள்ளது - கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக வரதட்சிணை மிரட்டி அழுத்தம் கொடுத்துப் பெறுவதாக இன்று இல்லை. மாறாக பணக்கார குடும்பங்களிலும் மத்திய வர்க்க குடும்பங்களிலும் ஒருசேர 'வரதட்சிணை' சொந்த மகளுக்காக பெற்றோர் கொடுக்கிற சொத்தாக மாறிவிட்டது. பெரும்பாலும் மகள்களே இதைக் கேட்டுப் பெறுகிறார்கள். இன்றைய பெண்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் -அவர்கள் திருமணத்தின்போது வரதட்சிணை வேண்டும் என்று கேட்கிறார்கள். சில டிவி நிகழ்ச்சிகளில் இளம்பெண்கள் வரதட்சிணைக்காக தம் பெற்றோரைத் தொந்தரவு பண்ணி கடனுக்குள் தள்ளுகிற சம்பவங்களும் பேசப்பட்டுள்ளன. ஒரே நிபந்தனை அப்பணமும் நகையும் தம் வசம் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். பெற்றோரும் இது தம் மகளுக்கான பாதுகாப்ப...