முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பாவம் ஓட்டேரி நரி

  டிவீஷா ஷர்மா எனும் நடிகையின் கொலை வழக்கு குறித்த செய்தி அறிக்கையை ஹிந்துவில் பார்த்தேன். அதில் "வரதட்சிணைக் கொலைக்கு உள்ளாகும் மகள்கள்" எனும் தொடரை தலைப்பாக வைத்திருந்தார்கள். இத்தகைய குற்றங்களைக் கண்டிக்கும் அதே சமயம் இதைக் குறித்த ஒரு சட்டத்திருத்தம் இன்று அவசியமென்றும் வலியுறுத்த வேண்டியுள்ளது - கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக வரதட்சிணை மிரட்டி அழுத்தம் கொடுத்துப் பெறுவதாக இன்று இல்லை. மாறாக பணக்கார குடும்பங்களிலும் மத்திய வர்க்க குடும்பங்களிலும் ஒருசேர 'வரதட்சிணை' சொந்த மகளுக்காக பெற்றோர் கொடுக்கிற சொத்தாக மாறிவிட்டது. பெரும்பாலும் மகள்களே இதைக் கேட்டுப் பெறுகிறார்கள். இன்றைய பெண்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் -அவர்கள் திருமணத்தின்போது வரதட்சிணை வேண்டும் என்று கேட்கிறார்கள். சில டிவி நிகழ்ச்சிகளில் இளம்பெண்கள் வரதட்சிணைக்காக தம் பெற்றோரைத் தொந்தரவு பண்ணி கடனுக்குள் தள்ளுகிற சம்பவங்களும் பேசப்பட்டுள்ளன. ஒரே நிபந்தனை அப்பணமும் நகையும் தம் வசம் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். பெற்றோரும் இது தம் மகளுக்கான பாதுகாப்ப...

ஐ.பி.எல் watch-along இன்று

குஜராத்துக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது தகுதிச் சுற்றி போட்டியின் முதல் 6 ஓவர்களை என்னுடன் இணைந்து பார்க்க வாருங்கள். நேரலை வர்ணனையும் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில்களும் உண்டு. IPL qualifier 2 Watch-along நேரம் 7: 20 pm

நேசத்தின் அத்தாட்சிகள் - ஆர். அபிலாஷ்

உன்னை வெறுக்கும் தோறும் மேலும் மேலும் நேசிக்கிறேன் நேசிக்கும் தோறும் நீ அந்நியமாகிறாய் தொட்டால் உதிர்ந்து விடும் பூவைப் போல பலவீனமாக இருக்கிறாய் உன்னை முத்தமிட்டு உதிர்த்து விட விருப்பம் கொள்கிறேன் நீ வாடிப் போகும் போது கசியும் வாசனையை உள்ளங்கையில் வைத்து முகர ஏங்குகிறேன் உன் கண்ணீரைத் தொட்டு சுவைக்க அது மெல்ல மெல்ல இனிப்பதை விநோதமாய் வியந்தபடி ரசிக்கிறேன் இரவில் உன் இதயத்துடிப்புகளை கேட்டபடி படுக்கிறேன் நான் தூங்க ஆரம்பிக்கும் போது அவை நின்று போகின்றன திடுக்கிட்டு விழிக்கும் போது அவை படபடவென துடித்தபடி ஒரு விடுபட விரும்பும் பறவையை போல என்னிடம் இறைஞ்சுகின்றன வெகுநேரம் அறியாது ஒரு குழந்தையின் காலை மிதித்து இருந்து விட்டது போல் குற்றவுணர்வு அடைகிறேன். ஒரு பழம் அழுகிப் போன பின் தான் கனிந்து விட்டது என நம்புகிறாய் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு நினைவிழந்த கோழியை அப்படியே தோலுரித்து மெல்ல நுகர்ந்து அதன் சுவை அலாதியானது என்றபடி கழுத்தில் கத்தி வைக்கிறாய் கிழித்து திருகி தண்ணீரில் குருதி கரைவதைப் பார்க்கிறாய் நீ சமைக்கும் எல்லா அசைவப் பொருளிலும் குருதி வாசனை மேலிடுகிறது குருதி தான் உயிரின் வாசனை...

சைவ உணவு எனும் புதிர்

சைவம் மட்டுமே உண்டு வருவோர் வயதானதும் மிகவும் தளர்ந்து போவதை அதிகமாகக் காண்கிறேன். இது போக பல நரம்பியல் சிக்கல்கள், தோல் பிரச்சினைகள், தசையிழப்பினால் வரும் தளர்ச்சியும் ஏற்படுகின்றன. வைட்டமின் பி 12 இல்லாமை, omega-3 fatty acids, particularly eicosapentaenoic acid (EPA) மற்றும் docosahexaenoic acid (DHA) ஆகியற்றின் போதாமையால் இது நிகழும் என்கிறார்கள். இது ஏதோ நான் அரைகுறையாய் கவனித்துக் கண்டுபிடித்தது அல்ல. Impact of Vegan and Vegetarian Diets on Neurological Health: A Critical Review எனும் கட்டுரையில் இதைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள். வீகன் உணவுகள் இன்னும் மோசம் என்கிறார்கள். முக்கியமான காரணம்: நாம் வீடு, கார், பயணம் போன்ற உடைமைகள், வசதிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணவுக்கு அளிப்பதில்லை. ஒருவர் பெரிய வீட்டில் வாழ்வார். வங்கியில் பணமிருக்கும். ஆனால் காலையில் உப்மாவோ இட்லியோ சாப்பிடுவார். வேக வைத்த காய்கறி, முட்டை, சிக்கன், பனீர், சீஸ் எல்லாம் அவருக்கு அதிகச் செலவாகத் தெரியும். அது மட்டுமல்ல சிலர் காரெடுத்துப் போய் வசந்த பவன் போய் இட்லி சாப்பிடுவார்கள். பொங்கலை முழுங்குவ...

என்னுடைய watch-along மற்றும் கிரிக்கெட் வர்ணனை அனுபவம்

என்னால் தொடர்ச்சியாக ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே வர்ணிக்கவும் நுட்பங்களை விவாதிக்கவும் இயலுமா என ஒரு சந்தேகம் இருந்தது. டிவி வர்ணனையில் அவர்கள் விடாமல அரைமணிநேரம் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கும். ஆகையால் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயலலாம் எனும் நோக்கத்திலே நேற்று watch-along செய்தேன். இரண்டு விசயங்கள் ஆச்சரியப்படுத்தின - 1) 20 ஓவர்களும் இடைவிடாமல் வர்ணிப்பது கூட கடினம் அல்ல. அதுவும் கூட ஆளிருந்தால் அது ஒரு விசயமே அல்ல. 2) சும்மா உட்கார்ந்து ஆட்டத்தைப் பார்ப்பதைவிட இது ரொம்ப இன்பமான அனுபவமாக இருந்தது. செயலூக்கத்துடன் கிரிக்கெட் பார்க்க முடிந்தது. ஆட்டம் அலுக்கும்போது கவனம் சிதறும். பார்க்கப் பிடிக்காது. ஆட்டத்தை அலசுவதால் அலுப்படையும் இடங்களையும் உற்சாகமாகக் கடக்க முடிந்தது. இது ஒன்றும் கடுமையான வேலை அல்ல. டிவி வர்ணனையாளர்கள் பெரிய திரை முன்பு அமர்ந்து அவர்களுக்கு தொடர்ச்சியாக தரவுகளை அளிக்கும் அணியினரின் உதவியுடன், சக வர்ணனையாளருக்கு ஈடுகொடுத்துப் பேசுவார்கள். அது மட்டுமே வித்தியாசம். இணையம் இம்மாதிரி சின்னச்சின்ன பரிசோதனைகளைச் செய்து பார்க்க அனுமதிக்கிறத...

ஐபிஎல் watch-along

  வணக்கம். இன்று ஐ.பி.எல் தகுதிப் போட்டி 1 குஜராத்துக்கும் பெங்களூருக்கும் இடையில். அதையொட்டி ஒரு watchalong யுடியூபில் பண்ணலாம் என இருக்கிறேன். 7: 25க்கு ஆரம்பிக்கிறேன். ஆட்டத்தின் போக்கை ஒட்டி என் வர்ணனையும், கருத்துக்களும், கணிப்புகளும் இருக்கும். யாரெல்லாம் அதில் கலந்துகொள்ள விருப்பமோ பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். கீழே உள்ள தொடுவழியை கிளிக் செய்து இணையுங்கள். யாரும் இல்லாவிட்டால் முடித்துவிட்டு கிளம்புவதாகத் திட்டம். சும்மா ஒரு முயற்சி. பி.கு: watch-along என்பது இணையத்தில் கூட்டாக நேரலையில் ஒரு நிகழ்வைக் கண்டு கருத்துக்களைப் பகிரும் ஒரு ஏற்பாடு. https://youtube.com/live/LF9bYw8CZxM?feature=share

போராட்டங்களும் தொழில்சார்ந்த பிரதிநுத்துவமும்

  தமிழ்நாட்டு துப்புரவுப் பணியாளர்களின் பிரச்சினைகளை ஏதோ சமூகத்தின் விளிம்பில் நடப்பதாகப் பாவிப்பது நல்லதல்ல. கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கத்தினர் மட்டும் இதில் ஆர்வம் காட்டினால் போதாது. ஏனென்றால் குறைந்தபட்ச ஊதியம், அதைப் பெறுவதிலுள்ள சிக்கல்கள் பின்னர் வேறுவகையான தொழிலாளர்களையும் பாதிக்கப் போகிறது - கடந்த சில ஆண்டுகளாகவே தொழிற்சாலையிலும் ஐ.டி உட்பட்ட பிற நிறுவனங்களிலும் வேலை நேரத்தை அதிகரித்து ஊதியத்தைக் குறைக்க அனுமதிக்கும்படி அரசை இந்தியாவின் பல நகரங்களில் தனியார் நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே பொருளாதார வீக்கம், அழுத்தம், அதனால் விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலையுயர்வு, வேலையின்மை உள்ளதால் அரசு இதற்குச் செவி சாய்க்காமல் உள்ளது. இன்னொரு புறம் அரசும் நேரடியாக வேலைக்கு ஆளெடுக்காமல் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைகிறது. இதனாலே மேற்சொன்ன துப்புரவுப் பணியாளர் சிக்கல்கள் தோன்றுகின்றன. எப்போதெல்லாம் அரசு ஒப்பந்தம் போடுகிறதோ அங்கெல்லாம் ஊழல் தோன்றும். ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு குறையும். எதிர்காலத்தில் அரசு செலவைக் குறைக்கும் நோக்கில் செய்வதாகச் சொல்லி ஊழியர்கள் எல்லாரையுமே ஒ...