ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது அதன் மீதான அதிகாரமும் கட்டுப்பாடும் புதிய முதலாளித்துவ சக்திகளிடம் போகும். அவர்களிடம் நன்றி காட்டாவிடில் அக்கட்சியால் நீடிக்க இயலாது. ஆகையால் தாம் கொண்டு வரும், தம்மிடம் ஆதரவு கேட்டு நிதி தரும் சிறிதும் பெரிதுமான நிறுவனங்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள் புதிய கட்சிக்காரர்கள். கன்னாபின்னாவென கட்டணத்தை உயர்த்தி தனியார் பேருந்து முதலாளிகளைச் சம்பாதிக்க தவெக அரசு கண்மூடித்தனமாக அனுமதிப்பது இதற்குத்தான். இம்மாதிரி 'ஒப்பந்தங்கள்' தேர்தலுக்கு முன்பே முடிந்திருக்கும். சரியான கொள்கையோ இலக்கோ இல்லாமல் மக்கள் வாக்களிக்கும்போது இப்படித்தான் அவர்கள் கைமாற்றி புதிய முதலாளிகளுக்கு ஆட்டு மந்தையாக விற்கப்படுகிறார்கள். அல்லது பழைய முதலாளிகள் புதிய அரசைப் பணிய வைக்க இயல்வதால் அவர்களிடம் நேரடியாக மக்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இது தவெகவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல நேபாளத்திலும் ஒரு ரேப்பரை (பாலேந்திர ஷா) ஜென் ஸீயும் மத்திய வர்க்கமும் ஆதரவு கொடுத்து பிரதமர் ஆக்கியபோதும் நடந்தது. பல முடிவுகளை அவர் மக்கள் விரோதமாக எடுத்தார். எதிர்த்துப் போராடிய மக்களை காவல்...