முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்ன பார்த்தா அப்படித் தெரியுதா?

  பொதுவாக விஜய் தோன்றும் இடங்களில் பெண்கள் உணர்ச்சிப் பிரவாகமாக அவரை வரவேற்பதைக் காண்கிறோம். அரசு பெண்கள் அலுவலர்கள் கூட அவரைக் கண்டதும் வானுக்கும் பூமிக்கும் குதிப்பதாக சொல்லப்படுகிறது. தவெகவின் இன்புளவன்சர்களிலும் பெண்களே அதிகமாக தென்படுவதாக ஒரு தோற்றம் உண்டு. இது ஒருவேளை பெண்கள் அதிகமாக இம்முறை விஜய்க்கு வாக்களித்தார்களோ எனும் சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தியது. ஆனால் உண்மை மாறானது. இந்தியா டுடே இதைக் குறித்து பிரசுரித்த ஒரு தரவு அலசல் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர்கள் ஆண்கள் அதிகமாக வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கத் திரண்ட தொகுதிகளில் 49 இடங்களை தவெக வென்றதாகவும், திமுக 9 இடங்களை வென்றதாகவும், பெண்கள் அதிகமாகத் தோன்றிய தொகுதிகளில் திமுக அதிக இடங்களை (59) வென்றதாகவும் கூறியிருக்கிறார்கள். இதன் பொருள் பெண் வாக்காளர்கள் அதிகமாகத் திரண்ட போது விஜய்க்கு வாக்குகள் விழவில்லை என்பதல்ல, அவரால் திமுகவை நெருங்க மட்டுமே முடிந்திருக்கிறது (55-59). இத்தரவின் படி விஜய்க்கு இவ்வளவு அதிகமான ஆண் வாக்காள ஆதரவா எனக் குழப்பம் ஏற்படுகிறது. பொதுவாக நம் கதையாடல்களில் பெண்கள் ஒரு நடிகர்-தலைவருக்கு அளி...

காலத்தை திருப்புவோம்

  விமலாதித்த மாமல்லனின் "ஆபீஸ்" நாவலில் ஒரு இடம் வருகிறது. பிரதான பாத்திரம், அதாவது மாமல்லன்தான், தான் எந்த சினிமாவையும் பெரிதாகப் பார்ப்பதில்லை என்கிறார். அவர் அவ்வப்போது திரையரங்குக்குப் போகிறார். ஆனால் தமிழ்ப்படங்களைப் பின்பற்றுவதாக எங்கும் சொல்வதில்லை. அவர் தன் நண்பர்களிடம் உரையாடும்போதும் அங்கு சினிமா வருவதில்லை. வணிக இதழ்கள் மீதும் கடும் எதிர்ப்புணர்வில் இருக்கிறார். அவர்களுக்கும் எனக்கும் எந்த ஓட்டுறவும் இருக்கத் தேவையில்லை, நான் ஏன் அவர்களை மதிக்க வேண்டும் என நினைக்கிறார். அவரது சக எழுத்தாளர்களின் நேர்முகங்களோ புத்தக அறிமுகமோ பிரபல வார இதழ்களில் வரும்போது அவர் அதைப் படித்துவிட்டு கண்டித்து சிறுபத்திரிகைகளில் எழுதுகிறார். சின்னச்சின்ன சமரசங்களில் என்ன தப்பு என நண்பர்கள் அறிவுறுத்தும்போது அவர் சீறுகிறார். அலுவலகத்தில் ஒரு நடிகரின் பெயரைக் குறித்து விவாதம் வரும்போது இவருக்கு அவரை சுத்தமாகத் தெரியவில்லை. அப்படி ஒருவர் இருக்கிறாரா என்று நினைத்துவிட்டு கடந்து போகிறார். இன்றைய சூழலில் இருந்து இதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கிறேன். இன்று சினிமா மக்கள் கலை எனும் இடத்தை இழந்...

12 ஆண்டுகள்

  இந்த 12 ஆண்டுகளும் மோடி வெற்றிகரமாக தன்னை நிறுவியிருக்கிறார். அதாவது காட்சி ஊடகத்தின் வித்தைகளைத் தெரிந்துகொண்டு நுட்பமாக தன்னை மக்களிடம் முன்னிறுத்தியிருக்கிறார். மிகப்பெரிய பொருளாதார வலிமையைக் கொண்டு மாநில கட்சிகளை விலைக்கு வாங்குவது, ஒவ்வொரு மாநிலமாகக் கைப்பற்றுவது, ஊடகங்களை விலைக்கு வாங்குவது, அவற்றை வைத்து பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுவது, அப்பிரச்சார பிம்பத்தைப் பயன்படுத்தி வாக்கு எந்திர முறைகேட்டின் வழியாகப் பெற்ற வெற்றிகளை நியாயப்படுத்துவது என்று முன்னேறி இருக்கிறார். அவர் நடத்திய பெரிய போர்கள் இந்தியாவுக்கு எந்த குறிப்பிடத்தக்க வெற்றியையும் தரவில்லை. இந்திராவால் வங்கதேசப் போரை வென்றதைப் போல ஒரு போரை மோடியால் வெல்ல முடியவில்லை. அவரது போர்கள் வெறும் ஷோவாக முடிந்தன. ஏனென்றால் அவரது ஆட்சிக்காலம் சீனாவின், ரஷ்யாவின் எழுச்சியையும் அந்நாடுகளுக்கு ஈடாக ஆசியாவைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவும் போட்டியையும் கண்டது. இம்மூன்று நாடுகளையும் தாண்டி இந்தியாவால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரை நடத்துவது கிட்டத்தட்ட அசாத்தியம். ஆகையால் அவர் இப்போர்களை பெயருக்கு நாலு ஏவுகணைகளை அனுப்பி...

தலதளபதி கட்சி

  நான் தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் இம்மூன்று விசயங்களை இணைத்துப் பார்க்க விரும்புகிறேன்: 1) தவெக தில்லியில் நடக்கும் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது. 2) கட்சிக்குள் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் ஆதவ்வின் உறவினருக்கு எதிரான போதை மருந்து கடத்தலை ஒன்றிய அரசு விசாரிப்பதான தகவலை வைத்து பாஜக ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆதவ்வைத் தாக்குவது; அதையடுத்து மாரிதாஸ் கைதாவது; அதற்கு பாஜக ஆதரவு ஊடகங்கள் பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பது; பாஜக-தவெக மோதலே தமிழ்நாட்டின் பிரதானம் என்பதாக நாடகம் போடுவது. 3) பாஜகவுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்த 21 எம்.எல்.ஏக்களை மன்னித்துவிட்டதாகவும் தகுதி நீக்கம் தேவையில்லை என்றும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பி இருப்பது. அதை வைத்து ஊடகச் சந்திப்பில் சட்டமன்ற சபாநாயகர் பிரபாகர் அந்த 21 எம்.எல்.ஏக்களின் ஆதரவு செல்லுபடியாகும், அதில் எப்பிரச்சினையும் இல்லை எனக் கூறியுள்ளது. இதை பாஜகவின் அழுத்தம் இன்றி எடப்பாடி செய்ய வாய்ப்பே இல்லை. அதாவது தவெக அரசை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரித்ததை எடப்பாடி ஏற்றுக் கொண்டுள்ளார். தன் எம்.எல்.ஏக்கள் கட்சி மாற...

சிறு அணில் மீது பெரிய மலையை வைப்பது

ஆ. ராசா ஊடகச் சந்திப்பில் விஜய்யைக் குறித்துப் பேசுவதைக் கேட்டேன். அதில் விஜய் மீது அவர் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு அபாண்டமானது - ஏன் பிரதமரிடம் மாநில நலனை வலியுறுத்தி விஜய் பேசவில்லை, ஏன் பதுங்குகிறார் என ஆ. ராசா கேட்கிறார். யோசித்துப் பாருங்கள் ஆ. ராசா, இதெல்லாம் சாத்தியமா? முதலில், ஒன்றுமே இல்லாத இடத்தில் இருந்து எந்திரத்தை டியூன் செய்து வைத்து அவரை வெல்ல வைத்து முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்திருக்கிறார்கள். அவர்களை விஜய்யால் பகைக்க முடியுமா? அடுத்து, அவர் மின்னனு வாக்கு எந்திரத்தின் 'உதவியை' இடைத்தேர்தலிலும் அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் நம்பியிருக்கிறார். அவரால் பாஜகவை பகைக்க முடியுமா? அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்களில் ஒரு கும்பல் கூட்டணிக்குள் வந்ததும், வேறு சில எம்.எல்.ஏக்கள் பதவியைத் துறந்து தவெகவில் சேர்ந்ததும் பாஜகவின் கைக்குள் தவெகவின் குடுமி போய்விட்டது. மயிரிழையில் ஆட்சி தொங்குகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை பாஜக தலைமை எதிர்த்தால் விஜய் முழுக்க முன்னாள் திமுக கூட்டணிக் கட்சியினரை நம்பியிருக்க வேண்டியிருக்கும். அவர்கள் விலகினால் ஆட்சி கவிழும். அடுத்து, கரூர் ...

என் கோபம்

  தவெக ஆட்சியை ஏன் இப்படிச் சாடுகிறீர்கள், உங்களுக்கு எப்படி அப்படி வெறுப்பு என்று நண்பர் ஒருவர் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "எனக்கு தவெக ஆட்சி மெல் எந்த வெறுப்பும் இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஆட்சியே இல்லை. என் பிரச்சினை தவெக அல்ல, என் பிரச்சினை தவெகவே இல்லை என்பதே. நான் சொல்வது நிஜம். யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கலாம். இங்கு நடப்பது லாட்டரி மார்ட்டின் ஆட்சி. 25 நாட்களில் 5000 கோடிக்கு மேல் கனிம வள முதலாளிகளிடம் இருந்து கமிஷன் வாங்கி மார்ட்டினின் தொழில் முதலீட்டுக்காக அனுப்புகிறார்கள் எனும் குற்றச்சாட்டைப் பாருங்கள். அதில் ஒரு பங்கை தவெக தலைமைக்கும் கொடுத்திருப்பார்கள். நான் மறுக்கவில்லை. அதனாலே அது தவெக தலைமை ஆட்சி செய்வதாக ஆகாது. தவகவை வைத்து மார்ட்டின் ஆள்கிறார் என்பதே பொருள் ஆகும். மார்ட்டின் பல மோசடிகள் வழியாக சம்பாதித்த பணத்தை ("காட்பாதர்" படத்தில் வருவதைப் போல) நேரடியாக வணிகத்தில் முதலீடு செய்யத் தொடங்கினார். கூடவே மோசடித் தொழிலையும் தொடர்ந்தார். அவருக்கு அது போதவில்லை. அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்து பாதுகாப்புத் தேடுவதை விட கட்சி தொடங்கலாம் என நின...

ஆர். எஸ்.எஸ்ஸின் மற்றொரு குழந்தை

  CJP என்பதைவிட RSSJP என்பதே பொருத்தமான பெயராக இருக்கும் - ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் ஜனதா பார்ட்டி! ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் மோடிக்கும் இடையிலான போட்டியில் மக்களின் தலையைப் போட்டு உருட்டி மோசடி, முறைகேடு, நிர்வாக சீர்கேடுகளை இழுத்துப் போட்டு சங்கி தொண்டர்களின் மறைமுக உதவியுடன், நிதியுடன், ஊடக நிறுவனங்களின் துணையுடன் ஒரு பெரிய சமர் செய்கிறார்கள். அதாவது பிம்ப யுத்தம். அவர்களுடைய நோக்கம் மோடிக்கு எதிராக அலை இருப்பதாகச் சித்தரிப்பது. அதை வைத்து அவருக்கு நெருக்கடி கொடுப்பது. மோடியை ஒழிப்பது அல்ல, அவரை சிறிது ஷோல்டரை இறக்க வைத்து ஆர்.எஸ்.எஸ்ஸுடன் சமரசம் பேச வைப்பதுதான் இலக்கு. சமரசத்துடன் இக்கரப்பான்பூச்சிகள் மறைந்துவிடும். பழைய படங்களில் அப்பா, அம்மா நடுவே சண்டை வரும்போது குழந்தைகள் எதாவது நாடகம் போட்டு விளையாட்டுக் காட்டி அவர்களைச் சேர்த்து வைப்பார்களே அப்படியான ஒன்று CJP.

"நாவல் எழுதும் கலை" - விமர்சனம் - மா. அண்ணாமலை

  நூலனுபவம் (28) தான் எடுத்துக்கொண்ட களத்தை முழுவதுமாக ஆராய்ந்து எழுதுவது அபிலாஷின் பாணி. நாவல் எழுதும் கலை நூலிலும் அதனையே செய்திருக்கிறார். நாவலாசிரியரின் மனநிலை, உளவியல், நாவலின் வகைகள், நாவலின் உத்திகள், பிரசுரம் என விரிவான தலைப்புகளுடன் எழுதியுள்ளார். நாவலின் வரலாற்றையும் நாவலினை எழுதும் போதும். எழுதிய பிறகும் ஒரு நாவலாசிரியர் அடையும் உளச்சிக்கல்கள் என விரிகிறது நூல். ஒரு நாவலாசிரியராக இருப்பதன் சாதகங்களை முதலில் பேசி இருக்கிறார். உண்மைதான் ஒரு படைப்பாளியாக தன் படைப்புக்குள் நுழையும் அவன் புற உலகின் சிடுக்குகளை கவனம் கொள்வதில்லை. தன் படைப்பின் சிக்கல்களை பேசுவதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அதனாலயே மிகுந்த மனமகிழ்வும் மனத்துன்பமும் அடைகிறான். இம் மனஉணர்வுகள் ஒரு படைப்பாளியால் மட்டுமே அடைய முடிபவை. பிறகு வாசகன் அதன் பலனை அனுபவிக்கிறான். நாவலின் அடிப்படைகளாக காலம், சொல்லடுக்குகள், நம்பகத்தன்மையான வசனங்கள், எல்லாவற்றிலும் முதன்மையாக கதையின் உண்மைத்தன்மையின் இருக்க வேண்டும் என கூறுகிறார். நூல் முழுக்கவே ஆசிரியர் வலியுறுத்தும் செய்தி, எழுதுங்கள். அதன் மூலமே அக்கதையி...

கரப்பான் பூச்சி கட்சி ஏன் தோன்றியது?

கரப்பான் பூச்சி கட்சியை யார் செலுத்துகிறார்கள்? இதன் ஆர். எஸ். எஸ் பின்னணி, நோக்கம் குறித்து ஒரு அலசல்! கரப்பான் பூச்சி கட்சி  காணொளி 

இருவகை ஆண்கள்

  சில குற்றச் சம்பவங்களைப் பற்றிச் சொல்லப் போகிறேன். என் இங்கு கேள்வி குற்றத்தை ஆராய்வதல்ல. ஏன் இக்குற்றங்களை அனுமதிக்கிறோம், கிட்டத்தட்ட ஆராதிக்கிறோம் என்பதே. செட் அப் சம்பவங்கள், நரேட்டிவ்களுக்கே பழகிவிட்டோமா திடீரென்று யாராவது அழுகிற காணொளி, குழந்தையுடன் பின்னணி இசை ஒலிக்கப் பேசுகிற காணொளியைக் கண்டாலே அதுவும் ஒரு செட் அப் சங்கதிதான் என்று விட்டுவிடத் தோன்றுகிறது. அப்பா, மகனாகப் பேசும் அந்தக் காணொளியை ஒட்டி நேற்று நான் படித்த விசயங்கள் உலுக்குப் போட்டுவிட்டன. நேற்று ரொம்ப நேரம் எதையும் யோசிக்க முடியவில்லை - ஒருவர் நிஜத்தை அப்படியே பதிவு பண்ணிப் போட்டுவிட்டு கொலை முயற்சியிலும் ஈடுபடுகிறார். தற்கொலை செய்யப் போவதாகச் சொல்கிறார். என்னால் இதையெல்லாம் தாங்க முடியவில்லை. இவ்வளவு பக்கத்திலா இதெல்லாம் நடக்கிறது எனும் பயம், பதற்றம். ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் 'யாரும் சாகவில்லை, அப்பெண் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்' எனச் சொன்ன சேதி சற்று நிம்மதி தந்தது. முதலில், இவர்களுக்கு பலரும் ஆலோசனை தரலாம், உளவியலாளர்கள் கூட உதவலாம், ஆனால் இத்தகைய கோபாவேசச் செயல்கள் நடப்பதைத் தடுக்க முடியாது. இவையெல்...

ஒரு சுயமுன்னேற்றக் குறிப்பு

  எனக்கு விஜய்யிடம் பிடித்த ஒரு விசயம் உண்டு: தனக்குத் தெரியாத ஒன்றைக் கூட நம்பிக்கையாகச் செய்கிறார். எவ்வளவுதான் சொதப்பினாலும் தைரியமாக மேடையில் வந்து நின்று லட்சக்கணக்கான மக்களை நோக்கி (யுடியூபில் பார்ப்பவர்களையும் சேர்த்து) பேசுகிறார். ஆட்சியே இல்லாத ஒரு ஆட்சியைச் செய்கிறார். மெத்தப் படித்த, அனுபவம் மிக்க அதிகாரிகளிடம் பிளேஸர் அணிந்து கொண்டு அமர்ந்து என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் ஆணையிடுகிறார். வழிநடத்துகிறார். சமய சந்தப்பர்ப்பம், நிதிமுதலீடு, மூளைசச்சலவை எப்படி அவருக்குப் பயன்பட்டது, இவையெல்லாம் அவருக்குப் பலன் தருமா என்பதெல்லாம் வேறு விசயம். பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்ததும் அந்த இருக்கைக்குப் போக வேண்டுமா, நான் செய்யும் ஒவ்வொரு செயலும் எப்படியெல்லாம் விமர்சிக்கப்படுமோ எனக் கவலைப்படுவார்கள். ஒரு சாதாரண நேர்முகத்துக்காக வாரக்கணக்காய் படித்து டென்ஷனாகி சொதப்புவோர் உண்டு. எழுத்தாளர்களிலேயே எழுத உத்தேசித்த கதையை அது சரியாக வராமல் போனால் திட்டுவார்களோ என எண்ணி எழுதாததவர்கள் உண்டு. இப்படி எத்தனையோ விசயங்களை நாம் விமர்சனங்களையும், மதிப்பீட்டாளர்களையும் எண்ணி பயந்து கைவிடுகிறோம்...

பாஜகவின் புதிய உத்தி

அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறுவதான சேதியும் அவர் புது கட்சி ஆரம்பிப்பதான சேதிகளும் சுவரொட்டிகளும் அவராகப் பணம் கொடுத்துப் பரப்புவதுதான். அவர் எப்போதுமே ஊடகங்களுக்கு நிறைய செலவு செய்பவர். இது நிகழுமெனில் பாஜக தவெகவை நேரடியாக எதிர்க்க தான் மட்டும் போதாது, அண்ணாமலையையும் ஒரு மாற்று விஜய்யாக வைத்து ஒரு மாற்றுக் கட்சியை உருவாக்கி பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருந்து தப்பிக்கலாம் எனக் கருதுகிறது எனப் பொருள். அதாவது இனி தவெக எனும் பாஜக (திமுக எதிர்ப்பு), தவெக எனும் திமுக (பாஜக எதிர்ப்பு), அண்ணாமலையின் கட்சியான மாற்று பாஜக, நிஜ பாஜக என பல கட்சிகள் களமாடும். மிகுதியான தகவல்கள், உணர்வுத் தூண்டுதலைத் தரும் பிம்பங்கள், காணொளிகளைக் கொண்டு மக்களின் மூளையை நிரப்பி சிந்திக்க விடாமல் பண்ணுவதும், அரசியல் மாய்மாலங்களால் கவனத்தைத் தொடர்ந்து திருப்பி திராவிட அரசியல் இல்லை எனும் பிரமையை ஏற்படுத்துவதும், விஜய் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதுமே அவர்களுடைய உத்தேசமாக இருக்கும். முக்கியமாக, இங்குள்ள பாஜக ஆதரவு ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் ஐடி விங் கூட்டத்தினரும் தீவிரமாக அண்ணாமலையின் கட்சியை ஆதரிப்பர். விஜய்யைப்...

விஜய்யும் தவெகவினரும் - நார்சிசிஸ்டுகளின் விடலை சர்வாதிகாரம்

  மோடிக்கும் விஜய்க்குமான (கூடவே ஹிட்லருக்குமான) ஒற்றுமைகளைப் பற்றி எழுதியிருந்தேன். ஒரு வித்தியாசம் உண்டு. அது இதுதான்: மோடி ஒருபோதும் தன்னைக் குறித்த கேலி கிண்டலுக்குப் பதில் அளிக்க மாட்டார். விமர்சனங்களைத் தான் படித்ததாகவோ கேட்டதாகவோ காட்டிக் கொள்ள மாட்டார். அப்படித்தான் அவர் உச்சபட்சமான அதிகார பிம்பமாக, பலவீனமே அற்ற தலைவராகத் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால் விஜய் தொடர்ந்து தன்னைக் கலாய்ப்போரால் புண்படும் பதின்வயதினரைப் போல, பதினாறு வயதினிலே சப்பாணியைப் போல சிணுங்குகிறார், கோபிக்கிறார், சொடுக்கி சவால் விடுகிறார். "என்னை நேசிக்கும் மக்களான உங்களை தற்குறிகள் என்கிறார்கள்" என்று அவர் திருச்சி உரையில் போட்டுக் கொடுப்பது பதின்வயதினர் பேசுவதைப் போன்றே உள்ளது. அவர்கள் தம்மைக் கலாய்ப்பதாகப் புகார் சொல்லிக்கொண்டே தம் மீதான பரிகாசம் தம் மீதல்ல வளர்ந்தவர்கள் மீதே செய்யப்படுவதாக கோத்துவிட்டு பின்னவர்களைத் தம் வசம் ஆதரவுக்கு இழுப்பார்கள் ("தாத்தா தாத்தா உங்களையும் சேர்த்துதான் கிண்டல் பண்ணினாங்க. வந்து கேளுங்க.") இதைப் பார்க்கையில் நமக்கு இவர் அதிகார மிக்கவர்தானா இல்லை வேலை...

ஹிட்லர், மோடி, விஜய் இடையிலான பத்து ஒற்றுமைகள்

1) கடைசி வரை வெளிப்படையாக ஊடகங்களைச் சந்திக்க மறுப்பது. எழுதி மனப்பாடம் செய்யப்படாத உரைகளை வழங்குவதைத் தவிர மக்களிடம் நேரடியாக உரையாடத் தயங்குவது. தன் கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்கு அப்பால் மக்களுக்குத் தன்னைப் பற்றி எதுவுமே தெரியக் கூடாது, தன்னிடம் பிறர் நேரடியாக உரையாடினால் அது தன்னை சாதாரணமானவராக்கி விடும், தன் அசாதாரணத்தன்மை தன் அணுக முடியாமையால் வருவதாக நம்புவது. 2) தன் கட்சிக்காரர்களையும் பினாமிகளையும் கொண்டு ஊடக நிறுவனங்களை விலைக்கு வாங்குவது. விமர்சிப்பவர்களைக் கைது செய்வது. 3) எதற்கெடுத்தாலும் இந்த ஹிட்லர், இந்த மோடி, இந்த விஜய் என்று திரும்பத்திரும்பப் பேசுவது. தன் நார்சிசத்தின் நீட்சியாக மக்களைக் கருதுவது - "நான் என்னை மட்டுமே நேசிக்கிறேன், என் மக்கள் என்னை மட்டுமே நேசிக்கிறார்கள், நானும் என் மக்களும் ஒன்று, அதனால் என் மக்கள் எனக்காகவே வாழ்கிறார்கள்" என்பதே அவர்களின் லாஜிக்காக இருக்கும். 4) "நான் மக்களுக்காக பல நன்மைகள் செய்தேன், செய்கிறேன். செய்வேன்" எனச் சொல்வார்கள். ஆனால் அவை என்னவென்று நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். இதன் மறைபொருள் நான் எனக்கு பல நன்மைகள...

பாவம் ஓட்டேரி நரி

  டிவீஷா ஷர்மா எனும் நடிகையின் கொலை வழக்கு குறித்த செய்தி அறிக்கையை ஹிந்துவில் பார்த்தேன். அதில் "வரதட்சிணைக் கொலைக்கு உள்ளாகும் மகள்கள்" எனும் தொடரை தலைப்பாக வைத்திருந்தார்கள். இத்தகைய குற்றங்களைக் கண்டிக்கும் அதே சமயம் இதைக் குறித்த ஒரு சட்டத்திருத்தம் இன்று அவசியமென்றும் வலியுறுத்த வேண்டியுள்ளது - கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக வரதட்சிணை மிரட்டி அழுத்தம் கொடுத்துப் பெறுவதாக இன்று இல்லை. மாறாக பணக்கார குடும்பங்களிலும் மத்திய வர்க்க குடும்பங்களிலும் ஒருசேர 'வரதட்சிணை' சொந்த மகளுக்காக பெற்றோர் கொடுக்கிற சொத்தாக மாறிவிட்டது. பெரும்பாலும் மகள்களே இதைக் கேட்டுப் பெறுகிறார்கள். இன்றைய பெண்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் -அவர்கள் திருமணத்தின்போது வரதட்சிணை வேண்டும் என்று கேட்கிறார்கள். சில டிவி நிகழ்ச்சிகளில் இளம்பெண்கள் வரதட்சிணைக்காக தம் பெற்றோரைத் தொந்தரவு பண்ணி கடனுக்குள் தள்ளுகிற சம்பவங்களும் பேசப்பட்டுள்ளன. ஒரே நிபந்தனை அப்பணமும் நகையும் தம் வசம் இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். பெற்றோரும் இது தம் மகளுக்கான பாதுகாப்ப...