முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய டி20 அணியின் உண்மையான சவால்

  அயர்லாந்துடன் இந்தியா தோற்றதில் பெரிய துயரம் இல்லை. கடந்த முறை இந்தியா அங்கு டி20 ஆடியபோதும் அயர்லாந்தினர் நன்றாகவே ஆடினார்கள். இம்முறை ஆட்டச்சூழலும் மைதான அமைப்பும் மட்டையாட்டத்துக்குச் சாதகமாக இல்லாதது அவர்களுடைய ஆட்டபாணிக்குப் பொருத்தமாக இருந்தது. பெரிய சவால்கள் இன்றியே வென்றார்கள். இரண்டு ஆட்டங்களிலும் எந்த நிலையிலும் இந்தியா அவர்களை நெருக்கித் தள்ளவில்லை. இதெல்லாம் பலரும் விவாதிப்பதுதான். இங்கிலாந்துடனான அடுத்து வரும் தொடரில் இதே அணி மேலும் நன்றாக ஆடுவார்கள், ஏனென்றால் அப்போது ஆடுதளம் இன்னும் சாதகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இங்கிலாந்து மட்டையாட்டக்கார்கள் இன்னும் ஆவேசமாக மட்டையாடுவார்கள், அவர்களுடைய பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்களை நமக்குக் கொடுப்பார்கள் என்பதால் ரன்களைக் கட்டுப்படுத்தும் கவலையே நம் அணிக்கு இருக்கும். விக்கெட் கொடுக்காமல் ஆடுவது அல்ல. மேலும் தட்டையான ஆடுதளங்களிலேயே பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் திறன்கள் தேவையுள்ளது - துல்லியமான யார்க்கர்கள், நல்ல பவுன்சர்கள், மெதுப்பந்துகள், அகலமான திசை என நிறைய சவால்கள். அயர்லாந்தில் குறிப்பிட்ட நீளத்தில் வீசிக்கொண்ட...

நீட்டிக்கப்பட்ட காலம்

  சு.ராவின் நினைவோடை நூல்களை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென சம்மந்தமே இல்லாமல் அரவிந்தன் நினைவுக்கு வருகிறார். நினைத்தால் அழைக்க முடியாதில்லையா என்று தோன்றுகிறது, கத்தியை மாரில் சொருகுவதைப் போன்றொரு வலியை மனதில் உணர்கிறேன். அவர் சு.ராவை எந்தளவுக்கு ஊன்றிப் படித்தவர் என்பதை அவருடனான உரையாடல்களில் காண முடியும். சு.ராவின் இலக்கிய விழுமியங்களைக் கடைசி வரை தன்னுடன் வைத்திருந்தார். சு.ராவின் நீட்டிக்கப்பட்ட காலத்தைப் போல அவர் இருந்தார். இது சரியா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் இப்போது அரவிந்தனை நினைக்காமல் சு.ராவைப் படிக்க இயலவில்லை

பாதி திறந்த கையை அசைத்தசைத்துப் பேசுபவர்கள்

நான் படிக்கத் தொடங்கிய காலத்தில் சு.ராவின் மொழிநடை மீது பலரையும்போல எனக்கும் பெரும் மயக்கம் இருந்தது. பரந்து பட்டு நான் வாசிக்கத் தொடங்கியபோது சு.ராவைப் போன்ற பிற நடையாளர்களையும் கண்டேன். கருத்தாக்கம், கருத்தியல், தத்துவம், கோட்பாடு என என் வாசிப்பின் நாவு நீண்டு நீண்டு புதிய ருசிகளைக் கண்டது. ரெண்டாயிரத்தில் எனக்கு ஒரு புதிய எண்ணம் உண்டானது - இலக்கிய நடையில் உருவகங்கள் அதிகமாக வருவதால் கருத்துக்களைத் தெளிவாக, கூர்மையாகச் சொல்ல முடிவதில்லை, எதையும் நேராக தெளிவாகச் சொல்ல வேண்டும், அப்பட்டமாக எழுத வேண்டும், 'சொல்லலாம்', 'கூறப்படுகிறது' 'நினைக்கலாம்' எனும் கமறல்கள், நழுவல்கள் தேவையில்லை என்று நினைத்தேன். அதன் பிறகு விமர்சன வாசிப்பும் தத்துவமும் என் பிரக்ஞையில் அதிக இடம் பிடித்த காலம் வந்தது. எதையும் நேரடியாகச் சொல்லி அதன் காரண காரியங்களை விளக்கி, சான்றுகளைத் தொகுத்துச் சொல்லி ஒரு புதிய பார்வையுடன் முடிக்க வேண்டும் என நம்பினேன். முனைவர் பட்ட ஆய்வின் காலம் வந்தது. எதையும் புதிதாக எழுதும் முன்பு அதைக் குறித்து பிறர் என்ன சொல்லியிருக்கிறார்கள் எனத் தெரிந்து அதைத் தொகுத்...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...

இந்தியாவின் அவலம்

  விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து ஆளும் பட்சத்தில் அவரை இப்போது ஆதரிக்கும் மார்க்ஸிஸ்டுகள், விசிகவினர் போன்றோரும் எதிர்க்கட்சியான அதிமுகவும் மிக மோசமாக அவரால் வேட்டையாடப்படப் போகிறார்கள். அறவுணர்வோ கருணையோ இல்லாத இயல்பிலேயே கொடுங்கோலரான பாசிஸ்ட்தான் இந்த விஜய். இப்போது அவர் தன் உணர்கொம்புகளை வெளியே விட்டு சோதித்துக் கொண்டிருக்கிறார். முழுரூபத்தை அவர் காட்டும் நாளில் இவர்கள் எல்லாம் அத்துக் கொண்டு ஓடுவது நடக்கும் என்பது என் கணிப்பு. இவரை கொஞ்சமாவது அவர்கள் எதிர்த்தாலோ மறுத்தாலோ மிக மோசமான ஒடுக்குமுறையைச் சந்திப்பார்கள். ஐ.யு.எம்.எல் கூட்டணியில் இருக்கும்போதே சில தவெக நிர்வாகிகள் ஒரு திமுக சார்பு இளைஞரை இஸ்லாமியர் என்று தவறாக நினைத்து ஆண்குறியை அறுப்பேன் என மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் துன்புறுத்தியதில் அவருக்கு வலிப்பு வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அந்த தவெக நிர்வாகி ஒன்று ஏதோ அறியாப் பிள்ளை அல்லர். அவரது கட்சிக்குள் இருக்கும் மதவெறுப்பையும் இனவாதத்தையும்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சட்டமன்றத்தில் பேசும்போது எதிர்க்கட்சி தலைவரை கொளத்தூரில் தோற்கடித்ததை தலையை வெட்டி...

வளர்ச்சியும் அரசின் பொறுப்பின்மையும்

  எனக்கு மைசூர்வாசிகளிடம் ஒரு விசயம் பிடிக்கும் - அவர்கள் இங்கு வரவிருக்கிற சோ கால்ட் வளர்ச்சித் திட்டங்களை மைசூர் ஒரு பாரம்பரிய நகரம், இங்குள்ள மரபான சின்னங்கள் அழிந்துவிடும் எறு சொல்லி நீண்ட காலமாகவே எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தடுக்க முடியாதபடி வளர்ச்சி எனும் டினோசர் ஓடி வந்துகொண்டே இருக்கிறது. இங்குள்ள அழகான சாலைகள், மரங்கள் எல்லாம் விரைவில் அழிக்கப்பட்டு ஏகப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு இது ஒரு புழுதிப்படலமாக மாறும். குப்பைகள் சாலை ஓரங்களில் குவியும். வருவாய் அதிகமாகும். ஆனால் அதற்குக் கொடுக்கிற கூலி மிகப்பெரியதாக இருக்கும். வளர்ச்சியின் முக்கியமான பிரச்சினை அது முறைப்படுத்தப்பட்டதாக இருக்காது என்பதே - நகரத்திற்குள் எத்தனை வீடுகள் கட்டலாம், விவசாய நிலங்களை விற்கலாமா, நீர்நிலைகளை கட்டிடமாக்க அழிக்கலாமா என்பது குறித்து அரசுக்கு எந்தத் தீர்மானமும் இருக்காது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று திறந்து விட்டுவிடுவார்கள் அப்படியே ஒன்றிரண்டு விதிமுறைகள் இருந்தாலும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள் (அமைச்சர்களே ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களாக, டெண்டர் வாங்குவோராக இருப்பதால்). அடுத்...

வேலியே பயிரை மேய்வதைப் போல...

சட்டமன்றத்தில் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ ஆர். செல்லசாமி பேசியது எனக்குப் பிடித்திருந்தது (இவர் தன் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் கூட). சும்மா சினிமாத்தனமாகப் பேசாமல் அன்றாடச் சிக்கல்கள், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு இன்மை, தொழில் வளர்ச்சியில் அரசு காட்டும் மெத்தனம் ஆகியவற்றை (இதுவரையிலான எல்லா கன்னியாகுமரியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் புலம்புவதைப் போல) புலம்பிவிட்டு (எல்லா அரசுகளையும் போல இந்த அரசும் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒரு கேரள மாநிலமாகவே பார்த்துப் புறக்கணிக்கும் என மனதார ஏற்றுக் கொண்டதைப் போல) அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு வந்தார். கனிம வளத்திருட்டைத் தடுக்க வேண்டும் என அவர் கேட்டதை தவெக பண்ணாது. தவெக அவர்களிடம் பணம் வாங்கி தன் கட்சியில் சேர்த்துக் கொண்டு கூடுதலாக் கொள்ளையடிக்கும். மற்ற மாவட்டங்களிலும் இதையே அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளார்கள். அரசே ஒரு கல்குவாரியை கன்னியாகுமரியில் நடத்த வேண்டும் என அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, அரசு உதவிப் பேராசிரியர் நியமனம் என்று பேசிவிட்டு அப்படியே பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதி...

நதிநீர் பங்கீடு - மக்களை ஏமாற்றும் உத்தி

  சட்டமன்றத்தில் ஏதோ மியூசிக் செயர் விளையாட்டு போல சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்த மேகாதது / நீர்ப்பங்கீடு விவாதங்களைப் பார்த்தபோது தோன்றியது: 1) மேகதாது விவகாரம் பற்றிப் பேசிய ஆதவ் அர்ஜுனா விரிவாக கடந்த சில ஆண்டுகளில் திமுகவின் சட்டப் போராட்டங்களையும் அவர்களை அடுத்து தவெக ஆட்சியில் செய்ய நினைக்கிற ஒரு குறிப்பிட்ட மாற்றத்தையும் தெளிவாக விளக்க்கினார். யார் அதைக் குறித்து என்ன சொன்னாலும் உடனே எழுந்து ஏற்கனவே சொன்னதையே மேலும் விளக்க முற்பட்டார். அடுத்து யாராவது மேகதாது என்று உச்சரித்தாலே எழுந்து மீண்டும் சொன்னதையே புள்ளிவிபரத்துடன் சொன்னார். எனக்கு அவரைப் பார்த்தபோது ஆறு மாடி பிராத்தல் ஜோக் ஒன்று நினைவுக்கு வந்தது. 2) ஆதவ் அர்ஜுனாவிடம் ஒரு நல்ல விசயம் அவருக்கு எதையும் பெரிதாக மறைத்துப் பேசத் தெரியாது. (அவர்தான் தவெகவின் உண்மையான 'சில்க் ஸ்மிதா'.) கர்நாடகா இப்போது விவசாயிகளின் தேவைக்காக நீரைக் கோரவில்லை, பெங்களூர் மக்களுக்கான குடிநீரைக் கோரி வழக்காடுமன்றம் செல்கிறது. அதனால் அதற்கு ஏற்ப தம் அரசும் நடவடிக்கைகளை எடுக்கும் என்றார். ஏற்கனவே அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் சரியாக வேலை செய்யவில...

அரபுநாட்டு பாணி மரணத்தண்டனை

  சட்டமன்றத்தில் இன்று சவுமியா அன்புமணி பேசுவதைக் கேட்டால் வியப்பாக இருந்தது - குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிவோருக்குத் தூக்குத்தண்டனை அளிக்க விஜய் ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர். தூக்குத்தண்டனைச் சட்டம் விதிக்கிற அதிகாரம் எல்லாம் முதல்வருக்குக் கிடையாது. அதை நாடாளுமன்றத்தில் ஒரு புதுச்சட்டமாக அறிமுகப்படுத்தி உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் கொண்டு வரவேண்டும். இதை ஏன் விஜய்யிடம் கேட்கிறார்? அடுத்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சில நேரங்களில் நிரூபிப்பதில் பல கோளாறுகள் இருக்கையில் அத்தகைய குற்றவாளிகளாக பிடிக்கப்படுபவர்களை - அரபுநாடுகளில் பண்ணுவதைப் போல - உடனே தூக்கில் போட வேண்டும் என அவர் கேட்டது சினிமாத்தனமாக இருந்தது. தவறாகக் கைது பண்ணப்படுகிற ஒருவரை ஒரே மாதத்தில் தூக்கில் போட்டுவிட்டு அது தவறான தீர்ப்பென்று தெரிய வந்தால், சரியான குற்றவாளிகள் பின்பு மாட்டினால் என்ன செய்வீர்கள்? எமலோகத்துடன் எக்ஸ்சேஞ்ச் ஆபர் எதாவது பாமகவுக்கு உள்ளதா? விண்ணப்பித்து மாற்றுவார்களா?

ஒரு லட்சம் சொற்கள்

  தற்போது எழுதிக் கொண்டிருக்கும் இரு நாவல்களில் ஒரு லட்சம் சொற்களைக் கடந்து விட்டேன். பெரும்பாலும் இந்த ஆண்டுக்குள் ஒரு நாவலை முடித்து அடுத்த ஆண்டு திருத்தங்கள் செய்து கொண்டு வருவேன் என நினைக்கிறேன். இதற்கு இடையே அடுத்த நாவலையும் முடிப்பதுதான் திட்டம். ஒரு நாவல் சமகால உலகம் குறித்த ஒரு மிகுபுனைவு. இதன் களம் புதுமையானது. யாரும் இதுவரை எனக்குத் தெரிந்து எழுதிப் பாராதது. மற்றொன்று மும்முனைக் காதல், ஆணுலகம், குத்துச்சண்டை, ஆண் நட்பு எனப் போகும் மற்றொரு சமகாலக் கதை. மிகுபுனைவு நாவலை இந்த ஆண்டு ஆரம்பித்தேன். குத்துச்சண்டை நாவலை நான்காண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தேன். அதன் இறுதிப் பகுதியில் ஒரு சிக்கல் வந்ததும் அதை சரிசெய்த பின்னர் முடிக்கலாம் என்று எடுத்து வைத்து அடுத்த நாவலுக்குள் போனேன். அதன்பிறகு அவ்வப்போது எடுத்து வைத்துப் படித்து சில திட்டங்கள் போடுவேன். அப்படி இப்படி இரண்டு நாவல்களையும் மாற்றி மாற்றி எழுதத் தொடங்கினேன். ஜிம்மில் குத்துச்சண்டை பயிலும்போது அல்லது டிவியில் பார்க்கும்போது ஒரு ஐடியா வரும். எழுத ஆரம்பிப்பேன். அப்படியே உள்ளே புகுந்து கதையைத் திருத்துவது, புது அத்தியாயங்கள...

ஒரு வளரும் தேசத்தின் சீரழிவு

  "பெட்ரோ பரோமா" நாவலைக் குறித்து இப்படியொரு தகவல் உள்ளது: "Initially, the novel met with cool critical reception and sold only two thousand copies during the first four years." அதாவது நாவலை ஆரம்பத்தில் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை. சரியான கவனம் இல்லை. அதனால் 2000 பிரதிகள் இரண்டாண்டுகளில் விற்பனையாகின. இதுவே தமிழ்நாடு என்றால் இந்த 2000 பிரதிகள் எவ்வளவு பெரிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டிருக்கும்? மெக்ஸிக்கர்களுடன் ஒப்பிடுகையில் நாம் எவ்வளவு பண்பாட்டு நுண்ணுணர்வற்றவர்களாக இருக்கிறோம் பாருங்கள். இந்த நாவல் அங்கு எழுதப்பட்டபோது நாம் தியாகராஜ பாகவதருக்கு அடுத்தபடியாக எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். "பொன்னியின் செல்வன்" போன்ற மேலோட்டமான பொழுதுபோக்கு நாவல்கள் தொடராக கல்கியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்தன. பு.பி போன்றவர்கள் அப்போது எழுதி சாப்பிட முடியாமல் சினிமாவில் எழுத முயன்று பசியில் இறந்தார்கள். சி.சு செல்லப்பா கல்லூரி கல்லூரியாக பண்டல் பண்டலாகத் தன் நூல்களைத் தூக்கிக் கொண்டு போய் விற்று கஷ்டப்பட்டார். இந்தளவுக...

"அன்னா" - இரண்டு கணங்களுக்கு இடையிலான பிரக்ஞையின் உலகம்

  வாசு முருகவேலின் "அன்னாவில்" மரித்துப் போனவரின் நினைவுக்குள் உலவுகிற பகுதிகள் அபாரமானவை. அதுவும் எதார்த்தமான மினிமனிஸ்டிக்கான மொழியில் எந்த தோரணைகளும் இல்லாமல் எழுதப்பட்ட அப்படைப்பில் இப்படி ஒரு விசயம் நடந்திருப்பதே ஏதோ கனவில் சொல்லப்படும் ரகசியத்தைப் போலவிருக்கும். எனக்கு அந்நாவல் நினைவில் தோன்றும்போதெல்லாம் தமிழில் நாவல் வடிவுக்குள் நாம் நாம் நம் பிரக்ஞையைப் பின்தொடராமல் நடந்த நடக்கிற சம்பவங்களை வெறுமனே தொகுத்தெழுதுவது ஒரு துரதிஷ்டம் என்று ஒரு எண்ணம் எழும். "அன்னா" அந்த எதார்த்தவாத டெம்பிளேட்டை கடக்க முயன்றது என்பதே அதன் சிறப்பு. எனக்கு அந்நாவல் யுவான் ரூல்போவின் "பெட்ரோ பரோமாவை" நினைவுபடுத்தியது. வாசுவிடம் பேசும்போது அவர் அதை யுவான் ரூல்போவின் காவியத்துக்குப் பக்கத்தில் கொண்டு சென்றிருக்க பல சாத்தியங்கள் அதில் இருந்தது, அதைச் சடுதியில் முடித்திருக்கக் கூடாது என்றேன். அடுத்து ஒரு முக்கியமான விசயம்: ஒரு நாவலானது அது எதைச் சொல்கிறது என்பதல்ல. ஒன்றை எப்படிச் சொல்கிறது, அச்சொல்முறையின் வழியாக அது 'எதைச் சித்தரிக்கிறது' என்பதே அதைச் சிறந்த நாவலாக்கு...

டி. ராஜேந்தர் ரசிகரான அமைச்சர்

  கேள்வி: ஐயா பல சிறப்பு மாணவர்களுக்கான பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லைன்னு ஒரு புகார் இருக்கு... சொல்லின் செல்வர் அமைச்சர் ராஜ்மோகன்: பள்ளி இல்லாத கழிப்பறையால் பயனுண்டு. கழிப்பறை இல்லாத பள்ளிகளால் பயனில்லை. கவிதை இல்லாத கவிஞனால் பயனுண்டு, கவிஞன் இல்லாத கவிதையால் பயனில்லை. முத்தம் இல்லாத உதடுகளில் சுத்தம் இல்லை, ஆனால் சுத்தம் இல்லாத முத்தத்தில் பயனில்லை, முத்தம் இல்லாத சுத்தத்தில் சத்தமுண்டு. கப்பம் கட்டாதவருக்கு கிடைக்கும் அப்பத்தினால் பயனில்லை. ஆனால் அப்பம் கிடைத்தவருக்கு விதிக்கப்படும் கப்பத்தினால் பயனுண்டு. (இப்படியே பேசிக்கொண்டு போகிறார்.) ஆகையால் இதைக் குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப் போகிறோம். (கழிப்பறையை எப்போது கட்டுவோம் எனச் சொல்வதில்லை.) கேள்வி: ஐயா, பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களை வைத்து கழிப்பறையைச் சுத்தம் செய்வதாகத் தகவல்கள் வருகின்றனவே... சொல்லின் செல்வர்: மாணவர்கள் தமிழ்நாட்டின் மாணிக்கங்கள். அவர்கள் இந்த அரசுக்காக காணிக்கைகள். யார் இங்கே ஆட்சியில் இருக்கிறது என்று தெரியாமல் இப்படியெல்லாம் செய்வீர்களா? இதையெல்லாம் பொறுப்போம் என நினைத்து தருக்கம் செய்வோரின் நாவை நறுக்க...

நீட்சேயின் “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” - குறிப்பு (1)

  “இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்” நூலுக்கு அடுத்ததாக நீட்சே எழுதிய நூலே “நன்மைக்கும் தீமைக்கும் அப்பால்” (1886). தன் சொந்தக் காசில் அவர் பிரசுரித்த இந்நூல் ஹெலென் சிம்மர்ன் என்பவரால் ஆங்கிலமாக்கப்பட்டது. “ஜாரதுஷ்டிரனில்” அவர் பேசுகிற பிரதானமான தத்துவக் கருத்தாக்கங்களே இதில் விவாதிக்கப்படுகின்றன. கிரேக்க, ஐரோப்பிய தத்துவவாதிகள், விஞ்ஞானிகளின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து கலாய்த்துக் கொண்டு போகும் நீட்சேயின் அடிப்படையான உத்தேசம் ஒன்றுதான் - மனித இருத்தலை சமூக ஒழுக்கத்துக்கும், சரி-தவறு எனும் எதிரிடைகளின் மீது எழுப்பப்பட்ட விழுமியங்களுக்கு அப்பாலும் கொண்டு சென்று விவாதிக்க வேண்டும். அவர் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? நீங்கள் இதை ஏன் படிக்கிறீர்கள் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? அறிவைப் பெருக்க, உங்களை மேம்படுத்திக் கொள்ள, ஆழமாகச் சிந்திக்க, உங்களைச் சோதித்துப் பார்க்க ... இப்படி எதாவது ஒன்று. இப்பதில்கள் உங்கள் செயலுக்கு ஒரு உத்தேசம் இருக்க வேண்டும் எனும் நம்பிக்கையின் பால் அமைந்துள்ளன. அறிவை ஏன் பெருக்க வேண்டும் எனக் கேட்டால் நீங்கள் அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் எனக...

ஓர் அதிசயம்

  கடந்த ஆண்டு எனக்கு வலது தோளில் ஒரு சிறு தசைக் காயம் ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கு தோளிற்கு பயிற்சி அளிக்க வேண்டாம் என்றார் மருத்துவர். அதனால் நான் இடது தோளிற்கு மட்டும் பயிற்சியளித்தேன். டம்பல் பயிற்சி, குத்துச்சண்டை என. போகப்போக என் இடதுகையின் குத்தும் வேகமும் கூர்மையும் அதிகரிப்பதை உணர்ந்தேன். வலது தோள் சரியானதும் நான் தோளின் வலிமைக்காக அதிகப் பயிற்சிகள் மேற்கொண்டேன். குத்துச்சண்டை பயிற்சிக்கு தனியான எடைப்பயிற்சி அவசியம் என இதனால் புரிந்துகொண்டேன். அதன்பிறகு ஒரு சின்ன இடைவெளி விட்டு மைசூருக்கு வந்தேன். இங்கு தனியான மேற்கத்திய குத்துச்சண்டைப் பயிற்சி நிலையங்கள் இல்லை. எல்லாமே கலவைத் தற்காப்புக் கலை (MMA) நிலையங்கள்தாம். அங்கு போவதில் ஒரு தயக்கம் இருந்தது. பெங்களூரைப் போல் அல்லாது இங்கு பயிற்சியாளர்கள் புது ஆட்களைப் பயிற்சிக்கு எடுத்துக் கொள்வதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள்தாம் என்றில்லை - இங்கு எல்லாருமே அப்படித்தான். அது வேறொரு கதை. நாம் தொடர்ந்து முயன்றால் மட்டுமே பொருட்படுத்துவார்கள். கடைசியாக நான் ஒரு ஜிம்மைக் கண்டுபிடித்தேன். அங்கு கூட நான் மாற்றுத்திறனாளி என்பதால் உங...

ஆபீஸ் நாவல் விமர்சனம்

ஆபீஸ் நாவல் விமர்சனம்

ஒரு பாராட்டுக் கடிதம்

  ஐயா வணக்கம் உயிர்மை மாத இதழில் தங்களின் கட்டுரைகள் மிகச் சிறப்பானதாகும் அதே நேரம் மாறுபட்ட வகையிலும் மாறுபட்ட சிந்தனையும் ஏற்படுத்துவதாக உள்ளது அதற்கு தங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அதேப் போன்று இன்றைய அரசியல் விளையாட்டுகளில் உள்ள உண்மை நகல் விவரங்களை தெளிவாக விளக்கியதில் ஒரு சில இடங்களில் புரிந்து கொள்ள இயலாத நிலை இருந்தாலும் கடைசியில் தெளிவான ஒரு நிலையை உருவாக்கி உள்ளது குறிப்பாக நான் ஒரு கட்சி அனுதாபி அல்லன் என்று கூறிவிட்ட நிலையில் நீ எத்தரப்பை எடுத்துக்கொண்டு இவ்வளவையும் சொல்கிறாய் என்று கேட்டால் ஒருவர் தன்னை ஒரு கட்சியின் அனுதாபி அல்ல என்ற நிலையை எடுத்துக் கூறுவதுடன் அவசியமான நேரங்களில் அவசியமானதை உறுதியாக எழுதிவிட வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டை பாராட்டுகிறேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா நன்றி ! அன்புடன் கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி

நீட்சே ஆன்லைன் வகுப்பு

  நீட்சே ஆன்லைன் வகுப்பு "இவ்வாறு சொன்னான் ஜாரதுஷ்டிரன்" நூல் நீட்சேயின் புத்தகங்களில் மிகவும் கவித்துவமானது. அதனாலே அது மிகவும் பிரசித்தமானது. தமிழிலும் மொழியாக்கப்பட்டு வந்தபோது பரவலாகப் படிக்கப்பட்டது. ஆனால் ஒரு சிக்கல் எழுந்தது. மக்கள் அதிலுள்ள உருவகங்களைப் புரிந்து கொள்ள இயலாமல் ஒரு கதையைப் போலப் படித்துக் குழப்பிக் கொண்டனர். அதன் எதிர்-கருத்துக்கள், எகத்தாளமான அறிக்கைகள், தலைகீழாக்கம் மக்களுக்குப் பிடித்திருந்தன. மத-எதிர்ப்பாளர்கள், இறை மறுப்பாளர்களுக்கும் அவை பிடித்திருந்தன. ஆனால் அந்நூலின் ஆழமான பொருள் கணிசமானவர்களைப் போய்ச் சேரவில்லை. நீட்சேயின் பிற நூல்களைப் படித்தும், அவரைக் குறித்து ஆய்வாளர்கள் சொல்வதைத் தெரிந்து கொண்டும் அவரது உருவகங்களைப் பார்க்கையில் முற்றிலும் வேறொரு பொருள் புலப்படுகிறது. நீட்சேயை ஷோப்பன்ஹெர், ஹசர்ள், ஹைடெக்கரின் தத்துவத் தளத்தில் வைத்துப் படிப்பதும், இருத்தலியல் கோணத்தில் விரித்துப் புரிந்து கொள்வதும் நமக்கு பெரிய மனத்திறப்பை அளிக்கக் கூடியவை. இன்னொரு பக்கம், இந்திய தத்துவங்களில் ஆர்வமுள்ளோரும் நாம் மனித பிரக்ஞை, ஆன்மீகம், அக-விழைவு (will) கு...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (2) - இலக்கிய மடங்களின் விபரீதங்களும் ஒரு நன்மையும்

  "ஆபீஸ்" நாவலில் இருந்து அந்த காலத்திலேயே இலக்கிய மடங்கள் குறித்த புகார்கள் இருந்ததாகத் தெரிந்து கொண்டேன். அதில் எல்லா மடங்களும் ஒன்றாக இருப்பதில்லை. சில மடங்கள் வெறுமனே பாய்ஸ் கிளப்பாக இருக்கின்றன. ஜெயகாந்தனின் ஆழ்வார்பேட்டை மடம் அப்படியானது. அங்கு ஜெயகாந்தன் தனியுரைகள் ஆற்றிக் கொண்டே இருக்கிறார். கஞ்சா சிலும்பியை எல்லாரும் பகிர்ந்து கொண்டு சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஜெயகாந்தன் தன்னை ஒரு ஆல்பா மேலாக கருதிக் கொள்கிறார். தன்னுடைய அறிவுப் போதாமை (வாசிப்பின்மை), படைப்பாற்றல் குறைவு (எழுதுவதை நிறுத்திய கட்டம்) குறித்த சீண்டல்கள் அவரைக் கடுமையாகச் சினம் கொள்ள வைக்கின்றன. அவரிடம் தம் ஈகோவை முழுக்க கழற்றி வைக்காத ஒருவரால் மடத்தில் பங்கேற்க முடிவதில்லை. சமத்துவம், நீர்மையான கருத்துருவாக்கங்களில் ஆர்வம் இல்லாத தாராளவாத சிந்தனைக்கு முன்பான ஒரு மனிதராக அவர் இருந்திருக்கிறார். 'கெர்ள்ஸை பிக் அப்' பண்ணுவது, இரவு நெடுநேரம் தண்ணியடிப்பது, விடிகாலையில் எழுதுவது குறித்து அவர் சிலாகிக்கும்போது, அங்கங்கே பந்தா பண்ணும்போது இதெல்லாம் ஒரு பெரிய விசயமா என்று நமக்குத் தோன்...

ஏன் வாசிக்க வேண்டும்? நூல் குறித்து இளவரசன் காந்தி

ஏன் வாசிக்க வேண்டும்? - ஆர்.அபிலாஷ்   நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்த ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு புத்தகக் கடைக்குச் செல்வொம். அங்கே  நுழைந்தவுடன் நாம் என்ன புத்தகத்தை வாங்க வேண்டும் என நினைத்தோமோ அந்தப் புத்தகத்தை மறக்க வைக்குமளவுக்கு இன்னும் நிறைய புத்தகங்கள், குறிப்பாக பல புதிய வெளியீடுகள் புத்தம் புதிய அட்டைப்படத்துடன் நம்மை வெகுவாக ஈர்க்கும். பின் அட்டையில் எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பத்தி அப்புத்தகத்தை வாங்கியே தீர வேண்டும் என இழுக்கும். அதைப் போலவே இன்னும் பல புத்தகங்கள். அதையெல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவோம். ஆனால் புத்தகங்களை கடையில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் இப்போது கொஞ்சம் வற்றிப்போயிருக்கும். இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் படிக்கலாம், இதோ ஆபிஸ் வேலையை முடித்துவிட்டுப் படிக்கலாம், இரவில் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகப் படிக்கலாம், அதிகாலையில் எழுந்தால் நன்கு ஊன்றிப் படிக்கலாம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்போம். நம்மேல் நமக்கே ஒரு எரிச்சல் வரும். ஏன் நம்மால் படிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை, அப்படியே படித்தாலும்...

"நாவல் எழுதும் கலை" குறித்து ராஜேஷ் வைரபாண்டியன்

ஆர். அபிலாஷ் எழுதிய “நாவல் எழுதும் கலை” நூல் வாசித்தேன். அபிலாஷின் எழுத்துநடை அபுனைவு நூலையும் தொய்வின்றி வாசிக்க வைத்தது. இந்நூல் புதியதாய் நாவல் எழுத நினைக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூல்.  நாவல் எழுதுவது பற்றிய பல்வேறு உதாரணங்களை தந்திருக்கிறார் அபிலாஷ். இந்த நூலிருந்து கற்றுக்கொள்வதைப் போல அவரது உதாரண நூல்களிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம். என்னளவில் நாவல் எழுதுவது என்பது “அவ்வளவு பெருசா எழுதணுமே” எனும் சோம்பேறித்தனுமும் தயக்கமும் கலந்த ஒன்றாகவே பல வருடங்கள் நீடித்தது. அதை உடைத்தபோது பிறந்ததுதான் என் முதல் நாவல் தேரி. அதை உடைப்பதற்கும் ஏராளமான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் இந்நூல் வாசகருக்கு தருகிறது. அபிலாஷ் தானும் ஒரு நாவலாசிரியர் என்பதால் அவரது சொந்த அனுபவக்குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார். மேலும், அவரது பயிலரங்கில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி பதில்களையும் இணைத்திருப்பது மிகுந்த பயனுள்ளதாகவே இருக்கிறது.  இவை போன்ற நூல்கள் அதிகம் தமிழில் வர வேண்டும். அவை கல்லூரிகளில் பாடமாக வைக்க வேண்டும்.  இந்நூலுக்கு அபிலாஷுக்கு வாழ்த்துகள் சொல்வதை விட இந்நூலை வாங்க...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...