முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு லட்சம் சொற்கள்





 

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் இரு நாவல்களில் ஒரு லட்சம் சொற்களைக் கடந்து விட்டேன். பெரும்பாலும் இந்த ஆண்டுக்குள் ஒரு நாவலை முடித்து அடுத்த ஆண்டு திருத்தங்கள் செய்து கொண்டு வருவேன் என நினைக்கிறேன். இதற்கு இடையே அடுத்த நாவலையும் முடிப்பதுதான் திட்டம். ஒரு நாவல் சமகால உலகம் குறித்த ஒரு மிகுபுனைவு. இதன் களம் புதுமையானது. யாரும் இதுவரை எனக்குத் தெரிந்து எழுதிப் பாராதது. மற்றொன்று மும்முனைக் காதல், ஆணுலகம், குத்துச்சண்டை, ஆண் நட்பு எனப் போகும் மற்றொரு சமகாலக் கதை.

மிகுபுனைவு நாவலை இந்த ஆண்டு ஆரம்பித்தேன். குத்துச்சண்டை நாவலை நான்காண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தேன். அதன் இறுதிப் பகுதியில் ஒரு சிக்கல் வந்ததும் அதை சரிசெய்த பின்னர் முடிக்கலாம் என்று எடுத்து வைத்து அடுத்த நாவலுக்குள் போனேன். அதன்பிறகு அவ்வப்போது எடுத்து வைத்துப் படித்து சில திட்டங்கள் போடுவேன். அப்படி இப்படி இரண்டு நாவல்களையும் மாற்றி மாற்றி எழுதத் தொடங்கினேன். ஜிம்மில் குத்துச்சண்டை பயிலும்போது அல்லது டிவியில் பார்க்கும்போது ஒரு ஐடியா வரும். எழுத ஆரம்பிப்பேன். அப்படியே உள்ளே புகுந்து கதையைத் திருத்துவது, புது அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருப்பேன். புதிய நாவலின் மொழியும் உணர்வும் வேறு என்பதால் அதிலிருந்து இது ஒரு புத்துணர்ச்சியான மாற்றமாக இருக்கும்.
எனக்குத் தெரிந்து நாவலை எழுதுவதை விட அதைச் 'சரியாக' வெளிப்படுத்துவது கடினம். என்னதான் நாம் திருத்தி எழுதினாலும், பலமுறைகள் முயன்றாலும், கதையமைப்பை வலுப்படுத்தினாலும் நாவலின் மையம் அரூபமான சில கருத்துக்களாலும் உணர்வுகளாலும் ஆனது. இன்னதென்று சொல்ல முடிவது நாவலின் கரு. இன்னதென சொல்லில் வடிக்க முடியாதது நாவலின் ஆன்மா. நாவலை எழுதுவது இந்த ஆன்மாவைத் தழாவி, கையால் பற்றிப் பிடித்து மீண்டும் மீண்டும் தவற விடுகிற காரியம். அதனாலே நாவலை முடித்து திருத்தும் வரையிலும் அது எப்படி வருகிறது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. அதுதான் நாவலின் சுவாரஸ்யமும். இதே காரணத்தால்தான் நான் நாவலின் சொல் அளவை (word length) வைத்து அதை முடித்ததாக நம்புவதில்லை. அதாவது இன்று ஆரம்பித்து மூன்று-ஆறு மாதங்களில் 180 பக்கங்களை எட்டினால் கதையை முடித்து வைத்து நாவல் முடிந்துவிட்டது என நான் நம்புவதில்லை. அது புறவடிவம் மட்டுமே. புறவடிவம் நாவல் அல்ல.
அதனாலே மேற்சொன்ன திட்டத்தையும் நான் நிபந்தனைக்குட்பட்டதாகவே இங்கு வைக்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...