முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"அன்னா" - இரண்டு கணங்களுக்கு இடையிலான பிரக்ஞையின் உலகம்

 


வாசு முருகவேலின் "அன்னாவில்" மரித்துப் போனவரின் நினைவுக்குள் உலவுகிற பகுதிகள் அபாரமானவை. அதுவும் எதார்த்தமான மினிமனிஸ்டிக்கான மொழியில் எந்த தோரணைகளும் இல்லாமல் எழுதப்பட்ட அப்படைப்பில் இப்படி ஒரு விசயம் நடந்திருப்பதே ஏதோ கனவில் சொல்லப்படும் ரகசியத்தைப் போலவிருக்கும். எனக்கு அந்நாவல் நினைவில் தோன்றும்போதெல்லாம் தமிழில் நாவல் வடிவுக்குள் நாம் நாம் நம் பிரக்ஞையைப் பின்தொடராமல் நடந்த நடக்கிற சம்பவங்களை வெறுமனே தொகுத்தெழுதுவது ஒரு துரதிஷ்டம் என்று ஒரு எண்ணம் எழும். "அன்னா" அந்த எதார்த்தவாத டெம்பிளேட்டை கடக்க முயன்றது என்பதே அதன் சிறப்பு. எனக்கு அந்நாவல் யுவான் ரூல்போவின் "பெட்ரோ பரோமாவை" நினைவுபடுத்தியது. வாசுவிடம் பேசும்போது அவர் அதை யுவான் ரூல்போவின் காவியத்துக்குப் பக்கத்தில் கொண்டு சென்றிருக்க பல சாத்தியங்கள் அதில் இருந்தது, அதைச் சடுதியில் முடித்திருக்கக் கூடாது என்றேன்.

அடுத்து ஒரு முக்கியமான விசயம்: ஒரு நாவலானது அது எதைச் சொல்கிறது என்பதல்ல. ஒன்றை எப்படிச் சொல்கிறது, அச்சொல்முறையின் வழியாக அது 'எதைச் சித்தரிக்கிறது' என்பதே அதைச் சிறந்த நாவலாக்குகிறது. ஒரு நீர்க்குமிழியைப் பார்த்து நீர்க்குமிழாக சித்தரிப்பது சிறப்பல்ல. நீர்க்குமிழி ஒரு நாவலென்றால் அதன் மீது நடனமாடும் பிரதிபலிப்புகளே நம் பிரக்ஞை, அதைச் சொல்வதற்கானதே அந்நாவலின் குறியீட்டுத்தளம். அது நமக்குள் எப்படி ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது என்பதே வாசிப்பு. "அன்னாவை" அதனாலே ஈழப்பிரச்சினை, அகதிப் பிரச்சினை பற்றிய நாவல் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் நாவல் என்பது தினத்தந்தி பேப்பர் அல்ல. அது அதையும் தாண்டிச் சென்று எந்த அரசியலுக்குள்ளும் அதிகாரத்துக்குள்ளும் பட்டுவிடாமல் தன்னை நிலைத்து வைத்திருக்க பிரயத்தனிக்கும் பெண்ணின் இருத்தல் அவ்வாறே வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் நடுவே தன்னை நிறுத்திக் கொள்வதைப் பேசுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...