முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் அவலம்

 விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து ஆளும் பட்சத்தில் அவரை இப்போது ஆதரிக்கும் மார்க்ஸிஸ்டுகள், விசிகவினர் போன்றோரும் எதிர்க்கட்சியான அதிமுகவும் மிக மோசமாக அவரால் வேட்டையாடப்படப் போகிறார்கள். அறவுணர்வோ கருணையோ இல்லாத இயல்பிலேயே கொடுங்கோலரான பாசிஸ்ட்தான் இந்த விஜய். இப்போது அவர் தன் உணர்கொம்புகளை வெளியே விட்டு சோதித்துக் கொண்டிருக்கிறார். முழுரூபத்தை அவர் காட்டும் நாளில் இவர்கள் எல்லாம் அத்துக் கொண்டு ஓடுவது நடக்கும் என்பது என் கணிப்பு. இவரை கொஞ்சமாவது அவர்கள் எதிர்த்தாலோ மறுத்தாலோ மிக மோசமான ஒடுக்குமுறையைச் சந்திப்பார்கள். ஐ.யு.எம்.எல் கூட்டணியில் இருக்கும்போதே சில தவெக நிர்வாகிகள் ஒரு திமுக சார்பு இளைஞரை இஸ்லாமியர் என்று தவறாக நினைத்து ஆண்குறியை அறுப்பேன் என மிரட்டியிருக்கிறார்கள். அவர்கள் துன்புறுத்தியதில் அவருக்கு வலிப்பு வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அந்த தவெக நிர்வாகி ஒன்று ஏதோ அறியாப் பிள்ளை அல்லர். அவரது கட்சிக்குள் இருக்கும் மதவெறுப்பையும் இனவாதத்தையும்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சட்டமன்றத்தில் பேசும்போது எதிர்க்கட்சி தலைவரை கொளத்தூரில் தோற்கடித்ததை தலையை வெட்டிவிடுவேன் எனும் சைகையைக் காட்டிச் சொன்னவர். அவரது கட்சியின் நிர்வாகிகளும் அப்போது அதே வன்முறையைத்தானே கையில் எடுப்பார்கள். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காது எனும்போது அவர்கள் மேலும் துணிவார்கள்தானே. என்னுடைய கேள்வி இதுதான்: கூட்டணியில் இருக்கும்போதே இப்படிப் பேசுகிறார்கள் எனில் இல்லாவிட்டால் என்னவெல்லாம் சொல்வார்கள்? பெரும்பான்மை கிடைக்காததற்கே இப்படி என்றால் கிடைத்திருந்தால் தன் கட்சியை வைத்து ஒரு தனி குண்டர் படையை உருவாக்கி எதிர்க்கட்சிகள் மீது வன்முறையை ஏவியிருப்பார். மே.வங்கத்தில் நாம் காண்கிற காட்சிகள் இங்கும் நடந்திருக்கும். தமிழ்நாடு தப்பித்தது.

ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் பாஜகவினர் மட்டும்தான் இப்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பாகப் பேச முடியும் என்று நினைத்தால் அவர்களையும் அவர் இப்படித்தான் பொய் வழக்குப் போட்டு அலைய வைக்கிறார். விஜய்யின் மாமாவான போதகர் ஒருவரும் மற்றொரு மாமாவான ஜான் பிரிட்டோன் என்பவரும் லயோலா கல்லூரியின் வலைத்தொடர்பையும், துபாய் நிறுவனத்தையும் பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகள் கறுப்புப் பணத்தைத் தவெகவின் தேர்தல் செலவுக்காக உள்ளே கொண்டு வந்துள்ளனர் என்று மாரிதாஸ் ஒரு காணொளியில் சொல்கிறார். அது உண்மையோ பொய்யோ தெரியவில்லை. ஆனால் விஜய் மீது ஏற்கனவே வரி ஏய்ப்பு வழக்கு உள்ளது. அவருக்காக பணம் செலவழித்த லாட்டரி கும்பல் வெள்ளைப் பணத்தையா செலவழித்திருப்பார்கள். தேர்தல் செலவிலேயே இவ்வளவு தில்லுமுல்லு செய்தவர்கள் வார்த்தைக்கு வார்த்தை தானொரு ஊழலற்ற ஆட்சியைச் செய்கிறேன் என்று பாவனை செய்வதுதான் வேடிக்கை. மாரிதாஸ் தன் காணொளியின் ஒன்றைச் சொல்கிறார்: இவரது மாமா கடவுளின் பெயரால் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டராக கத்தோலிக்க திருச்சபையின் அத்துமீறல்களை விசாரிக்கும் அமைப்பொன்று அறிக்கையில் சொல்லியுள்ளதாகக் கூறுகிறார். இப்படியே சொல்வதொன்று செய்வதொன்று என்று இருந்தால் அது ஆன்மீகத்தை மட்டுமல்ல அரசியலையும் புற்றுநோய் போல உள்ளிருந்தே தின்றுவிடும்.
மாரிதாஸ் தன் காணொளிகளில் அவர் விடாமல் விஜய்யின் பின்னணியை அம்பலப்படுத்தி விமர்சிப்பதைப் பார்க்கையில் எனக்கென்னமோ அவர் மீண்டும் சிறை செல்வார் எனத் தோன்றுகிறது. அல்லது அமித்ஷாவிடம் போய் கெஞ்சிக் கதறி மாரிதாஸின் வாயை மூட வைப்பார்கள்.
தமிழ்நாட்டை விடுங்கள். எனக்குத் தெரிந்த இந்தளவுக்கு அவலமான ஒரு ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...