சு.ராவின் நினைவோடை நூல்களை இணையத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென சம்மந்தமே இல்லாமல் அரவிந்தன் நினைவுக்கு வருகிறார். நினைத்தால் அழைக்க முடியாதில்லையா என்று தோன்றுகிறது, கத்தியை மாரில் சொருகுவதைப் போன்றொரு வலியை மனதில் உணர்கிறேன்.
அவர் சு.ராவை எந்தளவுக்கு ஊன்றிப் படித்தவர் என்பதை அவருடனான உரையாடல்களில் காண முடியும். சு.ராவின் இலக்கிய விழுமியங்களைக் கடைசி வரை தன்னுடன் வைத்திருந்தார். சு.ராவின் நீட்டிக்கப்பட்ட காலத்தைப் போல அவர் இருந்தார். இது சரியா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் இப்போது அரவிந்தனை நினைக்காமல் சு.ராவைப் படிக்க இயலவில்லை
கருத்துகள்