முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் வாசிக்க வேண்டும்? நூல் குறித்து இளவரசன் காந்தி

ஏன் வாசிக்க வேண்டும்? - ஆர்.அபிலாஷ்
 

நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்த ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு புத்தகக் கடைக்குச் செல்வொம். அங்கே  நுழைந்தவுடன் நாம் என்ன புத்தகத்தை வாங்க வேண்டும் என நினைத்தோமோ அந்தப் புத்தகத்தை மறக்க வைக்குமளவுக்கு இன்னும் நிறைய புத்தகங்கள், குறிப்பாக பல புதிய வெளியீடுகள் புத்தம் புதிய அட்டைப்படத்துடன் நம்மை வெகுவாக ஈர்க்கும். பின் அட்டையில் எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பத்தி அப்புத்தகத்தை வாங்கியே தீர வேண்டும் என இழுக்கும். அதைப் போலவே இன்னும் பல புத்தகங்கள்.

அதையெல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவோம். ஆனால் புத்தகங்களை கடையில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் இப்போது கொஞ்சம் வற்றிப்போயிருக்கும்.

இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் படிக்கலாம், இதோ ஆபிஸ் வேலையை முடித்துவிட்டுப் படிக்கலாம், இரவில் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகப் படிக்கலாம், அதிகாலையில் எழுந்தால் நன்கு ஊன்றிப் படிக்கலாம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்போம்.
நம்மேல் நமக்கே ஒரு எரிச்சல் வரும். ஏன் நம்மால் படிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை, அப்படியே படித்தாலும் சில நிமிடங்கள் கூட ஏன் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை என பல கேள்விகள்.

இக்கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கிறது இப்புத்தகம்.

ரீடர்ஸ் ப்ளாக் என்றால் என்ன, நேரங்காலம் பார்க்காமல் நம்மை எப்படி வாசிப்புக்குத் தயார்ப்படுத்துவது, வேகமாய் வாசிப்பது எப்படி,
இலக்கிய வாசிப்பில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் சிக்கல்கள், அதற்கான தீர்வு,
தத்துவ வாசிப்பை எதிலிருந்துத் துவங்குவது, உளவியல் வாசிப்பு என்றால் அதன் வகைகள், அதற்கான நூல்களை வாசிக்கும் தன்மை,
வாசிப்பின் மற்ற உள்ளார்ந்த பிரச்சினைகளை எப்படி சரிபண்ணுவது, 

அவ்வளவு ஏன் கழிப்பறையில் கூட தீவிரமாக வாசிக்கும் மனநிலை என்ன என்பதையும் ஒரு அறிமுக வாசகன் முதல் தேர்ந்த வாசகர்கள் வரை அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றிற்கும் முடிந்தளவுக்கு விலாவரியாக, எளிமையாக விளக்கியுள்ளார் அபிலாஷ்.

ஏன் வாசிக்க வேண்டும், எதையெல்லாம் வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதைப் பற்றிய புரிதல்களுக்கான நல்ல புத்தகம்.

நன்றி 

இளவரசன் காந்தி 

Abilash Chandran #ஏன்வாசிக்கவேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...