முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டி. ராஜேந்தர் ரசிகரான அமைச்சர்


 

கேள்வி: ஐயா பல சிறப்பு மாணவர்களுக்கான பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லைன்னு ஒரு புகார் இருக்கு...

சொல்லின் செல்வர் அமைச்சர் ராஜ்மோகன்: பள்ளி இல்லாத கழிப்பறையால் பயனுண்டு. கழிப்பறை இல்லாத பள்ளிகளால் பயனில்லை. கவிதை இல்லாத கவிஞனால் பயனுண்டு, கவிஞன் இல்லாத கவிதையால் பயனில்லை. முத்தம் இல்லாத உதடுகளில் சுத்தம் இல்லை, ஆனால் சுத்தம் இல்லாத முத்தத்தில் பயனில்லை, முத்தம் இல்லாத சுத்தத்தில் சத்தமுண்டு. கப்பம் கட்டாதவருக்கு கிடைக்கும் அப்பத்தினால் பயனில்லை. ஆனால் அப்பம் கிடைத்தவருக்கு விதிக்கப்படும் கப்பத்தினால் பயனுண்டு. (இப்படியே பேசிக்கொண்டு போகிறார்.) ஆகையால் இதைக் குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப் போகிறோம். (கழிப்பறையை எப்போது கட்டுவோம் எனச் சொல்வதில்லை.)
கேள்வி: ஐயா, பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களை வைத்து கழிப்பறையைச் சுத்தம் செய்வதாகத் தகவல்கள் வருகின்றனவே...
சொல்லின் செல்வர்: மாணவர்கள் தமிழ்நாட்டின் மாணிக்கங்கள். அவர்கள் இந்த அரசுக்காக காணிக்கைகள். யார் இங்கே ஆட்சியில் இருக்கிறது என்று தெரியாமல் இப்படியெல்லாம் செய்வீர்களா? இதையெல்லாம் பொறுப்போம் என நினைத்து தருக்கம் செய்வோரின் நாவை நறுக்கென்று துண்டிப்போம். அதைச் சிந்திப்போம், நிந்திப்போம், அடுத்து சந்திப்போம், திதோம் திதோம் திதோம். ஆகையால் இதைக் குறித்த தகவல்களை வாங்கி ஆய்வு செய்ய உடனே சொல்கிறேன். (ஏன் அப்பள்ளிகளுக்கு துப்புரவுப் பணிக்கு நிதி ஒதுக்கவில்லை என்று பதில் சொல்லவில்லை.)
எல்லா கல்விப் பிரச்சினைகளையும் ராஜ்மோகன் ஒரு டி.ஆர் படக் காட்சியாக மாற்றிவிடுகிறார். கேட்டுக் கொண்டிருப்போருக்கு விரைவில் பைத்தியம் பிடித்து ஓடுவதால் பிரச்சினையும் தீர்ந்தது என முடிவு செய்கிறார். பள்ளிக் கல்வித் துறையைப் புரிந்துகொள்ள கல்வியியல் குறித்த புரிதலும் நடைமுறை அணுகுமுறையும் அவசியம். மொக்கை கவிதை சொல்வதல்ல. கவிதை மொக்கையென்றால் கவிஞரால் பயனில்லை. ஆனால் அமைச்சரே மொக்கைக் கவிஞரென்றால் அந்த அமைச்சகத்தாலே பயனில்லை. ஐயோ எனக்கே பைத்தியம் பிடிக்குதே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...