விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தி இந்த இளைஞர்களுடன் நிற்க வேண்டும். ஏனென்றால் ஹிட்லரை அவரது ஆரம்ப காலத்தில் எதிர்க்கட்சியினர் சற்று மென்மையாக எதிர்கொண்டார்கள். அலட்சியமாக எடுத்துக் கொண்டார்கள். அதன் விளைவு மிக மோசமாக இருந்தது. பாசிஸ்டுகள் அடிப்படையில் பயந்தாங்கொள்ளிகள், ஆனால் கொடூரர்கள். அதாவது துணிச்சலற்ற குரூர மனம் படைத்தவர்கள் அவர்களைத் துணிந்து எதிர்க்காவிட்டால் மிக மிக மோசமான செயல்களைச் செய்வார்கள். எதிர்த்தால் பின்வாங்குவார்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் எதிர்பாராத தீமையொன்றைச் செய்வார்கள். மீண்டும் பதுங்குவார்கள். ஹிட்லரின் வரலாறு இதுதான். விஜய்யின் வேடிக்கையான கேளிக்கையான பிம்பத்தை வைத்து அவரை யாரும் எடை போடக் கூடாது. அவரது இயல்பின் ஆழத்தில் துளி கூட இரக்கமற்ற, யாரிடமும் அன்பற்ற வெறுப்பின் வடிவம் அவர். பிறரை நேசிக்க இயலாத அவரைப் போன்ற ஆட்சியாளர்கள் மிக மோசமான கொடுங்கோலர்களாக மட்டுமே இருப்பார்கள். தாம் செய்வது தவறென்று கூட அவர்களின் மண்டைக்குள் கடைசி வரை ஏறாது. இயல்பான மக்களுக்குள்ள குற்றவுணர்ச்சி, இரக்கம், பிறரது நிலையைப் புரிந்துகொள்ளும் கற்பனை விஜய்யைப் போன்றோருக்கு இராது. இவரையெல்லாம் கண்டிப்பதில் அர்த்தமில்லை.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்