செய்தி: இந்தியாவின் முக்கிய மின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்க நான்கு சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளது. என் கருத்து: 2020இல் லடாக்கை சீனப் படையினர் ஆக்கிரமித்ததுடன் இந்திய வீரர்களைத் தாக்கிக் கொன்றார்கள். இதன்பிறகே சீன எதிர்ப்பு இந்தியாவில் குறிப்பாக இணையதளங்களில் வலுத்தது. அப்போது அமேசானில் பொருட்களின் ரெய்வ்யூக்களில் தொடர்ச்சியாக தேசபக்தர்கள் தோன்றி "இது சீனப் பொருள். இதை எதிர்க்க வேண்டும்" என்பார்கள். ஆனால் மோடியின் அரசு சீன எதிர்ப்பை பிடிக்காத மனைவியை பார்க்கும்போதெல்லாம் டார்லிங் எனக் கொஞ்சுகிற கணவரைப் போலத்தான் கையாண்டது. போகப்போக சீன எதிர்ப்பை அது கைவிட்டது. பல சீனப் பொருட்களே நம் சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் அமெரிக்காவுக்கு கடும் எதிரியாக ஆசிய ராட்சசனாக சீனா உருவாகி வந்ததால் மோடி கொஞ்சம் தயங்கித் தயங்கித்தான் சீனாவைக் கையாண்டார். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் டிரம்பிடம் போய் வணக்கம் வைத்தார், கட்டிப் பிடித்தார், வாய்நிறைய சிரித்தா...