முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆடும், மாடு மேய்க்கும் அரசு வேலை

  இன்று வேளாண் பொருளாதாரக் கட்டமைப்பு இந்தியா முழுக்கவே நிலைகுலைந்து வருகிறது. ஆனாலும் தானிய உற்பத்தி குறையவில்லை. காய்கறி விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது அரசு காய்கறிகளுக்கான குளிர் வைப்பறைகளை அமைத்துத் தருவதையோ அடிப்படையான பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதையோ உத்தரவாதம் செய்யவில்லை. நீர் வளமும் எல்லா மாநிலங்களிலும் குறைந்து கொண்டே போகிறது. அதற்கும் அரசு சுற்றுச்சூழலைப் பிரதானப்படுத்தாததே காரணம். ஒரே நல்ல விசயம் ஒரு அடிப்படை விலையை தானியங்களுக்கு நிர்ணயித்து அரசு கொள்முதல் பண்ணுவதே. இதுவும் கூட விவசாயத்தைக் காப்ப்பாற்ற அல்ல, மக்கள் பசியில் வாடி பஞ்சம் வரலாகாதே என்பதற்காகத்தான். இந்தியா இன்னும் முழுமையான ஒரு நகர்மய, தொழிலுற்பத்தி சார் நாடாக மாறவில்லை. அதற்கே இந்த கதி. அடுத்த சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட் விவசாயம் இங்கு வலுக்கும் என்பது என் கணிப்பு. அதாவது இதை பாஜகவால் செய்துதர இயலவில்லை எனில் கார்ப்பரேட்டுகள் அடுத்து வரும் அரசைக் கொண்டு செய்ய வைக்கும். ஏனென்றால் வேளாண் மக்கள் தொடர்ந்து நகரங்களுக்குப் பயணித்து வேலை தேடுவதும் நிலங்கள் ரியல் எஸ்டேட...

தொந்தரவில்லாத ரைட்டர்

  யாருக்கும் தொந்தரவு கொடுக்காத விதம் ரைட்டர்கள் இருப்பது நல்லது என ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'தொந்தரவு' என்றால் என்னவென்று நான் கேட்டபோது அவர் கருத்து சொல்வது, மறுப்பது, எதிர்ப்பது, கேள்வி கேட்பது, மோதல் அணுகுமுறையைக் கொள்வது, கருத்தாதிக்கம் செய்வது என்றார். எனக்கு அவர் சொல்வதில் சற்று நியாயம் இருப்பதாகத் தோன்றியது - எல்லாருக்கும் அடக்கமாக ஒருவர் இருக்கும்போது அவரால் வாசகர்களுக்கோ சூழலுக்கோ பயன் குறைவுதான். ஆனால் அவர் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குகிறார். நமது கூட்டங்களில் இன்று அத்தகையோரின் தேவையே அதிகம். இதைத் தவறென்று சொல்ல முடியாது. ஏனென்றால் இன்று இலக்கிய கூட்டங்கள் ஒருவித சமூகமாக்கல் தளங்களாகி விட்டன. லயன்ஸ் கிளப், நண்பர்கள் சந்திப்பு, சட்டசபை எல்லாமே இப்படி ஆகிவிட்டது. இலக்கியக் கூட்டங்களும் மேற்தட்டு, மேல்மத்திய சமூகத்தினர் வரும் இடமாகையால் அங்கும் அவரவர் வந்து தத்தமது அனுபவங்களைச் சொல்கிறார்கள். அதைத் தாண்டி பிற படைப்புகளை விமர்சிப்பது, கருத்துக்களைச் சொல்வது, மதிப்பீடுகளை வெளிப்படுத்துவது, விவாதிப்பது அனுமதிக்கப்படுவது இல்லை. இதை நான் கற்பனையாகச் சொல்வதில்லை - நீங...

வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா: அதி-புத்திசாலித்தன யுக்தியும் விளைவும்

  எதிரியை யுக்திபூர்வமாகக் கையாள்வது என்று சொல்வார்கள். இதுவரைக்கும் பாஜகவை பல கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனங்கள் அவ்வாறுதான் நடத்தி வந்தார்கள் என்பது என் அவதானிப்பு. தொடர்ந்து கிறிஸ்துவ சிறுபான்மை நிறுவனங்களில் படித்தும் பணியாற்றியும் வந்தவன் எனும் நிலையில் நான் இதை அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் - இரட்டை கோபுரத் தாக்குதல் நடந்தபோது என் வகுப்பில் அமெரிக்காவில் பலியானவர்களுக்காக பிரார்த்தனை பண்ணினார்கள். எதுக்குடா அவங்களுக்காக நீங்க பண்றீங்க என யோசித்தபோதே அப்போதிருந்த அரசியல் விளங்கியது: அப்போது உலகம் முழுக்க கிறிஸ்துவர்களில் ஒரு பகுதியினர் யூத ஆதரவு, இஸ்லாமிய எதிர்ப்பு எனும் வெளியுறவு யுக்தியை மதசார்பாக வகுத்துக் கொண்டனர். பாஜக ஆட்சிக்கு வந்து இரண்டாவது முறை ஒன்றியத்தில் தொடர்ந்து வென்றபோது பல கிறிஸ்துவ நிறுவனங்கள் வெளிப்படையாகவே பாஜக ஆதரவு என நிலைப்பாடு எடுத்தன. இந்துத்துவாவை எதிர்ப்பது அரசை எதிர்ப்பதாகிவிடும், சிறுபான்மை அரசியலைக் கூடப் பேசக் கூடாது என்றே அவர்கள் மறைமுக தணிக்கையை கல்லூரி, பள்ளிகளில் நடைமுறைப்படுத்தினர். இது பயத்தினால் அல்ல, பாஜகவின் கூட்டு சக்தியாகத் தாம் மாற...

தமிழக டம்மி அரசு

  தமிழ்நாட்டு பட்ஜெட் கிட்டத்தட்ட ஒரு தேர்தல் அறிக்கையைப் போலவே உள்ளது. பல்வேறு கனவுத்திட்டங்கள், நனவுலகுக்கு வருவதற்கன நிதி ஒதுக்கீடு இல்லாத நிலை. அதுவும் முழுக்க முழுக்க சோ கால்ட் சமூக நீதித் திட்டங்களை வைத்து காதில் பூ சுற்றியிருக்கிறார். இவ்விசயத்தில் விஜய்க்கும் வேறு சில மாநில முதல்வர்களுக்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிட வேண்டும்: சில மாநிலங்கள் மட்டுமே இன்று வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கிறார்கள். ஒன்றிய அரசு கூட சமூக நீதி எனும் பெயரில் ஏழைகளுக்கு ஆறுதல் உதவித் தொகைகளை பல்வேறு வழிகளில் கொடுத்து ஆறுதல்படுத்தவே செய்கிறது. ஏனென்றால் இன்னொரு பக்கம் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. கட்சிகள் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும் தேர்தலில் தப்பிப் பிழைக்கவும் தங்க மோதிரம் தருகிறேன், பத்து சிலிண்டர் தருகிறேன், பைக் வாங்கித் தருகிறேன் என்று என்னென்னமோ ஆசை காட்டிக் கொண்டே ஆட்சிக்கு வருகின்றன. தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேட்டால் தலைசுற்றுகிறது. தமிழ்நாட்டுடன் பத்து மாநிலங்களின் நிதியைச் சேர்த்தால் மட்டுமே அவற்றை நிறைவேற்ற முடியும். பட்ஜெட்டிலும் இவ்வாக்குறுதிகளி...

ஜெனசிஸ்

  குத்துச்சண்டைப் பயிற்சியை கடந்த ஆண்டின் துவக்கத்தில் தொடர முடியாத நிலை அலுவலக வேலைப்பளு அதிகமானதால் ஏற்பட்டது. அதனால் வீட்டில் இருந்து பயிற்சி செய்து கொண்டிருந்தேன். அப்போது கூட சில தவறுகள் செய்து லேசான தோள் காயம் ஏற்பட்டது; மூன்று வாரங்கள் வலது தோளை குத்துச்சண்டைக்கும் எடை தூக்கும் பயிற்சிக்கும் பயன்படுத்தக் கூடாது என்றார்கள். அதனால் நான் இடதுகையால் மட்டுமே தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். காயத்தில் இருந்து மீண்டு வந்த பின்னர் நான் ஒன்றைக் கற்றுக் கொண்டேன் - குத்துச்சண்டைக்காக தோளை வலுப்படுத்த தனியாகப் பயிற்சி எடுக்க வேண்டும். தினமும் அதில் கவனம் செலுத்துவது, நாவல் எழுதுவது, புது வேலை தேடுவது என என் மாலைப் பொழுதுகள் போயிற்று. பெங்களூரில் இருந்து மைசூர் வந்தபோது இங்கு நேரம் கிடைத்தாலும் சரியான பயிற்சியாளர்கள் கிடைக்க மாட்டார்களே என வருத்தமாக இருந்தது. நான் நினைத்தது சரிதான். ஒரு பக்கம், இது பயங்கரமாக இறுகிப் போன ஊர். சுலபத்தில் பயிற்சி தேடி வருவோரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். போய்க் கேட்டுவிட்டு காத்திருக்க வேண்டும். இன்னொரு பக்கம், மைசூரில் எம்.எம்.ஏதான் பிரபலம். குத்துச்சண்டைக்கு ...

மன்னிப்பு கேள் மானிடா

  பிரதமர் மோடியின் காணொளியொன்று பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டது. அதில் அவர் தேர்வுத்தாள் கசிவைக் குறித்து கவலை தெரிவித்து என்னென்னமோ பேசியிருந்தார். ஒரு பக்கம் மனம் கசியப் பேசிவிட்டு இன்னொரு பக்கம் போலிசாரை விட்டு மாணவர்களை அவர் பெல்லட் குண்டு தாக்குதல், லத்தி சார்ஜ் பண்ணியதால் இந்த அணுக்கம் காட்டும் காணொளி அவரை இளைஞர்களிடம் இருந்து அகலத் துரத்தியது. அவர்கள் இவரை பயங்கரமாகக் கலாய்த்து டுரோல் பண்ண "பிராண்ட்ஸ்" எனும் அவரது அழைப்பு தேசிய கேலிச் சொல்லானது. இந்த களேபரத்துக்கு இடையில்தான் பேஸ்புக் இரவு 12: 30க்கும் காலை 5 மணிக்கும் இடையில் அவரது காணொளியைத் தூக்கியது. இது தற்செயலாக நடந்த ஒரு தொழில்நுட்பப் பிழை என்று மெட்டா நிர்வாகம் விளக்கம் அளித்தாலும் பாஜக அதை ஏற்காமல் இம்மாதம் 3ஆம் தேதி மெட்டா நிர்வாகிகளை அழைத்து இன்னும் மூன்று நாட்களுக்குள் மார்க் ஸுக்கர்பர்க் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், இல்லாவிட்டால் பேஸ்புக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்க்கிறார்கள். அந்த நள்ளிரவு வேளை அவரது காணொளி காணாமல் போனதால் என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்க முடியும்? அதை ஒரேயடியாகத் தூக...

"சின்னச் சின்ன ஆசை" எனும் கற்பனை

  நண்பர் பலரும் பேஸ்புக்கில் பாராட்டியிருந்ததைப் பார்த்துதான் இப்படத்தைப் பார்த்தேன். ஒரு விசயம் உண்மை - ரொம்ப நுட்பமான ஒரு உளவியல் அவதானிப்பை ஆண்-பெண் உறவு சார்ந்து வைத்திருக்கிறார்கள். அதேநேரம், கதைக்குள் பெரிய ஒரு ஓட்டை உள்ளது. இரண்டையும் பார்ப்போம். நாயகி 53 வயதான லீலா. எதற்காக வாழ்க்கையை வாழ்கிறோம் எனப் புரியாமல் வாழ்ந்ததன் அலுப்பும் சோகமும் ததும்ப நடக்கும் பெண். தன்னை விரும்பாத கணவன், தன்னை நேசிக்காத குடும்பம், தன் நடனத் திறனை ரசிக்காத குடும்பம் எனும் புகார்கள் கொண்ட பெண். கணவர் இறந்த பின்னும் இதையெல்லாம் தனக்குள் அடக்கி வாழும் அவருக்கு கிடைக்கும் ஒரு அண்டை வீட்டுப் பெண் வாரணாசியின் அழகை வர்ணிக்க அதைக் காணும் விருப்பத்தில் வருகிறார். இவருக்கு நேரெதிரான பாத்திரம் நாயகன் - மாதவன். இவருக்கு அவரைவிட வயது அதிகம். ஆனால் தன் மனைவியை இளம் வயதில் இழந்த துக்கத்தையும் மீறி மகிழ்ச்சியாக வாழ முயல்பவர். அவருக்குள்ளும் ஒரு பொருத்தமான காதலைப் பின்னால் காண இயலவில்லை எனும் வருத்தம் உண்டு. இருவரும் இணைவது இப்படி ஒரு தேய்வழக்கான கதையமைப்பால் உறுதிபடுத்தப்படுகிறது. இந்தக் கதையின் சிறந்த பகுதி லீல...

கொரில்லா ஆதரவாளர்கள்

  உதயநிதியைக் கண்டித்து ஏன் தவெகவினர் தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் நடத்தவில்லை? ஏன் திமுகவால் முடிந்தது? தவெக அடிப்படையில் ஒரு கட்சியல்ல. அது ஒரு சற்றே பெரிய ரசிகர் மன்றம். அவர்களுடைய நோக்கம் தம் கட்சியை ஒரு மரபான கட்சியாகக் கட்டமைப்பது அல்ல. ஆகையால் அவர்கள் தெருவில் இறங்கி திரண்டு தம் குரலைப் பதிவு பண்ண மாட்டார்கள். விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு கூட அந்தந்த ஊர்களில் இருந்து அல்ல வேறு ஊர்களில் இருந்தே பெருந்திரளாக பணம் கொடுத்து பார்வையாளர்களை அழைத்து வருகிறார்கள். அவர்கள் ரசிகர்களாகவும் இருக்கக் கூடும். அவர்களில் சிலர் தமக்கு உள்ளே செல்ல சீட்டுக் கிடைக்கவில்லை என்று அழுது மன்றாடியதைப் பார்த்திருக்கிறோம். டிஜிட்டல் உலகில் கூட எங்கே இருக்கிறார்கள் எனக் கண்டடைவது சிரமம். இன்ஸ்டா ஆதரவளர்கள் கூட கூலிக்கு அமர்த்தபட்டவர்களே என்கிறார்கள். திமுகவைப் போல இவர்களுக்கு நேரடி அரசியலில் நம்பிக்கையோ விருப்பமோ இல்லை. இவர்கள் அதற்குப் பதில் ஏற்கனவே நேரடி அரசியலில் இருக்கிற மாற்றுக் கட்சிக்காரர்களை தம் கட்சிக்குள் இழுத்து தேர்தலில் இடமளித்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசியல்வாதிகளை இக்கட்சி ஒரு...

ஸோம்பியாதல்

  எனக்கு வாழும் ஆசை இருக்குமளவுக்கு இப்போதெல்லாம் வாழாதிருக்கும் ஆசையும் சரிசமமாக இருக்கிறது - வாழாதிருப்பது குறித்த பயமும் இருக்கிறது. இது என்னை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்துகிறது. முன்பு எனக்கு நிறைய தெளிவும் நம்பிக்கையும் இருந்தது. அடுத்தடுத்து எதையாவது புதிதாகச் செய்யவும் என்னை மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. நான் என்னையே கண்டுபிடித்துக் கொண்டும் இருந்தேன். இப்போது எழுத்தில் தவிர வெளியே அது சாத்தியப்படுவதில்லை. வெளியுலகம் ஸ்தம்பித்ததைப் போலிருக்கிறது. அட, எனக்கு மட்டும்தான் என்றால் பலருக்கும் அப்படித்தான் இருக்கிறது. வாழும் இன்பம், எழுதும் இன்பம் எப்போதும் உள்ளதைப் போல இப்போதும் இருக்கிறது. ஆனால் எதுவோ ஒன்று விட்டுப் போனதைப் போல இருக்கிறது. அதனாலே ஒரு அசட்டு தைரியம். கண்ணில்லாதவர் அங்குமிங்கும் நடப்பதைப் போல. அண்மையில் ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கு அவரை ஒட்டி ஒரு பெரிய பிரச்சினை வெடித்திருந்தது. அவருக்கு அந்த வலியைப் பொறுக்க முடியாமல் உடல் முடியாது போய்விட்டது. எனக்கு அதைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது - என்னால் யாரை வைத்தும் பிரச்சினையை உண்டு பண்ண முடிவதில்லை. எனக்...