புனைவெழுதப் பயிற்சியளிக்கும் இணைய வழிப் பட்டறைகளில் முதல் பட்டறை அடுத்த ஞாயிறு அன்று காலை பத்து மணிக்கு நடக்கிறது. இதில் கலந்து கொள்வது மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம். அவர்கள் இந்த கூகிள் பார்ம் தொடுவழிக்குப் போய் அதில் தம் விபரங்களைக் கொடுத்தால் கூட்டத்திற்கான தொடுவழியை மின்னஞ்சல் செய்வேன். என் மாணவர்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அவர்கள் வந்து விடுவார்கள். நீங்கள் எழுத ஆர்வம் கொண்ட மாணவராக இருந்தால் பயன்படுத்துங்கள். உங்கள் நண்பர்கள், பரிச்சயக்காரர்கள் இடையே அத்தகைய மாணவர்கள் உண்டெனில் அவர்களிடம் சொல்லுங்கள்: https://forms.gle/46fbD5ppzDhksYYw6