இன்று வேளாண் பொருளாதாரக் கட்டமைப்பு இந்தியா முழுக்கவே நிலைகுலைந்து வருகிறது. ஆனாலும் தானிய உற்பத்தி குறையவில்லை. காய்கறி விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது அரசு காய்கறிகளுக்கான குளிர் வைப்பறைகளை அமைத்துத் தருவதையோ அடிப்படையான பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதையோ உத்தரவாதம் செய்யவில்லை. நீர் வளமும் எல்லா மாநிலங்களிலும் குறைந்து கொண்டே போகிறது. அதற்கும் அரசு சுற்றுச்சூழலைப் பிரதானப்படுத்தாததே காரணம். ஒரே நல்ல விசயம் ஒரு அடிப்படை விலையை தானியங்களுக்கு நிர்ணயித்து அரசு கொள்முதல் பண்ணுவதே. இதுவும் கூட விவசாயத்தைக் காப்ப்பாற்ற அல்ல, மக்கள் பசியில் வாடி பஞ்சம் வரலாகாதே என்பதற்காகத்தான். இந்தியா இன்னும் முழுமையான ஒரு நகர்மய, தொழிலுற்பத்தி சார் நாடாக மாறவில்லை. அதற்கே இந்த கதி. அடுத்த சில பத்தாண்டுகளில் கார்ப்பரேட் விவசாயம் இங்கு வலுக்கும் என்பது என் கணிப்பு. அதாவது இதை பாஜகவால் செய்துதர இயலவில்லை எனில் கார்ப்பரேட்டுகள் அடுத்து வரும் அரசைக் கொண்டு செய்ய வைக்கும். ஏனென்றால் வேளாண் மக்கள் தொடர்ந்து நகரங்களுக்குப் பயணித்து வேலை தேடுவதும் நிலங்கள் ரியல் எஸ்டேட...