நான் "ரசிகன்" என்றொரு நாவல் எழுதினேன். அதில் நாயகன் ஒரு தீவிர கம்யூனிஸ்ட், தீவிர எழுத்தாளன், சிறுபத்திரிகையாளன். அவன் இறுதியில் ரஜினி ரசிகனாகி இலக்கியத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகி விடுவான். லும்பன் கலாச்சாரத்தில் கலப்பான். அப்போது அது ஒரு குறியீடாகத்தான் கண்டேன். ஆனால் இப்போது என் கண்முன்னே அதன் சாயல்களைப் பார்க்கிறேன். இதில் சில சிக்கல்கள் எழுகின்றன: ஏற்கனவே தவெகவின் எழுச்சிக்குப் பின் சில தீவிர படைப்பாளிகள் விஜய் ரசிகர்களாகி ஆதரிக்கிறார்கள். தனுஷ் கட்சி ஆரம்பித்து அடுத்த தேர்தலில் நிற்பது உறுதியாகிவிட்டது. இனி சில எழுத்தாளர்கள் தனுஷ் ஆதரவாளர்கள் ஆவார்கள். அவர்கள் இடையே மோதல் ஏற்படும். அதன் பிறகு வேறு சில நடிகர்களும் களத்துக்கு வருவார்கள். த்ரிஷா அரசியலுக்கு வந்தால் இதைவிட பெரிய ஆதரவுப் படை அவருக்கு எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து தோன்றுவார்கள். நடிகையர் வரவு த்ரிஷாவுடன் நிற்கும் என்றும் சொல்ல இயலாது. ஏனென்றால் பெண்களின் பங்களிப்பு அரசியலில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கருத்துகள்