முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கம்பீரின் முட்டாள்தனம்

 


இரண்டாவது டெஸ்டை இலங்கை ஒருவழியாக டிரா செய்யப் போகிறார்கள். இலங்கை 191 ஓட்டங்கள் லீட் எடுத்து விட்டார்கள். இந்தியா சுலபத்தில் வென்றிருக்க வேண்டிய போட்டி இது. மழை பெய்யும் புயலடிக்கும் எனப் பயந்து இந்தியா இலங்கையை பாலோ ஆன் செய்யக் கேட்டது. அது ஒரு மகா முட்டாள்தனம். கடைசி வரை துளி கூட பெய்யவில்லை.

ஒருபோதும் பருவ நிலையைக் கணக்கில் கொண்டு கிரிக்கெட் ஆடக் கூடாது. ஆட்டத்தின் தாளயலத்துக்கு ஏற்பவே முடிவெடுக்க வேண்டும். நேற்று இந்தியா 50-70 ஓவர்கள் ஆடியிருந்தால் பந்து வீச்சாளர்கள் ஓய்வெடுத்திருப்பார்கள், 450க்கு மேல் இலக்கை வைத்து இலங்கையைத் தடுத்தாட வைத்து வீழ்த்தியிருக்க முடியும். கம்பீரின் இந்த தொடர்ந்து பந்து வீசும் முடிவால் பந்து வீச்சாளர்கள் களைத்துப் போய் நேற்றும் இன்றும் சொதப்பினார்கள். இலங்கை மீது அழுத்தமே இல்லை. காலத்தை நீட்டித்தால் போதும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இலக்கு ஏற்படுத்தும் நெருக்கடி இல்லை. கடைசி நாள் ஆடுதளத்தில் 70-100 ஓட்டங்கள் அதிகமாக எடுத்தால் கூட இலக்காக வைத்து இந்தியாவைக் கடைசியில் மட்டையாட வைப்பதன் அனுகூலம் அவர்களுக்கு இருக்கும் எனத் தெரியும். இதனாலே அவர்கள் நேர்மறையாக ஆடினார்கள். 450 இலக்கைக் கொடுத்திருந்தால் இப்படியான நம்பிக்கைகள் இல்லாமல் ஆடுகிற அழுத்தம் ஏற்பட்டிருக்கும். கம்பீரைப் போன்ற மரமண்டையை யார் டெஸ்ட் பயிற்சியாளராக்கினார்களோ அவர்கள் அவரை விட பெரிய மரமண்டையராக இருப்பார்கள்.
கில்லின் தலைமையில் இது ஒரு கரும்புள்ளி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.