முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முற்றதிகாரத்தின் முன் படைப்பாளிக்கு வரும் தடுமாற்றங்கள்

  டானியல் கெல்மானின் "இயக்குநர்" நாவல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிக்களின் கீழ் அவர்களுடைய நிதியைப் பெற்றுப் படமெடுத்த ஒரு தலைசிறந்த இயக்குநரான பாப்ஸ்ட் என்பவரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அவர் எப்படி அறத்தைக் குறித்துக் கவலைப்படாமல், வதை முகாம்களில் மக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க கலையை முன்னெடுப்பதே ஒரு கலைஞனின் பணி எனும் லட்சியத்துடன் செயல்பட்டார் என்பதை நகைமுரணுடன் சித்தரிக்கிறது. ஒருவிதத்தில் இந்நாவல் இன் று பலருக்கும் பொருத்தமானதாகப் படும் - இன்றைய காலம் அபடி. இன்று பல படைப்பாளிகள் நடுங்கிப் போய்த்தான் இருக்கிறார்கள். முதலீட்டிய சக்திகளும் வலதுசாரி ஆட்சியாளர்களும் கைகோக்கும்போது படைப்பாளிகள் தமக்கு முடிவெடுக்க சுதந்திரமே இல்லையென உணர்ந்ந்து ஒரேயடியாக அடிபணிவார்கள். அடிபணிவதென்றால் ஆட்சியாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வதல்ல. மௌனம் காப்பது. இந்த மௌனத்துக்கு அவர்கள் மனம் பலவித நியாயங்களைக் கற்பிக்கும். கலைஞர்கள் அரசியல் பேசக் கூடாது, அரசியலில் அக்கறை கொள்ளக் கூடாது, தன்னுடைய கலையில் கவனம் செலுத்தி அதில் ஆழம் காண்பதே கலைஞர்களின் இலக்கு என இவர்கள் நம்புவா...

கதையமைப்பு எனும் நுட்பம்

  ஒரு நாவலையோ நீண்ட கதைகளையோ ஒரு மன எழுச்சியில் பரபரப்பாக எழுதி முடிக்கலாம். எழுதத் தொடங்கி எங்கோ திசையைத் தொலைத்து விடலாம். அதேநேரம் இந்த உணர்வெழுச்சியானது ஒரு கவித்துவமான வரைபடத்தின் மீதே தோன்றி நம்மை நடத்துகிறது. இந்த வரைபடத்தை ஒரு குறியீடு அல்லது உருவகம் என்று புரிந்துகொள்ளலாம். இதுதான் கதையமைப்பு என்றும் சொல்லப்படுகிறது. கதையமைப்பு உள்ளிருந்து தோன்றாதபோது நம்மால் வெளியில் இருந்தும் உருவாக்க முடியும். இப்போது நாம் உருவாக்கியுள்ள கதையமைப்பு நம்மைத் தூண்டி ஆவேசப்பட வைக்கும். அதுவே நம் எழுத்தைச் செலுத்தும். இந்த நுட்பமானது ஒரு பார்முலாவை வைத்து எழுதுவது எப்படி என்பது அல்ல. மாறாக கதையைக் குறித்துச் சிந்தித்து அதைக் கொண்டு நமக்குள் இயங்கும் ஒரு ஆதாரமான உணர்வைக் கிளர்த்துவது, ஒரு சிந்தனையை வெளியே தோண்டி எடுப்பது. இதனாலே கதையமைப்பைத் திட்டமிடுவது ஒரு அடிப்படையான புனைவுப் பயிற்சி என பல படைப்பாளிகள் நினைக்கிறார்கள். இதையே வரும் ஞாயிற்றுக் கிழமை நான் பயிலரங்கில் சொல்லித் தர இருக்கிறேன். விருப்பமுள்ளோர் ஒரு சிறு கட்டணத்தைச் செலுத்தி விபரங்களை கூகிள் படிவத்தில் சேர்த்து விட்டுக் கலந்து கொள...