டானியல் கெல்மானின் "இயக்குநர்" நாவல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிக்களின் கீழ் அவர்களுடைய நிதியைப் பெற்றுப் படமெடுத்த ஒரு தலைசிறந்த இயக்குநரான பாப்ஸ்ட் என்பவரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அவர் எப்படி அறத்தைக் குறித்துக் கவலைப்படாமல், வதை முகாம்களில் மக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க கலையை முன்னெடுப்பதே ஒரு கலைஞனின் பணி எனும் லட்சியத்துடன் செயல்பட்டார் என்பதை நகைமுரணுடன் சித்தரிக்கிறது. ஒருவிதத்தில் இந்நாவல் இன் று பலருக்கும் பொருத்தமானதாகப் படும் - இன்றைய காலம் அபடி. இன்று பல படைப்பாளிகள் நடுங்கிப் போய்த்தான் இருக்கிறார்கள். முதலீட்டிய சக்திகளும் வலதுசாரி ஆட்சியாளர்களும் கைகோக்கும்போது படைப்பாளிகள் தமக்கு முடிவெடுக்க சுதந்திரமே இல்லையென உணர்ந்ந்து ஒரேயடியாக அடிபணிவார்கள். அடிபணிவதென்றால் ஆட்சியாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வதல்ல. மௌனம் காப்பது. இந்த மௌனத்துக்கு அவர்கள் மனம் பலவித நியாயங்களைக் கற்பிக்கும். கலைஞர்கள் அரசியல் பேசக் கூடாது, அரசியலில் அக்கறை கொள்ளக் கூடாது, தன்னுடைய கலையில் கவனம் செலுத்தி அதில் ஆழம் காண்பதே கலைஞர்களின் இலக்கு என இவர்கள் நம்புவா...