முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முற்றதிகாரத்தின் முன் படைப்பாளிக்கு வரும் தடுமாற்றங்கள்

 

டானியல் கெல்மானின் "இயக்குநர்" நாவல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிக்களின் கீழ் அவர்களுடைய நிதியைப் பெற்றுப் படமெடுத்த ஒரு தலைசிறந்த இயக்குநரான பாப்ஸ்ட் என்பவரின் வாழ்க்கையைப் பேசுகிறது. அவர் எப்படி அறத்தைக் குறித்துக் கவலைப்படாமல், வதை முகாம்களில் மக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க கலையை முன்னெடுப்பதே ஒரு கலைஞனின் பணி எனும் லட்சியத்துடன் செயல்பட்டார் என்பதை நகைமுரணுடன் சித்தரிக்கிறது. ஒருவிதத்தில் இந்நாவல் இன்
று பலருக்கும் பொருத்தமானதாகப் படும் - இன்றைய காலம் அபடி. இன்று பல படைப்பாளிகள் நடுங்கிப் போய்த்தான் இருக்கிறார்கள். முதலீட்டிய சக்திகளும் வலதுசாரி ஆட்சியாளர்களும் கைகோக்கும்போது படைப்பாளிகள் தமக்கு முடிவெடுக்க சுதந்திரமே இல்லையென உணர்ந்ந்து ஒரேயடியாக அடிபணிவார்கள். அடிபணிவதென்றால் ஆட்சியாளர்களுக்குப் பிரச்சாரம் செய்வதல்ல. மௌனம் காப்பது. இந்த மௌனத்துக்கு அவர்கள் மனம் பலவித நியாயங்களைக் கற்பிக்கும். கலைஞர்கள் அரசியல் பேசக் கூடாது, அரசியலில் அக்கறை கொள்ளக் கூடாது, தன்னுடைய கலையில் கவனம் செலுத்தி அதில் ஆழம் காண்பதே கலைஞர்களின் இலக்கு என இவர்கள் நம்புவார்கள். இது ஒரு தற்காப்புச் செயல்பாடு மட்டுமே.

அதேநேரம் கலைஞர்கள் தமது மௌனமான எதிர்வினையின் ஊடே தம் கருத்துக்களை மறைமுகமாகத் தெரிவிக்கவும் செய்வர். பாப்ஸ்ட் எப்படி தன் படங்களின் காட்சி மொழியில் சர்ரியலியலான பிம்பங்களை, முரண்பாடுகளை நுட்பமாகக் கொண்டு வருகிறார், அவை சர்வாதிகாரத்தை மக்கள் எதிர்கொள்வது குறித்த அவரது சித்தரிப்பாகவும் இருக்கலாம் என கெல்மான் காட்டுகிறார். ஒரு பக்கம் சரணடைதல், இன்னொரு பக்கம் தம்மளவிலான எதிர்ப்பு. இரண்டுக்கும் நடுவே படைப்பாளியாக அவர்கள் நீடிக்கிறார்கள். படைப்பாளிகளிடம் துணிவின்மை, தடுமாற்றம், முடிந்தளவுக்குப் போராடிப் பார்ப்பது ஆகிய குணங்கள் உண்டெனினும் ஒடுக்குமுறையின் காலத்தில் படைப்பாளிகள் போதுமான அளவுக்கு அதிகாரத்தை எதிர்ப்பதில்லை எனும் கருத்தும் மக்களிடம் வலுவாக உள்ளது. அவர்கள் இதனாலே சமூகப் பிரச்சினைகளில் எழுத்தாளரின், படைப்பாளியின் குரல் என்னவென இப்போதெல்லாம் கவனிப்பதில்லை. ஏனென்றால் பல வெற்றிபெற்ற படைப்பாளிகளைப் பொறுத்தமட்டும் அது நேரடியாக அரசின் குரலாகவே இருக்கிறது என மக்கலுக்குத் தெரியும்.
எனக்கு இந்நாவலில் வரும் ஒரு பகுதியைப் பற்றி இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. அது பிரசித்தமானது. இந்நாவலின் வாசகர்கள் தம் மதிப்புரைகளில் குறிப்பிடுவது. நாஜி ஜெர்மனியில் அப்போது இயங்கிய வாசகர் சந்திப்புகளை கெல்மான் பயங்கரமாகப் பகடி பண்ணியிருப்பார். அரசுக்கு, அரசின் கொள்கைக்கு இணக்கமான படைப்பாளிகள், கட்சிப் படைப்பாளிகளை மட்டும் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளும் இக்குழுவின் தலைமை அவர்களைப் பாராட்டும்படி எல்லாருக்கும் மறைமுக அழுத்தம் போட்டுக் கொண்டிருப்பார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை பாராட்டப்பட்ட படைப்பாளி இப்போது அவரது அரசியல் நிலைப்பாட்டால், ஹிட்லருடன் அவர்கள் விரோதம் பாராட்டியதால், அல்லது அவரைக் குறித்த ஹிட்லரின் கருத்து மாறிவிட்டதால் மட்டமான மோசமான படைப்பாளியாகக் கருதப்படுவார். அவரது பெயரைக் குறிப்பிடுவதையே தவிர்ப்பார்கள். இந்தப் புரிதல் அக்குழுவில் உள்ள வாசகர்களுக்கு முக்கியம் என நம்புவார்கள். யாராவது சூழலில் தோன்றும் இம்மாற்றங்களை கவனிக்காமல் பழைய பாராட்டுதலுக்குரிய எழுத்தாளரை இப்போதும் கொண்டாடினால் அவர் தேசவிரோதியாகக் கருதப்பட்டு விடுவார். அவரை உடனடியாக வதைமுகாமுக்கு அனுப்பிவிடவும் கூடும் என்பதால் எல்லாருமே அநியாயத்துக்கு எச்சரிக்கையாக இருப்பார்கள். இலக்கியம் வாசித்துப் பேசுவதே ஒரு வதையாக மாறிவிடும். அப்போதைய பிரச்சார அமைச்சர் கோயல்பல்சை நினைவுபடுத்தும் பாத்திரம் ஒருவர் சொல்வார்: "முன்பு கடுமையான விமர்சகர்கள் இருந்தார்கள். நாங்கள் ஒரு சட்டம் போட்டு இனிமேல் விமர்சனமே இல்லை, கலையை ரசித்துப் பாராட்டுவது மட்டுமே உண்டு எனச் சொன்னோம், அதன் பிறகு விமர்சகர்கள் காணாமல் போய்விட்டார்கள்". இதெல்லாம் எனக்கு இப்போது தமிழ்நாட்டில் பிரசித்தமாக உள்ள ஒரு இலக்கியக் குழுவை நினைவுபடுத்தியது. அவர்களும் தம் தலைவர் அங்கீகரித்து பட்டியலில் சேர்க்கும் படைப்பாளிகள் குறித்து கவனமாக இருப்பார்கள், அவர்களை மட்டுமே எழுத்தாளராக அங்கீகரிப்பார்கள், தலைவரின் பட்டியலில் உள்ள நூல்களைப் படிக்காமலே அவற்றைச் சிலாகித்து மேடையில் பேசுவார்கள், தலைவர் எதிர்க்கிற படைப்பாளிகளைத் தலைவரின் தர்க்கத்தைக் கொண்டே எதிர்ப்பார்கள், தமது வலைதளங்களில் தலைவரின் அனுமதியை ஒட்டிய படைப்பாளிகளை ரசிப்பார்களோ அன்றி ஒருபோதும் 'விமர்சிக்க' மாட்டார்கள். இவர்கள் இனவாதிகளோ மதவாதிகளோ அல்லாத இலக்கிய நாஜிக்கள். பாசிசத்தின் தனித்தன்மை அது தனக்கான நேரடியான நிபந்தனைகள் இல்லாத வெளிகளிலும், நாம் எதிர்பாராத சூழல்களிலும் முழுமையாகத் தோன்றி நம்மை அசரடிக்கும் என்பது.
இந்நாவலின் மையம் துணிச்சல்தான் - படைப்பாளிகள் ஒரு அசௌகர்யமான, அச்சமூட்டும் சூழலில் துணிச்சலைக் காட்டுகிறார்களா அல்லது ஒதுங்கி ஒளிகிறார்களா? முழக்கமிடுவதுதான், உயிரை மாய்ப்பதுதான் துணிச்சல் என்றில்லை. முடிந்தளவுக்கு வளையாமல் இருப்பது, கொஞ்சமாவது ரிஸ்க் எடுப்பது, தன் சுயலாபத்தை மட்டுமே சிந்தித்து முடிவெடுக்காமல் இருப்பதும் துணிச்சல்தான். அந்த அரசியல் ஏன் நெருக்கடியின் போது காணாமல் போகிறது என இந்நாவல் விசாரிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...