முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புனைவெழுதும் பட்டறைக்கான மொழி



அடுத்த மாதம் ஆறாம் தேதி நான் புனைவு எழுதும் பயிற்சிப் பட்டறையை ஆங்கிலத்திலேயே நடத்த இருக்கிறேன். சொல்லப் போனால் தொடர்ச்சியாக சில பட்டறைகளை இவ்வாறு புனைவெழுத்து குறித்த சின்னச்சின்னத் தலைப்புகளில் குறைந்த கட்டணத்தில் ஆங்கிலத்தில் நடத்தலாம் என இருக்கிறேன். என் உத்தேசம் தமிழைக் கடந்து உள்ள இளம் படைப்பாளிகளிடம் பயிற்சியை எடுத்துச் செல்வது. ஒரு தமிழ்ப் படைப்பாளியாக தமிழின் எல்லைகளைக் கடந்து செல்ல வேண்டும் எனும் விருப்பம் எனக்கு உள்ளது. நான் ஒரு ஆங்கில ஆசிரியராகவும் உள்ளது இதற்கு உதவுகிறது. கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு புனைவெழுதும் வகுப்புகளை நடத்திய அனுபவமும் உண்டு. இந்த எண்ணத்தை எனக்குள் விதைத்தவர் சாரு நிவேதிதா. அவரைப் பாருங்கள் இந்த வயதில் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுகிறார். நாவலை இரு மொழிகளில் பிரசுரிக்க நினைக்கிறார். ஏனெனில் ஆங்கிலம் வழி நாம் அடையக் கூடிய உலகம் மிகப் பெரிது.

அதே நேரம் நான் தமிழ்ப் புலத்துக்குள் இத்தனை ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வந்துள்ளதால் சட்டென விரிவான ஒரு வாசகப் பரப்பை ஆங்கிலம் வழியாக அடைய இயலாதுதான். நிறைய இளம் படைப்பாளிகள் தமிழுக்கு வெளியே என்னை அறியாதவர்கள். அவர்களுக்கு புனைவெழுதும் பயிற்சி தேவையுள்ளது எனினும் அவர்களைப் போய் எட்டும் புகழும் செல்வாக்கும் இப்போது என்னிடம் இல்லை. மெல்ல மெல்ல அதை உருவாக்க முடியும் என நம்புகிறேன். நமக்கென எந்த வழிகளும் இல்லாதபோது நாமே நமக்கான பாதைகளை உருவாக்க வேண்டும். இந்தப் பட்டறைகள் அதற்கானவையே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...