முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொந்தரவில்லாத ரைட்டர்

 

யாருக்கும் தொந்தரவு கொடுக்காத விதம் ரைட்டர்கள் இருப்பது நல்லது என ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். 'தொந்தரவு' என்றால் என்னவென்று நான் கேட்டபோது அவர் கருத்து சொல்வது, மறுப்பது, எதிர்ப்பது, கேள்வி கேட்பது, மோதல் அணுகுமுறையைக் கொள்வது, கருத்தாதிக்கம் செய்வது என்றார். எனக்கு அவர் சொல்வதில் சற்று நியாயம் இருப்பதாகத் தோன்றியது - எல்லாருக்கும் அடக்கமாக ஒருவர் இருக்கும்போது அவரால் வாசகர்களுக்கோ சூழலுக்கோ பயன் குறைவுதான். ஆனால் அவர் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குகிறார். நமது கூட்டங்களில் இன்று அத்தகையோரின் தேவையே அதிகம். இதைத் தவறென்று சொல்ல முடியாது. ஏனென்றால் இன்று இலக்கிய கூட்டங்கள் ஒருவித சமூகமாக்கல் தளங்களாகி விட்டன. லயன்ஸ் கிளப், நண்பர்கள் சந்திப்பு, சட்டசபை எல்லாமே இப்படி ஆகிவிட்டது. இலக்கியக் கூட்டங்களும் மேற்தட்டு, மேல்மத்திய சமூகத்தினர் வரும் இடமாகையால் அங்கும் அவரவர் வந்து தத்தமது அனுபவங்களைச் சொல்கிறார்கள். அதைத் தாண்டி பிற படைப்புகளை விமர்சிப்பது, கருத்துக்களைச் சொல்வது, மதிப்பீடுகளை வெளிப்படுத்துவது, விவாதிப்பது அனுமதிக்கப்படுவது இல்லை. இதை நான் கற்பனையாகச் சொல்வதில்லை - நீங்கள் இன்று நிகழும் கருத்தரங்குகள், கூட்டங்களில் தரப்படும் தலைப்புகளைப் பார்த்தால் புரியும். நீங்கள் சட்டசபையை எடுத்துக் கொள்ளுங்கள்: அங்கு rhetoric, polemics போன்ற அரசியல் கருவிகளை இப்போது பிரபாகர் அனுமதிப்பதில்லை. உடனே மைகை அணைத்து, அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறார் ('நடிகர்' என்பதால் விஜய்க்கு மட்டுமே விதிவிலக்கு). பாராளுமன்றத்தில் கூட ராகுல் காந்தி இந்துத்துவர்களை இடியட்ஸ் எனக் கலாய்க்கும் ஜோக்கைச் சொன்னார். தமிழ்நாட்டில் அது முடியாது.
கார்ப்பரேட் பாணியில் நடக்காத கூட்டங்கள் இதற்கு விதிவிலக்கு என்றாலும் பொதுவாக இன்று மலர்ந்து வரும் ஒரு சூழலைப் பற்றிச் சொன்னேன். இங்கு தொந்தரவில்லாத எழுத்தாளர்களே வரவேற்கப்படுகிறார்கள். தொந்தரவுக்கு இன்னொரு பொருள் தீவிரமான கருத்தியல், தத்துவம் பேசுவது, கலைச்சொற்களைப் பயன்படுத்துவது. வாழ்க்கையில் எதையுமே படிக்காமல் பப்புக்கு வருவதைப் போன்ற தோரணையில் சதா போனில் டூம் ஸ்குரோல் பண்ணிக் கொண்டு கூட்டத்துக்கு வருவோர் தாம் பொழுதுபோக்குவதற்கான ஒரு அர்த்தபூர்வமான பொழிப்புரைகளையும், ஸ்டான்ட் அப் காமிடிகளையுமே விரும்புகிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஒரு அயல்நாட்டுப் படைப்பாளியின் பெயரையோ ஒரு கோட்பாட்டாளரின் பெயரையோ குறிப்பிட்டால் பயந்து போவார்கள் என பேசுவோரும் ஒருங்கிணைப்பாளர்களும் நினைக்கிறார்கள். அதாவது குறிப்பிட்டாலும் அதையும் அவர்கள் தம் மூளையைக் கசக்காமல் ரத்தத்தைக் கொதிக்க வைக்காமல் லைட்டாக நைசாக அது இருக்க வேண்டும்.
இவர்களுக்கு ஏற்ப இன்று கூட்டங்களும் திட்டமிடல்களும் லாபியிங்கும் மாறிவிட்டன. எனக்கு இதைப் பார்க்கையில் மற்றொன்று நினைவுக்கு வந்தது - தாராளவாத முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளின் வீழ்ச்சியின் மற்றொரு பரிமாணம்தான் நாம் இன்று காணும் கணிசமான கூட்டங்கள். அங்கு status quoவை கேள்வி கேட்பது, விவாதிப்பது, யோசிப்பது அராஜகமாகக் கருதப்படும். நம் கண்முன்னாலே தமிழ் தீவிர இலக்கியச் சூழல் தொழில்முனைவோர் கூட்டம் போல மாறிவிட்டது.
இத்தொழில் முனைவோருக்கு என்று தரகர்களும் வந்துவிட்டார்கள். அவர்களும் தொந்தரவின்மையின் கொள்கை விளக்குகளாக இருப்பார்கள். அவர்கள் இருக்குமிடமே தெரியாது. எழுதவே மாட்டார்கள். ஆனால் இடங்களிலும் இருப்பார்கள். அவர்களிடம் போய் தொழில்முனைவோர் பேசி நல்ல பெயர் வாங்கினால் டக்கென வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு போவார்கள்.
இதனால் எல்லாம் என்ன பயன் என்றால் பொதுவாக பார்ட்டிகளால் என்ன பயன்? இவை மேலோட்டமாக சமூகத்தின் மேல்தளத்தில் நடந்து கொண்டே இருக்கும். கேரளாவில் சில எழுத்தாளர்கள் ஜனவரி மாதம் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள காரில் ஏறி நட்சத்திர ஓட்டலில் தங்கினார் என்றால் டிசம்பரில்தான் வீட்டுக்குத் திரும்பி வருவார் எனச் சொல்வார்கள். இப்படியே வருடக்கணக்கில் சுற்றிக் கொண்டு ஒரே தலைப்பில் உரையாடிக் கொண்டு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எப்படியாவது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டு இருப்பார்கள். இதற்கும் இலக்கியத்துக்கும் சம்மந்தமில்லை. இதெல்லாம் ஒரு ஜாலி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...