இலங்கையின் தினூஷா நல்ல மட்டையாளர்தான். மறுக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து மூன்று சதங்களும் கிட்டத்தட்ட 400 ஓட்டங்களும் ஒரே தொடரில் அடிக்கும் அளவுக்கு பிஸ்தா மட்டையாளர் அல்லர். அவருடைய பலவீனங்கள் அப்பட்டமானவை - அவருக்கு ஆப் சைடில் சரளமாக ஆட வராது. மிட் விக்கெட், ஸ்கொயர், ஸ்கொயர் லெக், பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்தான் எல்லா ஷாட்களும். அவர் vஇல் ஆடுவதும் இல்லை. அதாவது பந்தை 4-5வது குச்சிகளில் தொடர்ந்து வீசிக் கொண்டிருந்தால் அவர் அங்கிருந்து இழுத்து கால் பக்கம் அடிக்க முயல்வார். அதே நேரம் கேட்ச் கொடுக்கவும் வாய்ப்பதிகம். அதே போலத்தான் அவரால் சரியாக உடலை நோக்கி வரும் உயரப்பந்தை ஆட வராது. இதையெல்லாம் கணித்து அவருக்கு சரியான நீளத்திலும் திசையிலும் பந்து வீச இந்தியா முயன்றதே இரண்டாவது டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில்தான். அப்போதும் அவர்கள் அவரைக் கட்டுப்படுத்தும் அளவுக்குத் தொடர்ச்சியாக முயற்சி செய்யவில்லை.
இதுவே தினூஷா ஆஸ்திரேலியாவோ தென்னாப்பிரிக்காவோ போகும்போது நிலைமை முழுக்க வேறாக இருக்கும். இந்திய அணியின் என்று பந்து வீச்சுப் பயிற்சியாளர் பஹுதுளேவும், டேட்டா அனலிஸ்ட் ஹரி பிரசாத் மோகனும் என்ன இதுவரைக்கும் சமோசா தின்று கொண்டிருந்தார்களா? இதையெல்லாம் தொடர் ஆரம்பிக்கும் முன்பே திட்டமிட வேண்டாமா?
கருத்துகள்