முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேலுக்கு அடுத்து சிலுவை அனுப்பு




தவெகவின் கிறிஸ்தவ சார்பு அரசியல் போலியான மிகைப்படுத்த்தப்பட்ட ஒன்று. அது ஒரு காட்சி அரசியல் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் தவெக அரசு கூட நிற்காது. ஏனென்றால் அது அவர்களுடைய கொள்கையே அல்ல. விவிலியத்தைக் கையில் சுமக்காத, ஜோசப், ஜேம்ஸ் என்றல்லாம் பெயர் வைத்துக் கொள்ளாதவர்களே உண்மையில் அம்மக்களுக்காக பாராளுமன்றத்தில் சண்டை போடுகிறார்கள்.

இந்த சிறுபான்மை பிம்பம் தமிழ்நாட்டு அரசியலில் மதத்தை ஒரு முக்கிய அலகாக்குவதற்காக பாஜகவால் மறைமுகமாகக் கொண்டு வரப்படுவது எனக் கூறப்படுவது உண்மைதான் - ஏனெனில் பல நேர்முகங்களில் இந்துத்துவர்களே இதை ஆதரிக்கிறார்கள். மதச்சின்னங்களை சட்டப்பேரவையில் பயன்படுத்துவது அவரவர் உரிமை என்கிறார்கள். இது ஒரு வெறுப்பரசியலை ஏற்படுத்தினால் அதைப் பின்னர் தம்மால் அறுவடை பண்ண முடியும் என நினைக்கிறார்கள். ஏனெனில் இதே கூட்டத்தினர்தாம் இன்னொரு பக்கம் கிறிஸ்தவ லாபி அரசியல் என்று விமர்சிக்கவும் செய்கிறார்கள். அடுத்து விஜய்யே செய்யும்போது நாங்கள் ஏன் இந்து மதத்தைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது எனக் கேட்பார்கள். முதலில் இப்படித்தான் முருகன், வேல் என்று எதையோ தூக்கி வந்தார்கள். எடுபடவில்லை. இப்போது சிலுவையைத் தூக்கி வருகிறார்கள். இதன் பிறகு மொழியளவிலும் சாதியடிப்படையில் நடிகர்களை இறக்கிவிட்டு வாக்காளர்களைப் பிரிப்பார்கள். திராவிட இனம் எனும் அடையாளத்தின் கீழ் மக்கள் இணையக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு.

இதெல்லாம் ஒரு பக்கம் முன்னெடுக்கப்படும்போது இன்னொரு பக்கம் பாஜக தலைமை ஒன்றிய அரசில் பெரும் சரிவைச் சந்திக்கிறது. தமிழ்நாட்டிலும் விஜய் வென்றுவிட்டதால் பாஜக நினைப்பதெல்லாம் அடுத்தடுத்து நடக்கப் போகிறது எனப் பொருளில்லை. ஏனெனில் இங்கு வெற்றி கண்டுள்ள கருத்தியலுக்கு இரு நூற்றாண்டுகளின் வரலாறு உள்ளது. அதை சில முதலீட்டாளர்களும் ஊடலாவியாளர்களும் ரசிகர் மன்றங்களும் தேவாலய லாபியும் சேர்ந்து சில வருடங்களில் மாற்றிவிட முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...