சட்டமன்றத்தில் இன்று சவுமியா அன்புமணி பேசுவதைக் கேட்டால் வியப்பாக இருந்தது - குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிவோருக்குத் தூக்குத்தண்டனை அளிக்க விஜய் ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர். தூக்குத்தண்டனைச் சட்டம் விதிக்கிற அதிகாரம் எல்லாம் முதல்வருக்குக் கிடையாது. அதை நாடாளுமன்றத்தில் ஒரு புதுச்சட்டமாக அறிமுகப்படுத்தி உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் கொண்டு வரவேண்டும். இதை ஏன் விஜய்யிடம் கேட்கிறார்?
அடுத்து, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சில நேரங்களில் நிரூபிப்பதில் பல கோளாறுகள் இருக்கையில் அத்தகைய குற்றவாளிகளாக பிடிக்கப்படுபவர்களை - அரபுநாடுகளில் பண்ணுவதைப் போல - உடனே தூக்கில் போட வேண்டும் என அவர் கேட்டது சினிமாத்தனமாக இருந்தது. தவறாகக் கைது பண்ணப்படுகிற ஒருவரை ஒரே மாதத்தில் தூக்கில் போட்டுவிட்டு அது தவறான தீர்ப்பென்று தெரிய வந்தால், சரியான குற்றவாளிகள் பின்பு மாட்டினால் என்ன செய்வீர்கள்? எமலோகத்துடன் எக்ஸ்சேஞ்ச் ஆபர் எதாவது பாமகவுக்கு உள்ளதா? விண்ணப்பித்து மாற்றுவார்களா?
கருத்துகள்