முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வளர்ச்சியும் அரசின் பொறுப்பின்மையும்


 

எனக்கு மைசூர்வாசிகளிடம் ஒரு விசயம் பிடிக்கும் - அவர்கள் இங்கு வரவிருக்கிற சோ கால்ட் வளர்ச்சித் திட்டங்களை மைசூர் ஒரு பாரம்பரிய நகரம், இங்குள்ள மரபான சின்னங்கள் அழிந்துவிடும் எறு சொல்லி நீண்ட காலமாகவே எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தடுக்க முடியாதபடி வளர்ச்சி எனும் டினோசர் ஓடி வந்துகொண்டே இருக்கிறது. இங்குள்ள அழகான சாலைகள், மரங்கள் எல்லாம் விரைவில் அழிக்கப்பட்டு ஏகப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு இது ஒரு புழுதிப்படலமாக மாறும். குப்பைகள் சாலை ஓரங்களில் குவியும். வருவாய் அதிகமாகும். ஆனால் அதற்குக் கொடுக்கிற கூலி மிகப்பெரியதாக இருக்கும்.

வளர்ச்சியின் முக்கியமான பிரச்சினை அது முறைப்படுத்தப்பட்டதாக இருக்காது என்பதே - நகரத்திற்குள் எத்தனை வீடுகள் கட்டலாம், விவசாய நிலங்களை விற்கலாமா, நீர்நிலைகளை கட்டிடமாக்க அழிக்கலாமா என்பது குறித்து அரசுக்கு எந்தத் தீர்மானமும் இருக்காது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று திறந்து விட்டுவிடுவார்கள் அப்படியே ஒன்றிரண்டு விதிமுறைகள் இருந்தாலும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள் (அமைச்சர்களே ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களாக, டெண்டர் வாங்குவோராக இருப்பதால்). அடுத்து, ஒரு பெருநகரம் உருவாவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்த மாட்டார்கள். சாலை வசதி, பாலங்கள், இயற்கையுடன் இணைந்த கட்டிடங்கள் எனத் திட்டமிட்டு கட்டிவிட்டு இத்தனை மக்கள் வரப் போகிறார்கள், அவர்களுக்கான வசதிகளை இவ்வளவு கொடுத்துவிட்டோமா எனச் சோதித்துவிட்டு முதலீடுகளை அனுமதிக்க மாட்டார்கள். முதலில் தனியார் முதலீடு, அதையொட்டி தானாகவே அமைய வேண்டும் கட்டமைப்பு என்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குள் எவ்வளவு சுருட்டலாம் என்பதைத் தாண்டி அரசுக்கு எந்த அக்கறையும் இருக்காது.
நகரங்களில் வேலை தேடி வருவோரும் குடிபெயர்வோரும் (நல்ல தண்ணீர், இடம், காற்று என) அடிப்படை வசதிகளற்றுத் தவிப்பதும், அதிகமான செலவீனங்களில் சிக்கி ஒரு மத்திய வர்க்க வாழ்க்கைக்கே ஏதோ உயர்வர்க்கம் போலச் செலவு செய்யும் நிலை வருவதுமே நடக்கிறது. ஏனென்றால் நம் நாட்டில் இவ்வளவு கோளாறுகளுக்கும் அப்பால் வாழ உயர்வர்க்கத்தினரால் மட்டுமே முடியும். ஆகையால் அடிப்படை வசதிக்கே எல்லாரும் பணக்காரர் ஆகத் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. நகரமயமாக்கலால் கிடைத்த ஒரே நல்ல விசயம் பசியாற்ற முடியும் என்பதுதான். அரசின் கேண்டீனுக்குச் சென்று ஐந்து ரூபாய்க்குத் தின்ன முடியும். அதைத் தாண்டி எந்த உத்தரவாதமும் இல்லை.
இதையே தொழில்வளர்ச்சியை சின்னச்சின்ன தொழில்பேட்டைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் எல்லா கிராமங்களிலும் அடிப்படை வசதிகளைப் பெருக்குவதன் வழியாக அரசு பரவலாக்க முடியும். தனியார் முதலீடு இல்லாத பட்சத்தில் அரசே முதலீடு செய்து ஆரம்பிக்கலாம். விவசாயத்திலும் அரசு முதலீடு செய்து விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுக்கலாம். விவசாயிகளுக்கு நிரந்தர சம்பளம் கொடுக்கலாம். உள்ளூர் உற்பத்தி சார்ந்து மட்டுமே நுகர்வு இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டால் ஓரளவுக்கு காய்கறி விலையைக் கட்டுப்படுத்தி விவசாயிகள் நட்டப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 30% காய்கறிகளை நாம் வருடத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதுவேதான் அரிசிக்கும் நடக்கிறது - 36%. அரசே வேளாண்மையையும் கொள்முதலையும் வினியோகத்தையும் எடுத்து நடத்தினால் இதைக் குறைக்க முடியும். இடைத்தரகர்கள் இல்லாததால் விலை கணிசமாகக் குறையும். நீர்வளத்தையும் அரசே சரிசெய்கிற கட்டாயம் விளையும். ஒவ்வொரு தொழிலுக்கும் இதைச் செய்தால் பரவலான வளர்ச்சியும் தரமான வாழ்க்கையும் சாத்தியமாகும். ஏற்றத்தாழ்வு குறையும். சாராய ஆலைத் தொழிலதிபர்களும் லாட்டரி முதலாளிகளும் நம்மை ஆளும் நிலை மாறும்.
இதை வெற்றிகரமாகச் செய்ய மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தொழில்களின் வளர்ச்சி லாபத்தையும் வைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆளும் காலத்தை தீர்மானிக்கிறபடி சட்டம் வரவேண்டும்.
நவீன அரசுகளுக்கு பொருளாதார அணுகுமுறை உள்ளதைப் போல நகரக்கட்டமைப்புக் கொள்கைகள் இல்லை. மேற்சொன்ன மாதிரியான சட்டங்களும் நம்மிடம் இல்லை. நம்மை ஆள்வோருக்குச் சிந்திக்கும் திறனும் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...