முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வளர்ச்சியும் அரசின் பொறுப்பின்மையும்


 

எனக்கு மைசூர்வாசிகளிடம் ஒரு விசயம் பிடிக்கும் - அவர்கள் இங்கு வரவிருக்கிற சோ கால்ட் வளர்ச்சித் திட்டங்களை மைசூர் ஒரு பாரம்பரிய நகரம், இங்குள்ள மரபான சின்னங்கள் அழிந்துவிடும் எறு சொல்லி நீண்ட காலமாகவே எதிர்க்கிறார்கள். ஆனால் அவர்கள் தடுக்க முடியாதபடி வளர்ச்சி எனும் டினோசர் ஓடி வந்துகொண்டே இருக்கிறது. இங்குள்ள அழகான சாலைகள், மரங்கள் எல்லாம் விரைவில் அழிக்கப்பட்டு ஏகப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு இது ஒரு புழுதிப்படலமாக மாறும். குப்பைகள் சாலை ஓரங்களில் குவியும். வருவாய் அதிகமாகும். ஆனால் அதற்குக் கொடுக்கிற கூலி மிகப்பெரியதாக இருக்கும்.

வளர்ச்சியின் முக்கியமான பிரச்சினை அது முறைப்படுத்தப்பட்டதாக இருக்காது என்பதே - நகரத்திற்குள் எத்தனை வீடுகள் கட்டலாம், விவசாய நிலங்களை விற்கலாமா, நீர்நிலைகளை கட்டிடமாக்க அழிக்கலாமா என்பது குறித்து அரசுக்கு எந்தத் தீர்மானமும் இருக்காது. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று திறந்து விட்டுவிடுவார்கள் அப்படியே ஒன்றிரண்டு விதிமுறைகள் இருந்தாலும் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள் (அமைச்சர்களே ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களாக, டெண்டர் வாங்குவோராக இருப்பதால்). அடுத்து, ஒரு பெருநகரம் உருவாவதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்த மாட்டார்கள். சாலை வசதி, பாலங்கள், இயற்கையுடன் இணைந்த கட்டிடங்கள் எனத் திட்டமிட்டு கட்டிவிட்டு இத்தனை மக்கள் வரப் போகிறார்கள், அவர்களுக்கான வசதிகளை இவ்வளவு கொடுத்துவிட்டோமா எனச் சோதித்துவிட்டு முதலீடுகளை அனுமதிக்க மாட்டார்கள். முதலில் தனியார் முதலீடு, அதையொட்டி தானாகவே அமைய வேண்டும் கட்டமைப்பு என்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குள் எவ்வளவு சுருட்டலாம் என்பதைத் தாண்டி அரசுக்கு எந்த அக்கறையும் இருக்காது.
நகரங்களில் வேலை தேடி வருவோரும் குடிபெயர்வோரும் (நல்ல தண்ணீர், இடம், காற்று என) அடிப்படை வசதிகளற்றுத் தவிப்பதும், அதிகமான செலவீனங்களில் சிக்கி ஒரு மத்திய வர்க்க வாழ்க்கைக்கே ஏதோ உயர்வர்க்கம் போலச் செலவு செய்யும் நிலை வருவதுமே நடக்கிறது. ஏனென்றால் நம் நாட்டில் இவ்வளவு கோளாறுகளுக்கும் அப்பால் வாழ உயர்வர்க்கத்தினரால் மட்டுமே முடியும். ஆகையால் அடிப்படை வசதிக்கே எல்லாரும் பணக்காரர் ஆகத் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. நகரமயமாக்கலால் கிடைத்த ஒரே நல்ல விசயம் பசியாற்ற முடியும் என்பதுதான். அரசின் கேண்டீனுக்குச் சென்று ஐந்து ரூபாய்க்குத் தின்ன முடியும். அதைத் தாண்டி எந்த உத்தரவாதமும் இல்லை.
இதையே தொழில்வளர்ச்சியை சின்னச்சின்ன தொழில்பேட்டைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் எல்லா கிராமங்களிலும் அடிப்படை வசதிகளைப் பெருக்குவதன் வழியாக அரசு பரவலாக்க முடியும். தனியார் முதலீடு இல்லாத பட்சத்தில் அரசே முதலீடு செய்து ஆரம்பிக்கலாம். விவசாயத்திலும் அரசு முதலீடு செய்து விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுக்கலாம். விவசாயிகளுக்கு நிரந்தர சம்பளம் கொடுக்கலாம். உள்ளூர் உற்பத்தி சார்ந்து மட்டுமே நுகர்வு இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டால் ஓரளவுக்கு காய்கறி விலையைக் கட்டுப்படுத்தி விவசாயிகள் நட்டப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 30% காய்கறிகளை நாம் வருடத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதுவேதான் அரிசிக்கும் நடக்கிறது - 36%. அரசே வேளாண்மையையும் கொள்முதலையும் வினியோகத்தையும் எடுத்து நடத்தினால் இதைக் குறைக்க முடியும். இடைத்தரகர்கள் இல்லாததால் விலை கணிசமாகக் குறையும். நீர்வளத்தையும் அரசே சரிசெய்கிற கட்டாயம் விளையும். ஒவ்வொரு தொழிலுக்கும் இதைச் செய்தால் பரவலான வளர்ச்சியும் தரமான வாழ்க்கையும் சாத்தியமாகும். ஏற்றத்தாழ்வு குறையும். சாராய ஆலைத் தொழிலதிபர்களும் லாட்டரி முதலாளிகளும் நம்மை ஆளும் நிலை மாறும்.
இதை வெற்றிகரமாகச் செய்ய மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தொழில்களின் வளர்ச்சி லாபத்தையும் வைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆளும் காலத்தை தீர்மானிக்கிறபடி சட்டம் வரவேண்டும்.
நவீன அரசுகளுக்கு பொருளாதார அணுகுமுறை உள்ளதைப் போல நகரக்கட்டமைப்புக் கொள்கைகள் இல்லை. மேற்சொன்ன மாதிரியான சட்டங்களும் நம்மிடம் இல்லை. நம்மை ஆள்வோருக்குச் சிந்திக்கும் திறனும் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...