Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

"கால்கள்" நாவல் விமர்சனம் - கவிப்பூரணி



ஃபேஸ்புக்கில் திரு அபிலாஷ் அவர்களின் பதிவுகளை அவ்வப்போது மட்டுமே பார்த்து வந்த நான், அவரது சிந்தனைகளை பலமுறை ரசித்திருக்கிறேன். அவர் தேர்ந்தெடுக்கும் சிக்கல்கள், அதை ஆராயும் ஆழம், அவரது பார்வையின் தனித்துவம்—இவை அனைத்தும் என்னைக் கவர்ந்தன. அவர் சிந்திக்கும் விதம் எப்போதும் வேறுபட்டதும் தீவிரமானதும்.

அபிலாஷ் சந்திரன் அவர்களின் “கால்கள்” நாவல் ஏப்ரல் 6ஆம் தேதி கிண்டிலில் வெளியாகியதாகத் தெரிந்துகொண்டேன், அவருடன் தொடர்ந்த தொடர்பில் இருக்கும் நண்பர் மஹேஷ் மூலமாக. மற்ற எதையும் யோசிக்காமல், உடனே அந்த நாவலை டவுன்லோட் செய்து, அன்றிரவு வாசிக்கத் தொடங்கினேன்.
அதற்கு முந்தைய நாள் நான் "நிழல் பொம்மை" நாவலை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். ஆனால் "கால்கள்" கிடைத்தவுடன், நீண்ட நாட்களாக காத்திருந்த ஏக்கத்தில், "நிழல் பொம்மை"யை இடைநிறுத்திவிட்டேன்.
மது — இந்த கதையின் கதாநாயகி, மாற்றுத்திறனாளிகளின் உள்ளத்தை நேரடியாக நெஞ்சோடு இணைக்கும் ஒரு பாத்திரம்.
அவளது உலகம், சவால்கள், மனவுரைகள், காதலையும் காமத்தையும் பற்றிய எண்ணங்கள் — இவை அனைத்தும் மிக நுட்பமாக எழுதியிருக்கிறார்.
அவளது பெற்றோர், அவளது நிலை மாறும் என நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் சிகிச்சைகள், பெற்றோர்களின் விழிப்புணர்வற்ற மற்றும் அவளது நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உழலும் மனப்போக்கை வெளிக்கொணர்கின்றன.
கார்த்திக் மற்றும் பாலு — இவர்களுடனான மதுவின் உரையாடல்கள் சுவாரஸ்யமானவை. ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துகளுடன் இருந்தாலும், மதுவுடன் இணைக்கும் பாசப் பிணைபாடுகள் வாசகருக்குள் ஆழமான உணர்வை ஏற்படுத்துகின்றன.
மதுவின் தாயார் அவளை “சவம்” என அழைக்கும் வேளைகள் மனதைக் கலங்க வைக்கின்றன. இதைப் படிக்கும் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் வாழ்வில் எதிர்கொண்ட வலிகளை மிக நேரடியாகக் காணக்கூடிய சூழ்நிலைகள் உருவாகின்றன. பெற்றோரது ஆதங்கமும் இயலாமையும் இயல்பாக புதினத்தில் இழைந்தோடுகிறது.
பவித்ரா எனும் பாத்திரம் தன்னம்பிக்கையுடன் கதையில் வளைய வருவதாக அழகாக சித்தரிக்கப்படுகிறார். கதையில் இடம்பிடிக்கும் ஒவ்வொரு பாத்திரமும் நம்மை அந்தக் கிராமத்தில் வாழ்வதைப் போல உணர வைக்கும் வகையில் நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன.
மருத்துவமனை காட்சிகள், மதுவின் உளவுருக்கங்கள், தந்தையின் வேதனைகள், அன்னையின் ஆற்றாமைகள் — அனைத்தும் வாசகரை நெகிழ வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
பலமுறை மதுவின் உள்ளத்தில் கேள்விகள் எழுகின்றன, ஆனால் அவை வெளிப்படுவதில்லை.
அந்த தருணங்கள் எனக்கு ஒரு ஆழமான எண்ணத்தை நினைவூட்டின:
“ஒரு ஆடை எனக்காகத் தைக்கப்படுகிறதா? இல்லை, ஏற்கனவே யாருக்காகவோ தைக்கப்பட்ட ஆடையில் என் உடலை வெட்டிச் சேர்க்க வேண்டிய நிலையா?”
அதேபோல், மதுவும் தனது கேள்விகளை வெளிப்படுத்த முடியாமல் போராடுகிறாள்.
டாக்டர் அப்ரஹாம் கதாப்பாத்திரம் மனோதத்துவம் மற்றும் இறை நம்பிக்கையின் வழியே மதுவை தேற்ற முற்படுகிறார்.
31 வயதிலேயே இப்படியான ஆழமான, உணர்வுப்பூர்வமான எழுத்து எழுத முடிந்திருப்பது, திரு அபிலாஷ் வாழ்வின் பல அனுபவங்களின் பின் வந்த வாசிப்பு பயணத்தின் பிரதிபலிப்பாகத் தெரிகிறது. அவரது எழுத்து நம்மை உணர்வுச் சுழலில் இழுத்துச் செல்கிறது.
நாவலின் பாரம் இன்னும் என் இதயத்தில் கனமாய், ரனமாய். சில இடங்களில் என் சொற்கள் நின்றுவிடுகின்றன. உணர்வுகளை முழுமையாக விவரிக்க முடியாமல் போகிறது.
அபிலாஷ் சார், நாவலை கிண்டிலில் வெளியிட்டதற்கு மனமார்ந்த நன்றிகள். என் போன்ற, மகேஷ் போன்ற பார்வைச் சவாலைச் சந்திக்கும் நண்பர்கள், இப்படியொரு ஆழமான படைப்பை வாசிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றோம். கிண்டிலில் இது வெளியாகவில்லை என்றால், இது எம்மை எட்டியிருக்காது.
---
## கால்கள் – நம்முள் ஒலிக்கும் மனக்குரல்களின் பயணம்...
“வாசிக்கக்கூடிய புத்தகங்கள் இருக்கின்றன. சில புத்தகங்கள் நம்மை வாசிக்கின்றன. ‘கால்கள்’ இரண்டாம் வகையைச் சேர்ந்தது.”

Comments

Popular posts from this blog

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...