Skip to main content

"ஏன் வாசிக்க வேண்டும்?" விமர்சனம் - அன்புக்குமரன் எத்தியரசன்

 


புத்தகம்: ஏன் வாசிக்க வேண்டும்
எழுதியவர்: எழுத்தாளர்: Abilash Chandran
வாங்கிய இடம்: சீரோ டிகிரி அரங்கு, சென்னை புத்தகக் கண்காட்சி
வாங்கிய தேதி : 02 மார்ச் 2022

"வாசிப்பது எப்படி?" என்ற புத்தகத்தை அண்மையில் வாசித்தபோது , அதன் தொடர்ச்சியாய் "ஏன் வாசிக்க வேண்டும்?" என்ற புத்தகத்தையும் வாசிக்க நேரிட்டது. நம் வாழ்வாதாரத்தை முன் வைத்து வாசிப்பின் தேவை குறித்து புத்தகத்தின் வாசத்தை நுகராதவர்களுக்கு ஒரு அறிமுக நூலாக இருந்தது செல்வேந்திரன் அவர்களின் கட்டுரை தொகுப்பு. ஆனால் எழுத்தாளர் அபிலாஷ் ஏன் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை மிக விரிவாகவும் நேர்மையாகவும் (வாசிப்பும் ஒரு போதைதான் என்பது போன்ற கருத்துகள் ஊடாக ) தனது கருத்துகளை தனது பிரஞையினால் நமக்கு கடத்தியிருக்கிறார்.

எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் முகப்புத்தக பதிவுகளை சில வருடங்களுக்கு முன்பாக பின்தொடர்ந்தேன். அதன் நீட்சியாக ஒரு நாள் ஹருதயம் என்ற மலையாளதிரைப்படத்தை பற்றிய இவரது கட்டுரையால் கவரப்பட்டேன். அப்படி ஒரு பகுப்பாய்வு. அவரின் அவதானிப்புகள் மிகவும் ஆழ் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். பின்பு பல கட்டுரைகளை வாசித்தேன். அண்மையில் தனது உடல் இடையை குறைக்கும் பொருட்டு அவர் மேற்கொண்ட சில வாழ்வியல் முறைகளை அறிவியல் பூர்வமாகவும் பல அளவுறுகளை முன்வைத்து எழுதியதை ஓர் அளவு பின்பற்றி நானும் என் இடையை குறைத்தேன். ஆக வாசிப்பில் தொடங்கி இவரது எழுத்துகள் என்னை ஓர் செயல் வீரனாகவும் மாற்றியிருக்கிறது.

ஏன் வாசிக்க வேண்டும் புத்தகத்தில் ஒரு பக்கம் கூட ....ஏன் ஒரு வரி கூட சோடை போகவில்லை. அத்தனையும் அறிவின் முத்துக்கள். அதுவும் நாம் பெருமளவு அறியாத அறிவுப்பண்டங்களை சுவைத்தபோது இருந்த ருசி இன்னும் என் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. எனது நீண்ட நாள் கேள்விகான பதிலை நினைவுத் திறனும் வாசிப்பும் என்ற கட்டுரையில் காணமுடிந்தது.
அசல் சிந்தனையாளருக்கான அனைத்து குணங்களும் இவரது எழுத்துக்களில் கண்டடையலாம். இலக்கிய வாசிப்பு என்ற இரண்டாம் பாகத்தில் இவர் யாருமே இதுவரை காணாத அல்லது உணராத வகையில் பல உளக்காட்சிகளை எனக்கு காண்பித்தபோது வியந்தேன். வாசிப்பது மூளையா மனமா என்ற ஒற்றை கட்டுரையிலேயே எனக்கு தெரிந்துவிட்டது இரண்டாம் பாகம் மிகவும் உக்கிரத்துடன் version 2.0 வாக மிளிர்கிறது என்று.

இந்த கட்டுரையில் நமக்கு கிடைக்கும் அனுமானங்களை கடப்பதே ஒரு தன்னினைவிழந்த நிலைக்கு சென்றது போலான அனுபவம். இதைத் தொடர்ந்து என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது. ஆங்கிலத்தில் வாசிப்பது என்ற கட்டுரை மற்றும் ஒரு தலைசிறந்த (எல்லாமே நல்ல கட்டுரைதான்! ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல ) கட்டுரை. அயல் எழுத்தின் தாக்கம் நம் எழுத்தாளர்களின் எழுத்தின் மீது உண்டு என்பதை மிக அழகாக நிறுவியுள்ளார். உதாரணங்களை சுட்டிக்காட்டி சொற்றொடர்களின் வடிவத்தைக் கண்டுபிடித்து அந்த பாங்கு அவர்களின் எழுத்தை எப்படி தன சமகால எழுத்தாளர்களோடு தங்களை வேறு படுத்தியது என்பதையும் கச்சிதமாக சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் (கையும் களவுமாகப் பிடித்தார் என்றும் சொல்லலலாம் ) . உதாரணம்: "கையைத் தேடிக்கொண்டு தயங்காமல் தன் கையை நீட்டி குலுக்கினான் " என்ற சொற்றொடர் அமைப்பு ("Looking for the hand, he unhesitatingly extended his hand and shook it."). எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் உரைகளில் வரும் சில வார்த்தைகளின் கட்டுமானத்தன்மையில் ஆங்கில தாக்கம் இருப்பதாக அவ்வப்போது உணர்ந்ததுண்டு. ஆனால் அபிலாஷ் அவர்களின் அவதானிப்பு மிக தீவிரமானதாக உள்ளது. தமிழர்கள் vs மலையாளிகள் என்ற கட்டுரையை மிகவும் ரசித்தேன். மறுபுறம் நாம் செல்லக்கூடிய பாதை மிகவும் தொலைதூரம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நான் இருப்பு உணர்வுக்கு திரும்பினேன்.

புத்தகத்தின் தலைப்பு சாதாரணமாக தட்டையாக இருக்கலாம். ஆனால் அதன் உள்ளடக்ககம் அனைத்திலுமே அவ்வளவு விவரக்குறிப்புகளுடன் விரிவான மற்றும் மறுக்க முடியாத ஞானத்தை கண்டடைந்து நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு "Masterpiece". வாசித்தல் என்ற தலைப்பு இன்னும் பொருத்தகமாக இருக்கும்.

இவர் எழுதிய மற்ற புத்தகங்களை வாசிக்க ஆவலாக உள்ளேன்.

#readgasm

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...