முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னொரு மனம்

 


இந்நூலுக்கு இந்த வாரம் மட்டுமே ஆச்சரியமாக இருவர் விரிவாக விமர்சனம் செய்துள்ளார்கள். ஒருவர் என் நீண்டகால நண்பர். சக-எழுத்தாளர். திகட்டத் திகட்டப் பாரட்டித் தள்ளிவிட்டார். அரைமணிநேரம் போனில் புத்தகத்தை இரண்டு முறைகள் தான் படித்ததையும், அது தந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இன்னும் நிறைய பேரைப் படிக்கச் சொல்லப் போகிறேன் என்றார். நிறைய எழுத வேண்டும் எனும் உற்சாகம் பாராட்டுக்களில் இருந்தே கிடைக்கின்றன. அவர் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்.

அடுத்தது மா. அண்ணாமலையின் விரிவான நேர்மையான விமர்சனம். அவருக்கும் என் அன்பு.

நான் இன்னொன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் - எழுதுவது குறித்து, எழுத்தாளராக இருப்பது குறித்து எனக்கு இப்போதுள்ள கேள்விகளும் கவலைகளும் முற்றிலும் வேறாக மாறி வருவதை உணர்கிறேன். எழுத்துக்கும் மரணத்துக்குமான, எழுத்துக்கும் இல்லாமல் போவதற்கும், தன்னையே அழிப்பதற்குமான தொடர்பு என்னவென்று சிந்திக்கிறேன். காலம் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. ஆச்சரியமாக என் நண்பரான ஒரு அயல்மொழிக் கவிஞரும் இதே கவலையுடன் சதா இருப்பார். நான் அவரைக் கிண்டல் செய்வேன். இப்போது அது என்னையும் தொற்றிக் கொண்டது. முன்பு இருந்த தெளிவு போய் மனம் மிகவும் மூட்டமாக இருக்கிறது. சில உறுதிப்பாடுகள் லகுவானதில் என்னால் சில விசயங்களுக்கு உடனடியாகப் பதில் தேட இயலவில்லை. ஒருவேளை நான் இப்போது தீவிரமாக எழுதி வரும் நாவலின் விளைவாக இருக்கலாம். ஒரு எழுத்தாளராக என்னைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை எனத் தோன்றுகிறது.

அதனாலே இந்நூல் என்னுடைய இன்னொரு மனதில் இருந்து வந்தது, அது என்னுடையது அல்லவென்று தோன்றுகிறது. யாராவது இதைப் பாராட்டுகையில் இதிலுள்ள என் அடையாளமும், அதன் வழியாக கிடைக்கும் இன்பமும் மகிழ்ச்சி தருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.