முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னொரு மனம்

 


இந்நூலுக்கு இந்த வாரம் மட்டுமே ஆச்சரியமாக இருவர் விரிவாக விமர்சனம் செய்துள்ளார்கள். ஒருவர் என் நீண்டகால நண்பர். சக-எழுத்தாளர். திகட்டத் திகட்டப் பாரட்டித் தள்ளிவிட்டார். அரைமணிநேரம் போனில் புத்தகத்தை இரண்டு முறைகள் தான் படித்ததையும், அது தந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். இன்னும் நிறைய பேரைப் படிக்கச் சொல்லப் போகிறேன் என்றார். நிறைய எழுத வேண்டும் எனும் உற்சாகம் பாராட்டுக்களில் இருந்தே கிடைக்கின்றன. அவர் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்.

அடுத்தது மா. அண்ணாமலையின் விரிவான நேர்மையான விமர்சனம். அவருக்கும் என் அன்பு.

நான் இன்னொன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் - எழுதுவது குறித்து, எழுத்தாளராக இருப்பது குறித்து எனக்கு இப்போதுள்ள கேள்விகளும் கவலைகளும் முற்றிலும் வேறாக மாறி வருவதை உணர்கிறேன். எழுத்துக்கும் மரணத்துக்குமான, எழுத்துக்கும் இல்லாமல் போவதற்கும், தன்னையே அழிப்பதற்குமான தொடர்பு என்னவென்று சிந்திக்கிறேன். காலம் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. ஆச்சரியமாக என் நண்பரான ஒரு அயல்மொழிக் கவிஞரும் இதே கவலையுடன் சதா இருப்பார். நான் அவரைக் கிண்டல் செய்வேன். இப்போது அது என்னையும் தொற்றிக் கொண்டது. முன்பு இருந்த தெளிவு போய் மனம் மிகவும் மூட்டமாக இருக்கிறது. சில உறுதிப்பாடுகள் லகுவானதில் என்னால் சில விசயங்களுக்கு உடனடியாகப் பதில் தேட இயலவில்லை. ஒருவேளை நான் இப்போது தீவிரமாக எழுதி வரும் நாவலின் விளைவாக இருக்கலாம். ஒரு எழுத்தாளராக என்னைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியவில்லை எனத் தோன்றுகிறது.

அதனாலே இந்நூல் என்னுடைய இன்னொரு மனதில் இருந்து வந்தது, அது என்னுடையது அல்லவென்று தோன்றுகிறது. யாராவது இதைப் பாராட்டுகையில் இதிலுள்ள என் அடையாளமும், அதன் வழியாக கிடைக்கும் இன்பமும் மகிழ்ச்சி தருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...