முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துன்பமின்றி துன்பத்தை எழுதுவது




புக்காவஸ்கியை வாசிப்பது எப்போதுமே மிகச்சிறந்த மதுவை அருந்தும் அனுபவம். அவரது மிகச்சிறந்த படைப்புகள் செக்ஸில் திளைப்பதற்கு ஈடான புலனின்பத்தைத் தருவதுண்டு. ஆனால் "ஹாலிவுட்" ஒரு தரமான மது மட்டுமே. ஒரு நாவலாக இது எழுந்து வரவில்லை. அவரது அனுபவங்களின் குறிப்புகள் அவரது திரைக்கதை படமாக்கப்பட்டதை ஒட்டித் தொகுக்கப்பட்டுள்ளன. படத்துக்கான திட்டமிடலிலும் துவங்கி படம் எடுத்து வெளியாகி அதை ஒரு மாதத்திற்குப் பின் புக்காவஸ்கி ஒரு திரையரங்கில் குறைவான பார்வையாளர்கள் மத்தியில் பார்த்துவிட்டு ஒருவித நிறைவற்ற நிறைவுணர்வுடன் வெளிவருவதுடன் நாவல் முடிகிறது. ஆனால் அது சரியான முடிவு அல்ல. நாவலின் மையச் சிக்கலை அவர் கண்டடையவே இல்லை. முழுக்கவே வெளியுலகின் அலைகழிப்புகள் மத்தியில் அவர் தன்னைக் கண்டடையும் தத்தளிப்பு தெரிகிறது. ஒரு படைப்பாளியாக அவரது வலிமை இந்த அகவுலகம்தான். அவரது அந்தரங்கமான அன்றாட உலகம்தான். சினிமா உலகின் பல சிக்கல்களை, வேடிக்கைகளை, அபத்தங்களை, தனிமனிதர்களுக்கு அது இழைக்கும் கொடூரங்களைப் பற்றிப் பேசும் கவனம் புக்காவஸ்கியின் ஆதாரமான நெருக்கடிக்குள் நாவலைக் கொண்டு செல்ல விடாமல் தடுக்கிறது. இப்புறவுலகிலும் அவர் ஒரு அர்த்தத்தைக் கண்டுபிடித்து வடிவமைக்க முயலவில்லை. போதையில் உடலுறவு கொள்ள முயன்று தோல்வி அடைவதைப் போல நாவலின் முயற்சி ஆகிவிடுகிறது.

இந்நாவலின் சிறப்பு அவர் வாழ்வில் கண்ட சில படைப்பாளிகள், இயக்குநர்கள், நடிகையரை அவர் (பெயர்களை மாற்றி) பகடியாகவும் எதார்த்தமாகவும் சித்தரிக்கும் பகுதிகள். மிகவும் நகைச்சுவையான, வாசகரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் வர்ணனைகள்.

புக்காவஸ்கியின் நாவல் சுமாராக இருந்தாலும் அதை நாம் சோர்வாக கசப்பாக கீழே வைக்க மாட்டோம். இந்நாவலும் அப்படித்தான். முடித்ததும் என் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அதன்பிறகு ஒரு தூக்கம் போட்டேன். அப்போது வந்த கனவிலும் இன்பம் ஒரு மின்சாரமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. விழித்தபின்னரும் என்னால் அவரது எழுத்தின் அதிர்வை உணர முடிந்தது.

இந்நாவலில் மனதை மிகவும் வருத்த வைக்க வேண்டிய சில சம்பவங்கள் வருகின்றன. ஆனால் எழுத்தினுள் எங்குமே துயரம் இல்லை. இதைக் குறித்தே நான் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அதெப்படி துயரத்தை துயரமின்றி எழுதுகிறார்? ஒரு கதாபாத்திரம் தம் விரலை மின்ரம்பத்தால் அறுக்கப் போவதாகச் சொல்லும்போதும், ஒரு குப்பையான சேரியில் ஒரு இயக்குநர் தங்கிக் கொண்டு பல சிரமங்களுக்கு ஆட்பட்டு பைத்தியம் பிடிக்கிற நிலைக்குப் போகும்போதும் அதில் ஒரு நகைச்சுவையை புக்காவஸ்கி கொண்டு வந்துவிடுகிறார். அவரது விட்டேத்தியான எழுத்து அணுகுமுறை இதைச் சாத்தியப்படுத்துகிறது. இது எனக்குக் கிடைத்த ஒரு முக்கியமான திறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...