முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சறுக்கல்



 இது சும்மா ஒரு கணிப்புதான். எனக்கு ஆரம்பத்தில் விஜய் 7% வாக்குகளைப் பெறுவார் என்று தோன்றியது. இப்போதுள்ள பரபரப்பைப் பார்க்க திமுக மீதுள்ள அதிருப்தி வாக்குகள் அவரிடம் கொஞ்சம் அதிகமாகப் போகும் எனத் தோன்றுகிறது - அதாவது 12-15% உச்சபட்சமாக. அதுவே ஒரு பெரிய சாதனைதான். குறைந்தது 10%.

இதனால் விஜய்க்கு என்ன லாபம் என்பதைவிட திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்னவிதமான பாதகங்கள் என்பதையே பலரும் பேசுகிறார்கள். திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட சற்று அதிகம் பெற்று ஆட்சியமைப்பதற்கு இது வழிவகுக்கும். அதாவது ஒரு சற்றே பலவீனமான அரசு அமையும். எதிர்க்கட்சிகள் பலமடையும்.
எப்போதுமே அரசியலில் ஒரு பலத்த குற்றச்சாட்டு வந்தால் அதை மறுக்காமல் பரிசீலிப்பதாக 'நடிக்க' வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும். சுத்தீகரிப்பதாக ஒரு சடங்கில் ஈடுபட வேண்டும். அடுத்து வரும் ஆண்டுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக 'ஊழல் எதிர்ப்பு' பற்றிப் பேச வேண்டும். மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதான பிம்பத்தை உருவாக்க வேண்டும். அப்போதே அரசு தன்னைப் புதுப்பிக்க இயலும். மக்களுக்கு அந்த அரசு மீதான அபிமானம் அப்போது பலமடங்கு அதிகரிக்கும். இந்த முறை திமுக செய்த முக்கியமான தவறு 'செந்தில் பாலாஜி' - ஒன்று அவரை சிறையிலே வைத்திருந்திருக்க வேண்டும். அல்லது அவர் வெளிவந்த பிறகு பதவி கொடுத்திருக்கக் கூடாது. அதேபோல ஓராண்டுக்கு முன்னரே சில அமைச்சர்களைப் பதவி நீக்கி ஊழலைத் தண்டித்ததாகக் காட்டியிருக்க வேண்டும். ஒரு புதிய முகத்தை உருவாக்கி இருக்க வேண்டும். புதிய இளம் அமைச்சர்களின் பிம்ப உருவாக்கத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் எதிர்க்கட்சியினரால் உதயநிதியைத்தான் விமர்சிக்க இயலும். அது திமுகவிற்குச் சாதகமாகவே முடிந்திருக்கும். நான் சொல்வதெல்லாம் வேறு மாநிலங்களில் அரசுகள் செய்வனதாம். ஆனால் திமுக அதைச் செய்யவில்லை.
இன்னும் சொல்லப்போனால் பாஜக அதற்கு மேல் சென்று திமுக தலைவர் குடும்பத்தின்மீது கைவைத்திருந்தால் அது திமுகவிற்கு பெரிய ஒரு ஆற்றலைக் கொடுத்திருக்கும். ஸ்வீப் செய்திருப்பார்கள். ஆனால் திமுக அது ஒரு மிகப்பெரிய ரிஸ்க் என நினைத்துவிட்டது. அது சூதாடத் தயாராகவில்லை. அதுவே இப்போது பாஜகவுடன் திமுகவிற்கு மறைமுக ஒப்பந்தம் உள்ளது என மம்தாவே பேசும் அளவுக்கு இது சென்றுவிட்டது (இது என்னதான் இந்தியா கூட்டணியுடன் உள்ள அவரது கசப்பால் சொல்லப்பட்டதாக இருந்தாலும்). இந்த வரியைத்தான் இப்போது விஜய்யும் தன் பிரச்சாரத்தில் முன்வைக்கிறார். செந்தில் பாலாஜியைத் தாண்டி வேறு யார் மீது அமலாக்கத்துறையும் சி.பி.ஐயும் கைவைக்காதது வினோதமாக திமுகவுக்குப் பாதகமாகிவிட்டது.
இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஸ்பெக்டிரம் ஊழல் பேசப்பட்டு கனிமொழி, ராஜா கைதானபோதும் திமுக தடுப்பாட்டமே ஆடியது. ஊழல் விசாரணை, கைது நடவடிக்கை என்றால் திமுக கொஞ்சம் தடுமாறிப் போகிறது.
தேர்தல் முடிவுகள் வருமுன்பே தீர்ப்பெழுதி விமர்சிக்க நான் முற்படவில்லை. இன்றைய சூழலை வைத்தே என் கருத்துக்களை எழுதுகிறேன். திமுக தன் வியூகத்தில் சறுக்கிவிட்டது. இல்லாவிட்டால் இத்தேர்தல் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இப்போது கோமாளிகளுடன் எல்லாம் திமுக மல்லுக்கட்டும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...