முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Phenomenon



 

ஜெயமோகனின் தீவிர வாசகர் / தொண்டர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு அதிர்ச்சிகரமான கருத்தைச் சொன்னார்.
"அண்ணே, உண்மையில் விஜய்யின் த.வெ.கவும் அவரது தொண்டர்களாக மாற்றப்பட்ட ரசிகர்களும் ஒரு புதிய தோற்றப்பாடு (phenomenon) அல்ல. நான் இதைக் குறித்து சொல்லப்போகும் ஒரு விசயம் உங்களுக்கு பயங்கர அதிர்ச்சியாகக் கூட இருக்கும். அதைக் கேட்டு நீங்கள் வெடித்துச் சிரித்து விடவும் கூடும். விஜய் அரசியல் செய்துள்ள ஊடுருவல் ஏற்கனவே இலக்கியத்தில் ஜெயமோகன் செய்துவிட்டார். விஜய் ரெண்டாவதுதான். த.வெ.க என்பது விஷ்ணுபுரத்தின் சற்றே வெகுமக்கள்தனமான ஒரு வடிவம்தான். தற்குறித்தனம் என்று நாம் சொல்கிறோமே அதை இலக்கியத்தில் தோற்றுவித்து வெற்றிகரமாகப் முதலில் பரிசோதித்தவர் ஜெயமோகன். விஜய் அதை அரசியலில் விஜய் அறுவடை செய்திருக்கிறார். அவ்வளவுதான். நீங்கள் எங்களைத்தான் முதலில் ஜோம்பிகள் என்று அழைத்தீர்கள். நாங்கள் அதைக் கண்டுகொள்ளாமல் பெருகிக் கொண்டே இருந்தோம். உங்கள் ஆட்கள் எல்லாருமே எங்கள் பக்கம் வந்து சேர்ந்தார்கள். இப்போது தவெக தொண்டர்களை அவ்வாறு அழைக்கிறீர்கள். அவர்களும் இன்று தமிழ்நாட்டு அரசியலையே தீர்மானிக்கும் இடத்திற்குப் போய் விட்டார்கள். நீங்கள் எங்களை ஆர்.எஸ்.எஸ்ஸின் பண்பாட்டு அமைப்பு என்றீர்கள். நாங்கள் பொருட்படுத்தாமல் முன்னேறிப் போய்க் கொண்டே இருந்தோம். நீங்கள் தவெகவை பாஜகவின் பி டீம் என்றீர்கள். அவர்கள் தேர்தலையே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள். தமிழில் தோன்றிய முதல் கல்ட் அமைப்பு எங்களுடையது. அடுத்ததுதான் தவெக. முதல் phenomenon எப்போதுமே நாங்கள்தாம். தமிழ்ச் சிந்தனையின் மையத்தில் எப்போதும் இருப்பவர் ஜெயமோகன். அவர் என்ன சொல்வாரோ எனும் பதற்றத்தில் எல்லாரையும் வைத்திருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் இப்போது இருப்பவர் விஜய். அப்போது என்ன செய்வாரோ எனும் பயத்தில் மொத்த சமூகத்தையும், அரசியல் சிந்தனையாளர்களையும் இப்போது வைத்திருக்கிறார்."
என்னால் அவர் சொன்னதை ஒரேதடியாக மறுக்க முடியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...