Skip to main content

போதை மருந்துப் பயன்பாடும் தத்துவப் போதாமையும்

 


“Today, the mass consumption of marijuana, cocaine, ecstasy, crack, heroin, etc., is a response to a social environment that pushes men and women towards quick and easy pleasure, that immunizes them against worries and responsibility, allowing them to turn their backs on any self-knowledge that might be gained through thought and introspection, two eminently intellectual activities that are now considered tedious in our fickle, ludic culture. “This need for distraction, the driving force of the society in which we live, stems from a desire to flee from the void and anguish that we feel when we are free, and forced to make decisions such as what to do with our lives and our world, especially in challenging times. For millions of people drugs now have the role, previously played by religions and high culture, of assuaging doubts and questions about the human condition, life, death, the beyond, the sense or senselessness of existence.”
Excerpt From
Notes on the Death of Culture
Mario Vargas Llosa
நம் சமூகத்தில் இன்று ஏன் போதை மருந்துகளுக்கு இவ்வளவு பெரிய இடம் ஏற்பட்டுள்ளது எனக் கேட்கும் லோஸா ஞானம் எனப்படும் தன்னறிதலுக்குத் தேவைப்படும் சிந்தனை, சுய-பிரதிபலிப்பு (self-introspection) ஆகியவற்றை இன்றைய பண்பாடு அனுமதிப்பதில்லை, சிந்திக்க இயலாத நவீன மனிதன் வாழ்க்கையின் வெறுமையையும், துயரத்தையும் கடந்து போவதற்கும், சுயவிடுதலை அடைவதற்கும் போதை மருந்துகளைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்கிறார். இதில் சுவாரஸ்யமான விசயம் வாழ்க்கை அதனளவில் நிறைவற்றது, தன்னளவில் கசப்பூறும் தன்மை கொண்டது என்பது. இதை வெற்றுப் பொழுதுபோக்கால் நம்மால் சமாளிக்க முடியாது. பொழுதுபோக்கு நம் பொழுதின்மீது இன்பத்தை ஏற்றுவதாக பாவிக்கிறது. ஆனால் உண்மையில் இது தற்காலிகமான தோற்றம் மட்டுமே. இது முடிவில் நம் வெறுமையையும் போதாமையையும் இன்னும் அதிகமாக அம்பலப்படுத்தி நம்மைத் தத்தளிக்க வைக்கிறது. நான் இன்னும் அதிகமான பொழுதுபோக்கை நாட வேண்டி வருகிறது.
இன்னொரு பிரச்சினை வாழ்க்கையின் பொருள் குறித்த தேடல். இதையும் பொழுதுபோக்கால் நிறைவு செய்ய இயலாது. போதை மருத்தைப் பயன்படுத்துவோருக்கு அது இக்கேள்விகளை முழுமையாகக் கடந்து செல்வதான தீவிர நம்பிக்கையை அளிக்கிறது. அவர்கள் மற்றொரு இடத்திற்குப் பயணிக்கிறார்கள். ஆனால் போகப்போக மிக அதிகமான போதை மருந்துகள் இதைத் தக்க வைக்கத் தேவைப்படும் என்பதால் இதுவும் ஒரு தீர்வல்ல என்கிறார் லோஸா.
தன்னறிவு ஏன் இவ்வளவு சிக்கலானதாக உள்ளது எனும் கேள்வியே இவ்விவாதத்தில் மிக முக்கியம் என்று நினைக்கிறேன். இன்று தியானம் பயிற்றுவிக்கும், தத்துவம் போதிக்கும் வகுப்புகள், வாழும் கலைப் பயிற்சிகள் அதிகமாகி விட்டன. சமகாலத்தின் அபத்தங்களில் ஒன்று இவை - நம் மனமே மொழியாலானது. மொழி தன்னளவில் கவனத்தை ஒன்று குவிக்கவும் உண்மையை அறியவும் உதவக் கூடியது. மொழி ஒரு லேசர் ஒளிக்கற்றை, அதே போல நம் பிரக்ஞை என்பது எண்ணங்களால் ஆனது அல்ல - அது காலத்தால் ஆனது. காலத்தின் அக-காட்சிப்படுத்தலே பிரக்ஞை. காலத்தை நம்மால் உள்ளுக்குள் பிரதிபலித்துக் காண இயல்கிறது. இவ்வளவு சாத்தியங்களும் மனிதருக்கு இயல்பாகவே அமைந்துள்ளபோது அவர்களுக்குத் தேவை சிந்திக்கும் அடிப்படைப் பயிற்சி மட்டுமே. சிந்திப்பது என்றால் தியானிப்பதோ தர்க்கரீதியாக அலசுவதோ அல்ல. எந்த ஒரு கருத்துருவும் நமக்குள் எப்படித் தோன்றிச் செயல்படுகிறது என்று நம்மால் கவனித்தாலே புரியும். அடுத்து உலகில் ஒவ்வொன்றும் எப்படி 'இருக்கிறது' என்பதை அதனுடன் நான் முழுமையாக உறவாடும்போதே நமக்குப் புலப்படுகிறது. ஒரு கத்தியை எடுத்து ஆப்பிளை நறுக்கும்போது அங்கு ஆப்பிளும் கத்தியும் தம்மை வெளிப்படுத்துகின்றன. அவற்றின் வெளிப்பாட்டின் ஊடாக காலமும் வெளியும் தம்மை வெளிப்படுத்துகின்றன. ஹைடெக்கர் இதனையே 'சிந்தனை' என்கிறார். நம்மால் இவ்வாறு 'சிந்திக்க' இயலாதபடி நுகர்வுச் சிந்தனை இன்று எல்லாவற்றிலும் புகுந்து கொள்கிறது - கத்தியை நாம் வாங்கிப் பயன்படுத்தப்படுவதாக, ஆப்பிளைப் புசித்து இன்புறக் கூடியதாக மட்டுமே சிந்திக்க நம் பண்பாடு நம்மைத் தூண்டுகிறது. நம்மைக் காலத்தில் இருந்தும் உலகில் இருந்தும் இது வெளியேற்றுகிறது.
நாம் 'சிந்திக்கையில்' ஒவ்வொரு கணமும் நம்மை அறிகிறோம், அடைகிறோம். இந்த நுண்-செயல்பாடு நம்மிடம் இருந்து அறுந்து போனதும் அந்த இடத்தைப் பல அன்றாடச் சடங்குகளும் (வாகனத்தில் ஏறி வேலைக்குப் போய் சம்பாதிப்பது)பொழுதுபோக்கும் போதை மருந்துப் பயன்பாடும் பற்றிக் கொள்கின்றன. நவீன நோய்மை இது.
எனக்கு லோசாவைப் படிக்கையில் அவர் விட்டுச் செல்லும் சிந்தனை இடைவெளிகளை நிரப்ப ஹைடெக்கர் இவ்வாறு மிகவும் தேவைப்படுகிறார்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...