Skip to main content

"ஏன் வாசிக்க வேண்டும்?" குறித்து மா. அண்ணாமலை

 நூலனுபவம் ( 21 )



நூல் : "ஏன் வாசிக்க வேண்டும்?"
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
பக்கங்கள் : 176
வகை : கட்டுரை
நூலின் தலைப்பினைக் கொண்டு இந்நூல் என்ன சொல்ல வருகிறது என ஒற்றை முடிவிற்கு என்னால் உடனடியாக வர முடியவில்லை. காரணம் அபிலாஷ். தான் எடுத்தாளும் எந்தக் கருத்தையும் அதன் பின்புலத்தோடு விசாரணைக்குட்படுத்துவது அபிலாஷின் பாணி. செடிகளாய் விதைகளிலிருந்து முளைத்து கிளை பரப்பும் விருட்சங்கள். அபிலாஷின் படைப்புகளோ கிளை பரப்பும் மரங்களை படைப்பெனும் விதைகளுக்குள்ளேயே கொண்டவை. அம்மாதிரியான படைப்புதான், ஏன் வாசிக்க வேண்டும்? என்பதும். பொது, இலக்கியம், தத்துவம், உளவியல் என பிரித்து எழுதியுள்ளார். ஆனால் நூலின் பெரும்பான்மையை பொதுவாசிப்பும் இலக்கியவாசிப்புமே எடுத்துக் கொண்டுள்ளன.
வாசிக்க யாரேனும் சொல்லித் தர வேண்டுமா? என நாம் வினவினால் அபிலாஷ் ஆமாம் என்கிறார். வாசிப்பு பற்றிய நான்கு கேள்விகள் - பகுதியில் அவர் எழுப்பும் எந்த வினாக்களுக்கும் தீர்க்கமான பதில் இல்லை. ஆனால் அக் கேள்விகளுக்கு உறுதியற்ற பதில்களை அளிப்பதன் மூலம் வாசகனை அக் கேள்விகளுக்கான பதிலை தானே கண்டறிய பணிக்கிறார். அப்பகுதியில் வரும் ஒரு கேள்வி இது.
கேள்வி: வாசிப்பினால் வாழ்க்கைக்கு பயன் இல்லையா?
பதில்: ஒரு முறை மனுஷ்யபுத்திரன் என்னிடம் சொன்னார் " இலக்கியம் வாழ்க்கை பற்றி கற்பிக்கும் பாடங்களை வைத்து வாழவே இயலாது. இலக்கியத்தின் அவதானிப்புகள் நடைமுறை வாழ்க்கைக்கு அப்பாலானவை."
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் வாசகன் வாசிப்பின் மூலம், தான் ஏற்றுக்கொண்ட வாழ்வியல் முறைகளுக்கு வலுவூட்டவே முற்படுகிறான். அப்படி இருக்க அவன் வாசிப்பினால் எப்படி பயனடையாமல் இருக்க முடியும். நம்மால் தனித்த வாழ்வை இங்கு வாழ முடியாது. வாழ்வு என்பது கூட்டு முயற்சியே. பரஸ்பரம் ஒவ்வொருவரின் உதவியால்தான் நம்மால் அன்றாடங்களைச் சிரமமின்றி நகர்த்த முடிகிறது. மனித சமூகம் குழுவாக வாழவே தயார்படுத்தப்பட்டது; அக்குழுவின் ஏற்ற இறக்கங்களை கணித்து நிகழ்வாழ்வை இலகுவாக வாழ/ அக்குழுவை எதிர்த்து தன் போக்கில் பயணிக்க வாசிப்பு ஒருவனுக்கு பயன்படுகிறது என்பது என் எண்ணம்.
வாசிப்பின் போது ஏற்படும் சுணக்கங்களை களைய வாசகன் தனக்கு முற்றிலும் புதிய துறைசார் நூல்களை வாசிக்க பரிந்துரைக்கிறார் அபிலாஷ். இது ஒரு விதத்தில் சரிதான். ஆனால் அதன் கலைச்சொற்களுக்கு பழக்கப்படாத மனது அந்நூலை வாசிப்பதில் தடையை கண்டறிந்து விடுமே என்ற ஐயமும் எனக்கு எழுகிறது. அதற்கு மாற்று வழியாக நான் பயன்படுத்தியது. மற்றவர்களுக்கு பொருந்துமா எனத் தெரியவில்லை. 2012ல் நான் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது அறிவியல் பகுதிகளை படிக்கும் போது மனம் பெரிதும் அயர்வுறும். அதைப்போக்க எனக்கு இலகுவான ஏற்கனவே வாசித்த தமிழை மீள வாசிப்பேன். அது மனதை லேசாக்குவதுடன் அடுத்து படிக்க வேண்டியவமைக்குமான எரிபொருளை கொடுக்கும். இதைப்போல வாசிக்க கடினமான நூலை தேர்ந்தெடுக்கும் போது நமக்கு பிடித்த நூலையும் அவ்வப்போது வாசிக்க பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல் வாசிப்பின் முழு இன்பத்தையும் அடைய குழுவாக வாசிப்பதை அபிலாஷ் பரிந்துரைக்கிறார். அது உண்மையில் பயனளிக்கக் கூடியதுதான். சமீபத்தில் நானும் தம்பி மதனும் கவிஞர் இசையின் கவிதைகளின் மீது பெருவிருப்பம் கொண்டு வாசித்தோம். அவன், இசையின் கவிதைகளை பற்றி சொல்லும் வார்த்தை " அண்ணா... இசை என்பவர் நாம சோகமாக இருக்கும்போது வாடா ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று ஆசுவாசப்படுத்தும் நண்பன் போன்றவர்" என்றான். எவ்வளவு அற்புதமான புரிதல். அவ்வார்த்தையை கேட்கும் வரை நம்மிடம் வேடிக்கையாய் பேசும் நண்பன் என்றே இசையை எண்ணியிருந்தேன். நம் துன்பகரமான நிகழ்வுகளின் வடிகால் அவர் என்பது எனக்குப் புதிது. ஆனால் குழுவாக வாசிப்பதில் பயணிக்க நம் அருகாமையில் ஒருவருமே இல்லை என்பதே இங்கு நிதர்சனம்.
எனக்கு இது அபிலாஷின் நான்காவது நூல். நூல்களின் தலைப்புகளில் எளிமையை தேர்ந்தெடுத்தாலும் நூலின் உள்ளடக்கம் ஆழ்ந்த வாசிப்பை வேண்டுகிறது. அது தேவையும் கூட. ஏனெனில் அபிலாஷ் மீனை சமைத்து தருபவர் அல்ல; மீன்பிடிக்கக் கற்றுத் தருபவர்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

தமிழ்நாட்டின் வளர்ச்சியும் ஏற்றத்தாழ்வும்

  முதல்வர் ஸ்டாலின் தேர்தலுக்கு முன் கடைசியாக வெளியிட்ட காணொளியைப் பார்த்தேன். அதில் அவர் தன் ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிட்டு சில குறைகள் உள்ளதையும் தான் ஒப்புக்கொள்வதாகத் தெரிவிக்கிறார். கண்ணியமான நிதானமான பேச்சு. அவர் குறிப்பிடும் ஒரு தகவல் உண்மையானது - தமிழ்நாடு வேறு எந்த ஆட்சியிலும் காணாத பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது (11.9%). இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி இது. வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைக் கொணர்வதிலும் புது நிறுவனங்களை அமைப்பதிலும் திமுக முன்னின்று செயல்பட்டுள்ளது. (விஜய் திமுக அரசு மாநிலத்தை கடனில் வீழ்த்தியுள்ளதாகச் சொல்லியிருப்பது ஒரு பொய்.) ஸ்டாலின் சொல்லும் இத்தகவல் இந்த ஆண்டின் துவக்கம் முதலே பல ஆங்கில நாளிதழ்களிலும் காணொளிகளிலும் பேசப்பட்டு வந்துள்ளது. ஒருவிதத்தில் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற விரும்புவதும் இதனால்தான் எனத் தோன்றுகிறது. அவர்கள் வந்தால் அவர்களுடைய தரப்பு முதலாளித்துவ வர்க்கம் உள்ளூர் முதலாளிகளைக் காலி பண்ணுவார்கள். ஊழலில் அவர்களுடைய உள்ளூர் தலைவர்களுக்கு பங்கு போகும். அவர்களால் இங்குள்ள வர்த்தகப் போக்குகளைக் கட்டுப்படுத்த இய...