Skip to main content

தமிழ்ச் சமூகத்தின் விருப்பங்களைக் குறித்து கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

May be an image of text that says 'f M என்டிடிவி தமிழ்நாட்டை வெல்லப்போவது யார்? தமிழ்நாடு திமுக+ அதிமுக+ தவெக பீப்பிள்ஸ் பல்ஸ் 125-145 மேட்ரிஸ் 65-80 மற்றவை ரிபப்ளிக் 18-24 பி மார்க் 2-6 87-110 10-12 0-6 65-85 122-132 125-145 சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் 145-160 145 160 ஜேவிசி-ன டைம்ஸ் நவ் 16-26 1-6 50-65 13-18 75-95 5-8 128-147 8-15 0 POLL PSLLS' 

நான் அடுத்துச் சொல்லப் போவதெல்லாம் வெளியாகியுள்ள கணிப்புகளின் அடிப்படையிலே.

அனைத்து தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளின் சராசரியை எடுத்தால் திமுக கூட்டணி கிட்டத்தட்ட 120 இடங்களும், அதிமுக 80 இடங்களும் த.வெ.க 8-12 இடங்களும் பெறுகிறார்கள். அதாவது திமுகவினர் 2021 தேர்தலில் இருந்து ஒரு பின்னடைவைச் சந்தித்தாலும் ஆட்சியைத் தக்க வைக்கிறார்கள். வலுவான எதிர்க்கட்சி ஒன்று அமைகிறது. அதிமுக திமுகவுக்கு நெருங்கி வருகிறது. மற்றபடி அதிமுகவை த.வெ.க காலி பண்ணிவிட்டு இரண்டாவது இடத்தைப் பெறும் என்பது வெறுங்கனவாகிறது. அடுத்து 5-15 ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல்களில் ஒன்று அதிமுக முன்னேறி வந்து திமுகவைத் தாண்டிச் செல்லும் அல்லது த.வெ.க தன்னைத் தக்க வைத்து 25-30 இடங்களைப் பெறும் மூன்றாவது அணித் தலைமைக் கட்சியாகும்.
பொதுவாக சமூகத்தில் வரும் மாற்றங்கள் ஊடகங்களில் பெருக்கிச் சொல்லப்படுவதைப் போல ஊழிப்பேரலையாக வருவதில்லை. 1930களில் நீதிக்கட்சி தேர்தலில் நின்று வென்ற போது அது 17 வருடங்களாக ஆதிக்கம் பண்ணிய கட்சியாக இருந்தது. பின்னர் வந்த தேர்தல்களில் நீதிக்கட்சி தோற்று காங்கிரஸ் ஆட்சியமைத்து தி.க உருவாகி வளர்ந்து திமுக தோன்றி மெல்ல மெல்ல ஆட்சியைக் கவர 40 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. அலைகள் ஏற்கனவே உள்ள அலைகள் மீது தோன்றி மேலேறி வருமே அன்றி தனியாக சூன்யத்தில் இருந்து தோன்றுவதில்லை. புதிய மாற்றங்கள் (emergent) வரும்போது பழைய போக்குகளும் சமூகத்தில் வண்டலாக (residue) இருக்கும், படிவங்களாக போக்குகள் ஒன்றன் மீது ஒன்று படிந்து பிரித்தறிய முடியாதபடி கலவையாக இருக்கும் என்று பண்பாட்டு ஆய்வாளர் ரெய்மெண்ட் வில்லியம்ஸ் கூறுகிறார். இப்போக்குகளில் சில ஆதிக்கப் போக்குகளாகவும், சில புதிதாக எழுகிறவையாகவும், மீதமுள்ளவை ஏற்கனவே இருந்தவற்றின் எச்சப் போக்குகளாகவும் இருக்கும் என்கிறார். அதனாலே பின்நவீனம் தோன்றும்போது நவீனப் போக்குகளும் இருந்தன, மரபான எண்ணஙக்ளும் கூடவே செயல்பட்டன. இன்று நாம் குறிப்பிடுகிற பின்னைக் கருத்தியல் போக்குகள் (post-ideology) த.வெ.கவை விசையுற வைக்கின்றன என நாம் கூறினாலும் கருத்தியல் போக்குகளும் (திராவிட கட்சிகள்) பழமையான சிந்தனைகளும் (சாதி, தமிழ்த் தேசியம், தமிழ் மரபு, மதம் - நா.த.க மற்றும் சாதிக் கட்சிகள்) கூடவே சேர்ந்தே சமூக அசைவுகளைத் தீர்மானிக்கின்றன. அதாவது, கருத்தியலுக்குப் பிந்தைய வெற்றுக் கவர்ச்சி அரசியல், வெற்றுக் குறிப்பான்கள், இன்னும் ஆதிக்கப் போக்காகவில்லை.
இன்னொரு விசயம் இப்போக்குகளிலும் எவை ஆதிக்கப் போக்குகள் என்று இத்தேர்தலை வைத்துக் கூட யாராலும் நிச்சயமாகச் சொல்ல இயலாது என நினைக்கிறேன். வெல்லக் கூடிய கட்சியின் வாக்குகளை ஒரு புதிய அலை சிதறடிக்கிறது எனில் அந்த அளவில் இரண்டு போக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என்று மட்டுமே சொல்ல இயலும். பாலினம், வயது, வெவ்வேறு பகுதிகள் சார்ந்து இந்த ஆதிக்கமும், புதுமையும், பழமையும் மாறுபடுகின்றன. த.வெ.க ஆதரவாளர் திமுக, அதிமுகவை பழமையென்று கருதலாம். பொதுப் பார்வையாளர் சீமானையும் மதவாதிகளையும் பழமையான மரபின் அடையாளம் எனக் கருதலாம். வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஒரு முடிவுக்கு வர இயலாது.
முக்கியமான படிப்பினை: மாற்றங்களும் ஏற்கனவே உள்ள போக்குகளும் ஒன்றையொன்று ஆதிக்கம் செய்ய முயன்று கீழ்மட்டத்தில் புரண்டு புரண்டு ஏறி விழுந்து கொண்டிருக்கும்; மேலே ஏதோ ஒன்று ஆரவாரித்து விழும். இவை கலந்ததே சமூக விசை தோன்றுகிறது. மேலும், எந்தப் போக்கும் உடனடியாகத் தோன்றி ஆதிக்கம் செய்யாது. ஆதிக்கம் செய்பவை தொடரப் போவதில்லை. பின்னடைவு கொள்பவைக் காணாமல் போவதில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...