Skip to main content

பேஸ்புக் ஏன் உங்களுக்கு வருமானம் தருவதில்லை?


வனிதா விஜயகுமார் அண்மையில் தான் யுடியூப் சேனல் ஆரம்பித்தார். அவரது ஆரம்ப கட்ட பிரபல்யம், அடாவடிப் பேச்சு, துணிச்சல், சுயபிரஸ்தாபம், சுவாரஸ்யமான மேக் அப் காணொளிகள், தொடர்ந்து பார்க்க வைக்கும் அதே நேரம் ரொம்ப சொதப்பலான, அசுத்தமான சமையல் குறிப்பு காணொளிகள் (ஒருமுறை அவர் செய்த நெய்ச்சோறு குழைந்து விட்டது, பிட்ஸா பாதி வேகாமல் வந்தது - ஆனாலும் எனக்கு வலிக்கலியே என்பதைப் போல அதை தானும் சாப்பிட்டு தன் குழந்தைகளையும் சாப்பிட வைத்து ரொம்ப நல்லா இருக்கில்ல என சொல்ல வைத்தார்.) என பதிவேற்று நிறைய ரசிகர்களைப் பெற்றார். அடுத்து தன் திருமணத்தை நேரலையாகக் காட்டி, அதில் பீட்டர் பாலை உதட்டோடு முத்தம் பதித்து, அதன் பிறகு இதைக் கண்டு பீட்டர் பாலின் மனைவி கண்டிக்க, அதை வனிதா கண்டிக்க, நடுவே லஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, அடிக்கொரு தரம் துப்புகிற சூர்யா தேவி என ஆளாளுக்கு நடுவே புகுந்து அடிதடி கலவரம் பண்ண கடந்த சில வாரங்களாக மொத்த தமிழகமே வனிதாவைப் பற்றித்தான் பேசுகிறது. இதில்யாரும்மா நீ வனிதா?” என யுடியூபே கேட்கும் அளவுக்கு அவரது யுடியூப் புகழ் கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்று விட்டது. அவரது ஒரு காணொளிக்கு சராசரியாக ஐந்து லட்சம் பார்வைகள் கிடைக்கின்றன. அவர் சராசரியாக ஒரு மாதம் யுடியூபில் இருந்து 8 லட்சத்தில் இருந்து 25 லட்சம் சம்பாதிக்கிறார் என ஒரு செய்தி பார்த்தேன். வனிதா தன் வாழ்வில் ஒரு படத்துக்கான கால்ஷீட்டில் கூட இதில் பாதி சம்பாதித்திருக்க மாட்டார். யுடியூப் அப்படி வனிதாவுக்கு மட்டுமல்ல வேறு பல சாமான்ய பிரபலங்களுக்கும் பொன் முட்டையிடும் வாத்து ஆகி விட்டது. அன்னம்மா சேட்டத்தி என கேரளாவில் ஒரு கிழவி இருக்கிறார். அவருக்கு உள்ளூர் உணவுகள் மட்டுமே பண்ணத் தெரியும். குழறிக் குழறி அவர் பேசுவது பாதி பேருக்குப் புரியாது. அவருடன் சமைக்கும் மகன் தான் அவரது மலையாளத்தை மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பார். ஆனால் பாருங்கள் அவரை இன்றைய தலைமுறைக்கு பிடித்துப் போய் விட்டது. இந்த கடைசி காலத்தில் மாதம் பல லட்சம் சம்பாதிக்கும் வி..பி ஆகி விட்டார். இதே போலத்தான் village food factory டேடி ஆறுமுகத்துக்கும் லக்கடித்தது. அவரது மகனின் இயக்குநர்  ஷங்கர் பாணியில் பிரம்மாண்டமாக பொதுவெளியில் சமைக்கிற ஸ்டைல் மக்களின் கவனத்தைக் கவர்ந்தது, அதோடு பார்வையாளர்களுக்கு தாத்தாவின் வெகுளியான பேச்சும் எளிமையும் ரசிக்கும்படியாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு போராடி வாழ்ந்த டேடி ஆறுமுகம் இப்போது ரொம்ப ஈஸியாக லட்சங்களில் கொழிக்கிறார். எங்கள் ஊரை சேர்ந்த ஸ்டெபி அக்காவைப் பற்றி சொல்லவே வேண்டாம். யுடியூப் சமையல் வீடியோ உலகில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் இந்தியாவில் இருந்திருந்தால் யுடியூபில் வரும் பணத்தில் பல பங்களாக்கள் வாங்கி இருக்கலாம்


யுடியூபில் சில மணிநேரம் செலவிட்டு உழைக்கிறவர்களுக்கு அதுவே வருமானம் தரும் தொழிலாகிறது என்றால் அநேகமாய் 20 மணிநேரம் இங்கேயே பேஸ்புக்கில் குப்பை கொட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சாதாரணமாய் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியாய் 10,000 விருப்பக்குறிகள் பெறுகிறவர்கள் உண்டு. எனில் அவர்களுக்கான views என்பது நிச்சயம் 50,000 இருக்கும். முன்பு அம்புஜா சிமி எனும் பேக் ஐடி ஒவ்வொரு படத்துக்கும் எளிதாய் ஒரு லட்சம் விருப்பக்குறிகள் பெற்றுக்கொண்டிருந்தார். எனில் views எவ்வளவு இருக்கும்? இவர்களை வைத்து தான் பேஸ்புக்கில் விளம்பரம், அதில் இருந்து வருமானம் எல்லாம் கல்லா கட்டுகிறது. ஆனால் பேஸ்புக் இதுவரை நயா பைசா யாருக்கும் தந்ததில்லை. இந்த பேஸ்புக் பிரபலங்கள் இந்த உழைப்பை யுடியூபில் காட்டி இருந்தால் இந்நேரம் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் பேஸ்புக் அவர்களை அதை விட சுகமான பேர், கவனம், சமூகத்தின் பகுதியாக இருக்கிற கிளர்ச்சியை தருகிறதே, தோழிகளை, தோழர்களைப் பெற, அதைக் கொண்டு வேறு லௌகீக பயன்களைப் பெற உதவுகிறதே. நீங்கள் தினமும் சில மணிநேரம் மட்டுமே யுடியூப் பார்க்க முடியும், ஆனால் பேஸ்புக்கிலோ 18 மணிநேரம் இருந்தாலும் அலுக்காது. ஆக பேஸ்புக்கில் இருப்பதே அதற்கான உளவியல் பிரதிபலனை, லாபத்தைத் தருகிறது என ஸூக்கர்பர்க் நினைத்திருக்கலாம். உங்களுக்கு எல்லாம் இனி காசு வேற தரணுமா என்பது அவரது அணுகுமுறை. நம்மாட்களும் கரும்பு தின்னக் கூலியா என இளித்துக் கொண்டு இருந்து விட்டார்கள்.


 ஆனால் யுடியூப் ஏற்படுத்தும் தாக்கம் பலரையும் இனி பேஸ்புக்கில் இருந்து யுடியூபை நோக்கி நடை கட்ட செய்யும். இதை உணர்ந்துள்ள பேஸ்புக் இனி காணொளிப் பதிவுகளுக்கு விளம்பர வருமானம் ஏற்படுத்தித் தர திட்டமிடுவதாக சொல்கிறார்கள். இந்த திட்டம் வெற்றி பெறுமானால், என்ன நடக்கும்

பேஸ்புக்கில் எழுதுவதை வெகுவாகக் குறைத்து காணொளிகள் போடத் தொடங்குவோம். அதில் சரியான உடல்மொழி, தோற்ற மெருகு, திறன் கொண்டவர்கள் நட்சத்திரங்கள் ஆவார்கள். அவர்களுக்கு லட்சங்களில் சம்பாதிப்பார்கள். விருப்பக்குறிகளுக்காக பதிவுகள் எழுதுவோர், அதைக்கொண்டு மார்தட்டுவோர் காணொளி நட்சத்திரங்களை நோக்கி வயிற்றெரிச்சல்பட்டு எழுத்துக்கு விடை கொடுப்பார்கள். பிளாகுக்கு நடந்தது, இதற்கும் நடக்கும். பேஸ்புக் சிறுபத்திரிகைகள், வணிக பத்திரிகைகளின் இடத்தை எடுத்துக் கொண்டது ஒரு முடிவுக்கு வரும். எழுத்தை சீரியஸாக எடுப்பவர்கள் மட்டும் பதிவர்களாக நிலைப்பார்கள்.

இப்படி சில நன்மைகளும், தீமைகளும் ஏற்படும்.  

Comments

Unknown said…
புளு சட்டையோட வருமானம் எல்லாவற்றயும் விட பெரிது

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...