முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்ணாமலையும் ரஜினியும்: தலைவிரித்தாடும் விஷப்பாம்புகள்

ரஜினிக்கும் அண்ணாமலை ஐ.பி.எஸ்ஸுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதில் ஒன்று இப்படி நாவில் நஞ்சைத் தடவிக் கொண்டு சாந்த சொரூபமாக முகத்தை வைத்தபடி பேசுவது. இவரைப் போன்றவர்களின் உடம்பில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் எடுத்தால் அதைக் கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பூச்சி மருந்தைத் தயாரிக்கலாம்.
அவர் பேசுவதை கவனியுங்கள்:
 1) இட ஒதுக்கீட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால் பாஜக இட ஒதுக்கீட்டை மறுப்பதை கண்டிக்க மாட்டேன்.
2) பாஜகவின் அடிமட்டத் தலைவர்கள் சரியில்லை. அவர்கள் சரியான கருத்தை தலைமைக்கு கொண்டு செல்லாததாலே பாஜக இப்படி தவறாக முடிவெடுக்கிறது.
3) நான் அரசியல்வாதி அல்ல, சாமான்யன். ஆகையால் அரசியல் பேச மாட்டேன்.

இப்போது என் எதிர்வினைக்கு வருகிறேன்:
1) பாஜகவின் இந்துத்துவ கொள்கை என்பதே வர்ணாசிரமம் சார்ந்தது, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது. இதை 'சிங்கம்' அண்ணாமலை அறிய மாட்டாரா? அறிவார். ஆனால் இப்போதைக்கு அவரது ஆசான்கள் குருமூர்த்தியும் ரஜினியும் என்பதால் பாஜகவை விமர்சிக்கக் கூடாது என கவனமாக இருக்கிறார். முடிவெடுப்பது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கும்பல், நிறைவேற்றுவது பிரதமர் ஜி. ஆனால் அண்ணாமலை மொத்த பழியையும் உள்ளூர் அடிமட்ட பாஜக தலைவர்கள் மீது போடுகிறார். இந்த மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

2) அதென்ன எதற்கெடுத்தாலும் 'நான் சாமான்யன், அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கு நான் முதலில் ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டும் அல்லது கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என இவர் சொல்கிறாரே என நீங்கள் யோசிக்கலாம். நாமெல்லாம் என்ன கட்சி உறுப்பினர்களா? அரசியலை விமர்சிக்கவில்லை? தமிழகமெங்கும் மூலைக்கு மூலை அரசியல் பேசுகிறார்களே மக்கள், அவர்கள் என்ன கட்சி உறுப்பினர்களா? இங்குதான் நீங்கள் ஒரு சூட்சுமத்தை கவனிக்க வேண்டும்:
நம்மைப் போல அரசியல் விமர்சனம் செய்யும் சமூகவலைதள போராளிகளை, மற்றொரு (news18) பேட்டியில், இதே அண்ணாமலை 'தலையில்லாத மக்கள் திரள்' என்கிறார். இவர்கள் எல்லாம் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், இவர்களை காவல்துறை கட்டுப்படுத்தாதனாலே பல புரட்சிகள் வெடிக்கின்றன, கடந்த சில ஆண்டுகளில் இப்படி மக்கள் அரசுக்கு எதிராக திரண்டு போராடுவது உலகம் முழுக்க ஒரு பெரும்போக்காக மாறி உள்ளது, இது ஆபத்தானது என்கிறார். அதாவது என்னையும் உங்களையும் போன்றவர்களைப் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்கிறார். ஏனென்றால் நாமெல்லாம் 'சாமான்யர்கள்', அரசியல் விமர்சமனம் செய்யக் கூடாது, அப்படி செய்தாலும் ஆளுங்கட்சியை விமர்சிக்கக் கூடாது, அது கட்சிக்காரர்களின் வேலை மட்டுமே என்கிறார். இந்த கருத்துநிலையின் சாராம்சமே 'நான் சாமான்யன், அதனால் அரசியல் பற்றி கருத்து சொல்ல மாட்டேன்' என்பது. 
இது "பேசுவதற்கு நாங்க இருக்கோம், சூத்திரர்கள் வாயை மூடி இருங்கடா" எனும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களின் திமிர்த்தனம். அண்ணாமலையும் ரஜினியும் இந்த பார்ப்பனத் தலைமையின் ஊதுகுழல்கள்.
 தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்த போது, எளிய மக்கள் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட போது ரஜினி ஆற்றிய எதிர்வினையும் மக்கள் தெருவுக்கு வந்து போராடி சட்டம் ஒழுங்கை கெடுக்கக் கூடாது, போலிசார் சுட்டதில் தப்பில்லை என்பதாகவே இருந்தது என்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.
அடிப்படையில், இவர், ரஜினி, ஹெச்.ராஜா போன்றோர் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். சிஸ்டம் சரியில்லை, அதை சரி செய்தால் பிரச்சனையே இராது, நாடு வளரும் என்று இவர்கள் சொல்வதன் பொருள் நாட்டை ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாற்ற வேண்டும், பாசிஸ்டுகள் ஆண்டாலே நாம் வளர்வோம் என்பதே.
மிக மிக ஆபத்தானவர்கள் இந்த அண்ணாமலைகள்!

கருத்துகள்

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan இவ்வாறு கூறியுள்ளார்…
அவன்லாம் IPS படிச்ச மாதிரியா பேசுரான். மண்டைல மாட்டுச் சாணிதான் இருக்குன்னு தெளிவா நிருபிக்கிறான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.