முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அண்ணாமலையும் ரஜினியும்: தலைவிரித்தாடும் விஷப்பாம்புகள்

ரஜினிக்கும் அண்ணாமலை ஐ.பி.எஸ்ஸுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதில் ஒன்று இப்படி நாவில் நஞ்சைத் தடவிக் கொண்டு சாந்த சொரூபமாக முகத்தை வைத்தபடி பேசுவது. இவரைப் போன்றவர்களின் உடம்பில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் எடுத்தால் அதைக் கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கான பூச்சி மருந்தைத் தயாரிக்கலாம்.
அவர் பேசுவதை கவனியுங்கள்:
 1) இட ஒதுக்கீட்டை நான் ஆதரிக்கிறேன். ஆனால் பாஜக இட ஒதுக்கீட்டை மறுப்பதை கண்டிக்க மாட்டேன்.
2) பாஜகவின் அடிமட்டத் தலைவர்கள் சரியில்லை. அவர்கள் சரியான கருத்தை தலைமைக்கு கொண்டு செல்லாததாலே பாஜக இப்படி தவறாக முடிவெடுக்கிறது.
3) நான் அரசியல்வாதி அல்ல, சாமான்யன். ஆகையால் அரசியல் பேச மாட்டேன்.

இப்போது என் எதிர்வினைக்கு வருகிறேன்:
1) பாஜகவின் இந்துத்துவ கொள்கை என்பதே வர்ணாசிரமம் சார்ந்தது, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது. இதை 'சிங்கம்' அண்ணாமலை அறிய மாட்டாரா? அறிவார். ஆனால் இப்போதைக்கு அவரது ஆசான்கள் குருமூர்த்தியும் ரஜினியும் என்பதால் பாஜகவை விமர்சிக்கக் கூடாது என கவனமாக இருக்கிறார். முடிவெடுப்பது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் கும்பல், நிறைவேற்றுவது பிரதமர் ஜி. ஆனால் அண்ணாமலை மொத்த பழியையும் உள்ளூர் அடிமட்ட பாஜக தலைவர்கள் மீது போடுகிறார். இந்த மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

2) அதென்ன எதற்கெடுத்தாலும் 'நான் சாமான்யன், அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கு நான் முதலில் ஏதாவது ஒரு கட்சியில் சேர வேண்டும் அல்லது கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என இவர் சொல்கிறாரே என நீங்கள் யோசிக்கலாம். நாமெல்லாம் என்ன கட்சி உறுப்பினர்களா? அரசியலை விமர்சிக்கவில்லை? தமிழகமெங்கும் மூலைக்கு மூலை அரசியல் பேசுகிறார்களே மக்கள், அவர்கள் என்ன கட்சி உறுப்பினர்களா? இங்குதான் நீங்கள் ஒரு சூட்சுமத்தை கவனிக்க வேண்டும்:
நம்மைப் போல அரசியல் விமர்சனம் செய்யும் சமூகவலைதள போராளிகளை, மற்றொரு (news18) பேட்டியில், இதே அண்ணாமலை 'தலையில்லாத மக்கள் திரள்' என்கிறார். இவர்கள் எல்லாம் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள், இவர்களை காவல்துறை கட்டுப்படுத்தாதனாலே பல புரட்சிகள் வெடிக்கின்றன, கடந்த சில ஆண்டுகளில் இப்படி மக்கள் அரசுக்கு எதிராக திரண்டு போராடுவது உலகம் முழுக்க ஒரு பெரும்போக்காக மாறி உள்ளது, இது ஆபத்தானது என்கிறார். அதாவது என்னையும் உங்களையும் போன்றவர்களைப் பிடித்து ஜெயிலில் போட வேண்டும் என்கிறார். ஏனென்றால் நாமெல்லாம் 'சாமான்யர்கள்', அரசியல் விமர்சமனம் செய்யக் கூடாது, அப்படி செய்தாலும் ஆளுங்கட்சியை விமர்சிக்கக் கூடாது, அது கட்சிக்காரர்களின் வேலை மட்டுமே என்கிறார். இந்த கருத்துநிலையின் சாராம்சமே 'நான் சாமான்யன், அதனால் அரசியல் பற்றி கருத்து சொல்ல மாட்டேன்' என்பது. 
இது "பேசுவதற்கு நாங்க இருக்கோம், சூத்திரர்கள் வாயை மூடி இருங்கடா" எனும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களின் திமிர்த்தனம். அண்ணாமலையும் ரஜினியும் இந்த பார்ப்பனத் தலைமையின் ஊதுகுழல்கள்.
 தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்த போது, எளிய மக்கள் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட போது ரஜினி ஆற்றிய எதிர்வினையும் மக்கள் தெருவுக்கு வந்து போராடி சட்டம் ஒழுங்கை கெடுக்கக் கூடாது, போலிசார் சுட்டதில் தப்பில்லை என்பதாகவே இருந்தது என்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.
அடிப்படையில், இவர், ரஜினி, ஹெச்.ராஜா போன்றோர் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். சிஸ்டம் சரியில்லை, அதை சரி செய்தால் பிரச்சனையே இராது, நாடு வளரும் என்று இவர்கள் சொல்வதன் பொருள் நாட்டை ஒரு போலீஸ் ஸ்டேட்டாக மாற்ற வேண்டும், பாசிஸ்டுகள் ஆண்டாலே நாம் வளர்வோம் என்பதே.
மிக மிக ஆபத்தானவர்கள் இந்த அண்ணாமலைகள்!

கருத்துகள்

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan இவ்வாறு கூறியுள்ளார்…
அவன்லாம் IPS படிச்ச மாதிரியா பேசுரான். மண்டைல மாட்டுச் சாணிதான் இருக்குன்னு தெளிவா நிருபிக்கிறான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...