முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜனநாயக விழுமியங்களை ஒரு பொருட்டாக மதிக்காத இந்துத்துவா



//"சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலே ஒரு திட்டத்தைத் தொடங்கவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு வழி வகை செய்கிறது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையின்றி தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் இந்த திட்டங்கள் குறித்து பிறகு ஒரு குழு போடப்பட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு யார் அதனை முடக்குவார்கள். எளிமையாகக் கேட்கிறேன் ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க எத்தனை பேர் உயிர் துறக்க வேண்டி இருந்தது," என்று கேள்வி எழுப்புகிறார் சுந்தராஜன்.

"குறிப்பாக இன்னொரு விஷயத்தைக் கூற வேண்டுமானால், சூழலுக்கு ஊறு விளைவிக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்து சில அமைப்புகள் நீதிமன்றங்களுக்குச் செல்கின்றன அல்லவா. அதனைத் தடை செய்கிறது இந்த வரைவு. ஒரு நிறுவனத்தை எதிர்த்து குடிமை சமூகமோ, தனி நபர்களோ இனி நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியாது. அரசு அமைப்புகள் மட்டுமே செல்ல முடியும் என்கிறது இந்த வரைவு. இது மோசமான ஆபத்தாக முடியும்," என்கிறார் அவர்.

சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கையைக் கடுமையாக எதிர்க்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். "இந்த அறிவிக்கை சுற்றுச் சூழல் விதிகளே ஒரு தேவையற்ற சுமை என்று இந்த அரசு நினைப்பதை வெளிப்படுத்துகிறது. பின் தேதியிட்டு திட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்பது மக்களின் சுகாதாரம் மற்றும் நலனில் அக்கறையற்ற செயல்" என விமர்சித்துள்ளார்.

இது நில ஆக்கிரமிப்புக்குத்தான் வழிவகை செய்யும் என அவர் கூறி இருக்கிறார்.//

மேலும் படிக்க: 

நண்பர்களே,
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை - இந்த இந்துத்துவ அரசுக்கு சட்டதிட்டங்களில், பொதுமக்களின் விருப்பம், அக்கறைகள், ஜனநாயக விழுமியங்களில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை இந்த புதிய சட்ட வரைவு மீண்டும் காட்டுகிறது. 
இவர்கள் ஒரு சின்ன பிரச்சனைக்காக காந்தியைக் கொன்றது, அதன் பின்னர் வரலாற்று ஆதாரம் இன்றியே அயோத்தியில் மசூதியை இடித்தது, அதன் பின்னர் பணமதிப்பிழப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், இப்போது இந்த சூழலியல் தாக்க மதிப்பீடு மற்றும் வர்ணாசிரம் அடிப்படையில் வேலை வழங்கும் திட்டம் (உ.பி) என ஒவ்வொன்றிலும் எந்த தர்க்கத்தையும் மக்கள் நலன் குறித்த திட்டத்தையும் பார்க்க முடியாது. பொதுமக்களையும் சிந்தனையாளர்களையும்  அறிவிலிகளாக பாவிப்பது, ஆர்.எஸ்.எஸின் அதிகார உச்சிக்கிளையில் வாலாட்டி அமர்ந்திருக்கும் பார்ப்பனிய தலைமையின் மக்கள் விரோத திட்டங்களை எந்த கலந்தாலோசனையும் இன்றி நடைமுறைப்படுத்துவது என இந்துத்துவா ஒரு கடைந்தெடுத்த பார்பனியம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். இறுதியாக, இவர்களை இன்னும் 20 வருடங்கள் ஆளவிட்டால் அரசியலமைப்பு சட்டத்தை ஆர்.எஸ்.எஸ்ஸின் பிராமணிய சட்டமாக மாற்றியமைப்பார்கள்.
நீங்கள் எதிர்த்தால், போராடினால் சில மாதங்கள் பொறுத்து மீண்டும் அதே சட்டங்களை நீங்கள் எதிர்பாராத போது கொண்டு வருவார்கள். காரணம் நான் மேலே சொல்லியிருப்பது தான்.
பேசாமல் அண்ணாவின் காலத்திலேயே நாம் தனிநாடு பெற்று வந்திருக்கலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...