முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு ரியாலிட்டி ஷோ அமைச்சரவை


 விசிக அமைச்சரவையில் இணைவது தமிழ்நாட்டில் முற்போக்குச் சிந்தனையை, பகுத்தறிவை நம்புவோருக்கு ஒரு பெரிய வீழ்ச்சிதான். அதில் சந்தேகமே இல்லை.

தனிப்பட்ட முறையில் இது விசிகவுக்கு பலனளிக்கும் என்பதிலும் அதே சமயத்தில் எனக்குச் சந்தேகமில்லை. அவர்கள் 'நேரடி அதிகாரத்தில்' பங்கேற்கலாம். அவர்கள்தாம், தலித்தியமோ, அம்பேத்கரியமோ, அயோத்திதாசரியமோ அல்ல. இதில் தெளிவு அவசியம் - அமைச்சர் பதவி தனிமனிதருக்குத்தானே ஒழிய கருத்தியலுக்கு அல்ல. தவெக ஒரு அம்பேத்கரிய கட்சி அல்ல. (அது கட்சியே அல்ல, ஒரு ஒற்றைத் தலைமையை வழிபடும் தொகுப்பே என்பது வேறுவிசயம்.) நான் இதையேதான் திமுக ஆட்சிக்கு வந்தாலும் சொல்லியிருப்பேன். மேலாதிக்கத்தின் பகுதியாவது கருத்தியலை நம்புவோரின் பிரதிந்தி அல்லர். ஆனால் திமுகவில் கருத்தியல் சார்ந்து ஒரு தலைமையை வழங்குபவராக விசிகவினர் இருந்திருக்க முடியும். அமைச்சரவையில் அவர்கள் இணைக்கப்படாதது குறித்து எனக்கு வருத்தமே. அதேநேரம், தவெகவுக்குள் வன்னி அரசுவால் ஒரு தலைமையை வழங்க முடியாதென்றே நினைக்கிறேன். இதுதான் முக்கியமான வித்தியாசம். காரணம் கருத்தியல் முரண் அல்ல.
தவெகவுக்கு அடிப்படையில் 'தலைமைப் பண்பிலே' நம்பிக்கை இல்லை. அவர்கள் ஒரு நியூஸ் கார்ட் கட்சி. அவர்கள் தினமும் பத்து நியூஸ் கார்டுகளை உருவாக்கி ரூட்ஸ் மீடியா வழியாகப் பரப்புகிறார்கள். பின்னணியில் பேரம், ஊழல் பண்ணுவார்கள். இதற்கிடையே எந்த விசயத்திலும் விஜய்யிடம் இருந்தோ பிற அமைச்சர்களிடம் இருந்தோ தலைமைத்துவம் வெளிப்பட்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்காது. இதுவரைக்கும் நாம் பார்த்துள்ளதை வைத்தும், இதற்கு முன்பு அந்த அமைப்பு செயல்பட்ட விதத்தை வைத்தும், அவர்களுடைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை வைத்தும் சொல்கிறேன்
"நான் விஜய், இவர் விஜய், நாங்க எல்லாரும் விஜய். அண்ணன் சொல்றதை நாங்க சொல்றோம். அவ்வளவுதாங்க."
"அண்ணன் இந்த விசயத்தில் என்ன சொல்றாருங்க?"
"அண்ணனே சொல்வார்."
"எப்போ?"
"அண்ணனுக்குத் தோணும்போது."
"சரி நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"நான் விஜய், இவர் விஜய், நாங்க எல்லாரும் விஜய். நன்றி. வணக்கம்."
இந்த கட்சியில் என்ன தலைமைத்துவம் இருக்க முடியும்?
அதேநேரம் விசிகவால் தன்னைப் பொருளியல் ரீதியாக வளப்படுத்த இயலும். அதைக் கொண்டு கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த முடியும். கட்சிக்கு அணுக்கமாக உள்ளவரக்ள் இதைப் பயன்படுத்தி வளர முடியும். வடிவேலு தன் பேண்ட் பாக்கெடுக்குள் கைவிட்டுச் சொல்வதைப் போல "இதுக்கு மேல ஒண்ணுமே இல்லீங்க".
இன்னொரு விசயம்: உண்மையான மக்கள் பிரதிநுத்துவம் நம் நாட்டில் சாத்தியமில்லை. அது தலித்துகளுக்கோ பிற உரிமை மறுக்கப்படுகிற சமூகங்களுக்கோ வர்க்கங்களுக்கோ பாலினங்களுக்கோ. அதனாலே ஒருவர் அமைச்சராகும்போது உணர்ச்சிவசப்படுவதை நிறுத்தி நடைமுறை சார்ந்து யோசிக்க வேண்டும். ஒரு தனிநபர் ஒரு சமூகம் அல்லர். ஒருவேளை அதிமுக உள்ளே புகுந்திராவிட்டால் தவெக முழுமையாக விசிகவை நம்பியிருக்கும் நிலை இருந்திருக்கும். அப்போது அவர்கள் தம் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு சில விசயங்களில் கொள்கை ரீதியாக முடிவெடுக்க முடியும். இப்போது கூட்டணியே ஏதோ சுயம்வரம் போலாகிவிட்டது. இடது பக்கம் பார்த்தால் நூறு பேர் தாம்பாளத்தில் பரிசுகளுடன், வலது பக்கம் திரும்பினால் இருநூறு பேர் மலர்ச்செண்டுடன். ஆகையால் அழுத்தமும் போட முடியாது. இம்மென்றால் த்ரௌபதி பக்கத்தில் இருப்பவர் மீது மாலை போட்டு விடுவார்.
விஜய்க்கு ஆலோசனை வழங்கியவர்கள் அவரை திமுகவை 'மிமிக்' செய்யச் சொல்கிறார்கள் - அதாவது திமுகவை விட சிறந்த திமுகவாக தவெகவைக் காட்டி பிரச்சாரம் பண்ணுவதற்குச் சொல்கிறார்கள். ஆகையால் அவர் திமுக செய்யாததை நான் செய்கிறேன் என டோக்கனிஸமாக ஒன்றைச் செய்கிறார். அவ்விதத்தில் அது சரிதான்.
ஆனால் அவர் தொடர்ந்து திமுகவைதான் மிமிக் செய்வார், ஒப்புருவாக்குவார் என்றில்லை. அவர் என்னென்னமோ கட்சிகளை ஒப்புருவாக்குவார். ஒப்புருவாக்கத்தில் உள்ள சிக்கல் இத்தகையோருக்கு - உண்மையையைப் போலிகளால் மறைப்பதைவிட - வேறு எதிலும் சீரியசான விருப்பம் இருக்காது என்பது. இவர்களை நீங்கள் 'செலுத்தவும்' முடியாது. இது ஒரு நாடகம். அன்றாடம் உருமாறும் நாடகம். ரியாலிட்டி ஷோ. இதை ஒருவர் நினைத்தால் இயக்கவும் இயலாது. இதில் 'இணைவது' இணைவதல்ல. ஒரு குறியீடாக மாறுவது மட்டுமே.
"பிக்பாஸில்" திடீரென்று இருவர் 'லவ்' பண்ணுவார்கள். அவர்கள் காதலிக்கிறார்களா இல்லையா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஷோவின் போது அந்த 'அமரக் காதலைத்' தடுக்கவும் முறியடிக்கவும் பலர் மேடைக்கு வருவார்கள். ஒரே உணர்ச்சிவசமாக இருக்கும். ஷோவுக்குப் பிறகு அவர்கள் என்னாவார்கள் என்று யாருக்கும் கவலையும் இல்லை. தவெகவின் அமைச்சரவை விரிவாக்கம் எனக்கு இந்த பிக்பாஸ் காதலையே நினைவுபடுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...