முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்னுடைய watch-along மற்றும் கிரிக்கெட் வர்ணனை அனுபவம்

என்னால் தொடர்ச்சியாக ஒரு கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே வர்ணிக்கவும் நுட்பங்களை விவாதிக்கவும் இயலுமா என ஒரு சந்தேகம் இருந்தது. டிவி வர்ணனையில் அவர்கள் விடாமல அரைமணிநேரம் பேசுவதைப் பார்க்கவே வியப்பாக இருக்கும். ஆகையால் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயலலாம் எனும் நோக்கத்திலே நேற்று watch-along செய்தேன். இரண்டு விசயங்கள் ஆச்சரியப்படுத்தின - 1) 20 ஓவர்களும் இடைவிடாமல் வர்ணிப்பது கூட கடினம் அல்ல. அதுவும் கூட ஆளிருந்தால் அது ஒரு விசயமே அல்ல.

2) சும்மா உட்கார்ந்து ஆட்டத்தைப் பார்ப்பதைவிட இது ரொம்ப இன்பமான அனுபவமாக இருந்தது. செயலூக்கத்துடன் கிரிக்கெட் பார்க்க முடிந்தது. ஆட்டம் அலுக்கும்போது கவனம் சிதறும். பார்க்கப் பிடிக்காது. ஆட்டத்தை அலசுவதால் அலுப்படையும் இடங்களையும் உற்சாகமாகக் கடக்க முடிந்தது.
இது ஒன்றும் கடுமையான வேலை அல்ல. டிவி வர்ணனையாளர்கள் பெரிய திரை முன்பு அமர்ந்து அவர்களுக்கு தொடர்ச்சியாக தரவுகளை அளிக்கும் அணியினரின் உதவியுடன், சக வர்ணனையாளருக்கு ஈடுகொடுத்துப் பேசுவார்கள். அது மட்டுமே வித்தியாசம்.
இணையம் இம்மாதிரி சின்னச்சின்ன பரிசோதனைகளைச் செய்து பார்க்க அனுமதிக்கிறது. அதேநேரம், இதை தினம் தினம் செய்வது பாத்திரம் தேய்ப்பது, பில் போடுவதைப் போல கடுப்பாகத்தான் இருக்கும். அடுத்து இறுதிப் போட்டிக்கு ஒரு watch-along பண்ணுவேனா எனத் தெரியவில்லை. அன்று மாலையில் பணியில்லாவிட்டால் முயல்வேன்.
கூட ஆட்டத்தை வர்ணிப்பதற்கு யாராவது ஆர்வம் இருந்தால் streamyard, riverside போன்ற செயலிகளைப் பயன்படுத்தி இரண்டு, மூன்று பேர்களாகச் சேர்ந்து வர்ணனை செய்து பார்க்கலாம். விருப்பமுள்ளோர் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.