முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நேசத்தின் அத்தாட்சிகள் - ஆர். அபிலாஷ்



உன்னை வெறுக்கும் தோறும்
மேலும் மேலும் நேசிக்கிறேன்
நேசிக்கும் தோறும்
நீ அந்நியமாகிறாய்

தொட்டால் உதிர்ந்து விடும் பூவைப் போல
பலவீனமாக இருக்கிறாய்
உன்னை முத்தமிட்டு
உதிர்த்து விட
விருப்பம் கொள்கிறேன்
நீ வாடிப் போகும் போது
கசியும் வாசனையை
உள்ளங்கையில் வைத்து முகர
ஏங்குகிறேன்
உன் கண்ணீரைத் தொட்டு
சுவைக்க
அது மெல்ல மெல்ல இனிப்பதை
விநோதமாய்
வியந்தபடி ரசிக்கிறேன்

இரவில்
உன் இதயத்துடிப்புகளை
கேட்டபடி படுக்கிறேன்
நான் தூங்க ஆரம்பிக்கும் போது
அவை நின்று போகின்றன
திடுக்கிட்டு விழிக்கும் போது
அவை படபடவென துடித்தபடி
ஒரு விடுபட விரும்பும் பறவையை போல
என்னிடம் இறைஞ்சுகின்றன
வெகுநேரம் அறியாது
ஒரு குழந்தையின் காலை
மிதித்து இருந்து விட்டது போல்
குற்றவுணர்வு அடைகிறேன்.

ஒரு பழம் அழுகிப் போன பின் தான்
கனிந்து விட்டது
என நம்புகிறாய்

தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு நினைவிழந்த
கோழியை
அப்படியே தோலுரித்து
மெல்ல நுகர்ந்து
அதன் சுவை அலாதியானது
என்றபடி
கழுத்தில் கத்தி வைக்கிறாய்
கிழித்து திருகி
தண்ணீரில் குருதி கரைவதைப்
பார்க்கிறாய்

நீ சமைக்கும் எல்லா அசைவப் பொருளிலும்
குருதி வாசனை
மேலிடுகிறது
குருதி தான் உயிரின் வாசனை
என்கிறாய்

காலையில் விழித்ததும் இரவில் தூங்கும் முன்னரும்
நாம் சேர்ந்திருக்கக் கூடாது
என்பதற்கு எத்தனை எத்தனை காரணங்கள்!
இடைப்பட்ட வேளையில்
நீ தரும் முத்தங்கள்
அரவணைப்பு
வியர்வை எச்சில் பாலுறுப்பு நீர்
அழுகைகள் கத்தல்கள் பெருமூச்சுகள் நடுக்கங்கள் ஏக்கங்கள்
அதற்கு மேல்
ஆயிரமாயிரம் காரணங்களைத் தருகின்றன
உன் நேசத்தின் ஒவ்வொரு அத்தாட்சியும்
நாம் பிரிந்திருப்பதற்கான நியாயங்களை
மீள மீள சொல்லுகின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...