முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவலாசிரியரின் குறிப்புகள் 16

 


நேற்று இரவு ஒரு அரசியல் நேர்முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆளுங்கட்சியின் ஆலோசகரும் அமைச்சருமான ஒருவரைக் குறிப்பிட்டு அவர் ஒரு குட்டிச்சாத்தான், அவருக்கு தொடர்ந்து வேலை கொடுக்கவில்லை என்றால் அவர் உங்களை முழுங்கிவிடுவார் என்று சொன்னார். எனக்கு அந்த உருவகம் ரொம்ப உயிர்ப்பாக, வித்தியாசமாகத் தோன்றியது. நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்துக்கு அந்த குட்டிச்சாத்தனின் இயல்பு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கலாம், கதையமைப்பையும் அது வலுவாக்கும் எனத் தோன்றியது.

உடனே இரவுணவை முடித்துவிட்டு அதை எழுத வேண்டும் எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் வேறென்னென்னமோ செய்திருந்துவிட்டு சட்டென நாவலைத் திறந்து எழுத ஆரம்பித்ததும் கடும் புயல் மழையில் வீட்டின் சுவர்களைப் பெயர்த்துக் கொண்டு வெள்ளம் பாய்வதைப் போல சொற்கள் பெருக்கெடுத்து ஓடின. விடியும்போதுதான் எழுதுவதை நிறுத்தினேன். எழுதும்போதே அது நன்றாக வந்துள்ளதாக உணர்ந்தேன். ஒரு அரசியல் நேர்முகத்தில் இருந்து என் நாவலுக்கு ஒரு திறப்பு வருமென யாராவது சொல்லியிருந்தால் கட்டாயம் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் நாம் எதைச் செய்தாலும், படித்தாலும், பார்த்தாலும், கேட்டாலும், நுகர்ந்தாலும், ஸ்பரிசித்தாலும் மனம் நாவலையே ஒருபுறம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. நாம் நாவலை எழுதாத போதும் அதை நம் ஆழ்மனத்தில் எழுதிக் கொண்டே இருக்கிறோம். அதனாலே எனக்குச் சில நேரங்களில் ஒரு படைப்பாளி எதையும் எழுதாமல், செய்யாமல் நேரத்தை வீணடிப்பது, வெட்டியாய் பொழுதைக் கழிப்பது நல்லது என்று தோன்றும். அப்போது அவர் தன் மனத்தை மட்டும் தீவிரமாக, ஒரு கொதி நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் முடியும்போது அவர் ஒன்றையும் எழுதாவிட்டாலும் மிகவும் களைப்பாக உணர்வார். அவரது படைப்பு மனம் அவர் எழுதாத போழுதை விட அப்போது மிகத்தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிய மட்டார். அவர் அறியாதபோது மட்டுமே அது நிகழும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...