முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாட்டரிக் கொள்ளைக்காரர்களை எதிர்ப்பது

 


மக்களாட்சியில் ஒரு நிலைகுலைவு - தேர்தல் மோசடி, வாக்கு எந்திர மோசடி, சினிமாக்காரர்களை வைத்து அரசியலைக் கைப்பற்றும் லாட்டரித் தொழிலதிபர் மோசடி - வரும்போது கிடைக்கிற ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள் அரசியல் பேசுவது நல்லது - அதனால் மக்களுக்கு நேரடியாகப் பணம் வரப் போவதில்லை. மக்கள் அரசியல்வாதிகள் அல்லர். அரசியல் அவர்களுக்குத் தொழில் அல்ல. ஆனாலும் அரசியல் அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. உதாரணமாக, ஒரு அரசாக நீங்கள் அமெரிக்க சார்பா, ரஷ்ய சார்பா என்பது உங்கள் நாட்டின் எண்ணெய் இறக்குமதியை பாதிக்கும். அது பொருளாதார நெருக்கடிக்கு, விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்லும். அண்மையில் நாட்டின் பிரதமரே இதை ஒப்புக் கொண்டார். மக்கள் மட்டும் அரசியல் பேசாமல் தம் போக்கு இருந்தால் அவர்கள் வேறு நாட்டுக்குத்தான் குடிபெயர வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதபோது மக்கள் பேசியே ஆக வேண்டும்.

மக்களாட்சி ஒழுங்காக நடக்கும்போது மட்டுமே மக்களால் - பொழுதுபோக்கு, படைப்பாக்கம், வாசிப்பு என - கொஞ்சம் சுயநலமாக இருக்க ஈயலும்.

சினிமா அரசியலுக்குள் வரும்போதெல்லாம் சாக்கடை நம் தண்ணீரில் கலக்கிறது, பின்வாசல் வழியாக பொருளாதார குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்கள் வந்து பிரதிநிதிகளையும் ஊடகங்களை விலைக்கு வாங்கி மாநிலத்தை கைப்பற்றப் போகிறார்கள் எனப் பொருள். அவர்களுக்கு அரசியல் என்பது நீண்ட காலத் தொழில் அல்ல. அது தற்காலிக அஸைன்மெண்ட். ஒரு கொள்ளைக் கூட்டம் வந்து உள்ளே புகுந்து பல ஆயிரம் கோடிகளை அபகரித்து விட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் இவ்வாறு ஏற்படுத்தும் பாதிப்பு மோசமாக இருக்கும். அவர்கள் யாருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்லர் என்பதால் நீங்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுப்பது கடினம். குரோனி தொழிலதிபர்கள் ஊழல் அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள். குரோனி தொழிலபதிபர்களே (மார்ட்டின் குடும்பத்தினர்) இன்று தமிழ்நாட்டை நேரடியாக ஆள்கிறார்கள்.

லாட்டரியின் விளைவுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்: ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது அப்பா தினசரி லாட்டரி வாங்கும் போதைக்கு ஆட்பட்டிருந்தார். சில ஆயிரங்களைத் தவிர அவர் எதையும் லாட்டரி மூலம் வெல்லவில்லை. பல லட்சங்களை இழந்துவிட்டார். அப்பணம் இருந்திருந்தால் அவர் ஒரு வீடு கட்டியிருக்கலாம், தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கலாம். இம்மாதிரி குடும்பங்களை ஏமாற்றிப் பறித்த பல லட்சம் கோடிகளையே மார்ட்டின் இன்று அரசுகளை விலைக்கு வாங்கப் பயன்படுத்துகிறார். அவர் மீது பல ஆயிரம் கோடி முறைகேடு குற்றச்சாட்டுகள், வழக்குகள் உண்டு. ஆனால் பணத்தை அள்ளி இறைத்து தப்பித்து விடுகிறார். ஒரேயடியாக அதிகாரம் தம் வசம் இருந்தாலே வழக்குகள் இன்றி கொள்ளையடிக்க முடியும் என்றே அவர் அரசையே கைப்பற்றுகிறார். அவரது பணத்தின் துணிச்சலைக் கொண்டே இன்று ஆதவால் ஒரு கட்சியைத் துவங்கி, அதில் விஜய்யை பொம்மைத் தலைவராக்கி ஆட்டுவித்து, அப்பணத்தைக் கொண்டே விகடன், தந்தியையே வாங்க முடிந்தது என்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் - எப்படியான ஊடக நிறுவனங்கள் இவை. அப்பணத்தைக் கொண்டே அவர் திமுக கூட்டணிக் கட்சிகளை வாங்குகிறார். அதிமுக எம்.எல்.ஏக்களை பதவி விலக வைக்கிறார். ஊழல் பணத்தை வைத்து அரசியல் செய்வதை விட லாட்டரிப் பணமான மக்களின் குருதிப் பணத்தை வைத்து ஆட்சி நடத்துவது கொடூரமானது. எத்தனையோ கோடி பேர்களின் சாபம் அப்பணத்தின் பின் உள்ளது.
ஒரு குற்றவாளி வந்து மிகச் சுலபமாக இதையெல்லாம் சாதிக்கிறார். மக்கள் விஜய், விஜய் என்று சாதாரணமாக இதைக் கண்டு ஏமாறுகிறார்கள். அறிவுஜீவிகள் இது இளைஞர் புரட்சி, வெகுமக்களின் வருகை, தூய லட்சியவாதம் என மயங்குகிறார்கள்.

பாதிக்கப்படும் மக்கள், பொறுப்புணர்வுள்ள குடிமைச் சமூகம் எச்சரிக்கையாகி இதை எதிர்க்க வேண்டும். நான் எழுதினால், பேசினால் என்ன நடந்துவிடும் என நினைக்கலாகாது. சார்த்தர் சொன்னதைப் போல ஒரு தனிமனிதர் ஒன்றைக் குறித்து நினைப்பது, அதை நோக்கிச் செயல்படுவது, ஒரு சொல்லைச் சொல்வது, ஒரு விரலை அசைப்பது கூட அரசியல்தான். அது ஏதோ ஒரு சலனத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தும். ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு அது மேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...