முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாட்டரிக் கொள்ளைக்காரர்களை எதிர்ப்பது

 


மக்களாட்சியில் ஒரு நிலைகுலைவு - தேர்தல் மோசடி, வாக்கு எந்திர மோசடி, சினிமாக்காரர்களை வைத்து அரசியலைக் கைப்பற்றும் லாட்டரித் தொழிலதிபர் மோசடி - வரும்போது கிடைக்கிற ஊடகங்களைப் பயன்படுத்தி மக்கள் அரசியல் பேசுவது நல்லது - அதனால் மக்களுக்கு நேரடியாகப் பணம் வரப் போவதில்லை. மக்கள் அரசியல்வாதிகள் அல்லர். அரசியல் அவர்களுக்குத் தொழில் அல்ல. ஆனாலும் அரசியல் அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது. உதாரணமாக, ஒரு அரசாக நீங்கள் அமெரிக்க சார்பா, ரஷ்ய சார்பா என்பது உங்கள் நாட்டின் எண்ணெய் இறக்குமதியை பாதிக்கும். அது பொருளாதார நெருக்கடிக்கு, விலைவாசி உயர்வுக்கு இட்டுச் செல்லும். அண்மையில் நாட்டின் பிரதமரே இதை ஒப்புக் கொண்டார். மக்கள் மட்டும் அரசியல் பேசாமல் தம் போக்கு இருந்தால் அவர்கள் வேறு நாட்டுக்குத்தான் குடிபெயர வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாதபோது மக்கள் பேசியே ஆக வேண்டும்.

மக்களாட்சி ஒழுங்காக நடக்கும்போது மட்டுமே மக்களால் - பொழுதுபோக்கு, படைப்பாக்கம், வாசிப்பு என - கொஞ்சம் சுயநலமாக இருக்க ஈயலும்.

சினிமா அரசியலுக்குள் வரும்போதெல்லாம் சாக்கடை நம் தண்ணீரில் கலக்கிறது, பின்வாசல் வழியாக பொருளாதார குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளைக்காரர்கள், மோசடிக்காரர்கள் வந்து பிரதிநிதிகளையும் ஊடகங்களை விலைக்கு வாங்கி மாநிலத்தை கைப்பற்றப் போகிறார்கள் எனப் பொருள். அவர்களுக்கு அரசியல் என்பது நீண்ட காலத் தொழில் அல்ல. அது தற்காலிக அஸைன்மெண்ட். ஒரு கொள்ளைக் கூட்டம் வந்து உள்ளே புகுந்து பல ஆயிரம் கோடிகளை அபகரித்து விட்டுப் போய்விடுவார்கள். அவர்கள் இவ்வாறு ஏற்படுத்தும் பாதிப்பு மோசமாக இருக்கும். அவர்கள் யாருக்கும் கடமைப்பட்டவர்கள் அல்லர் என்பதால் நீங்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுப்பது கடினம். குரோனி தொழிலதிபர்கள் ஊழல் அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள். குரோனி தொழிலபதிபர்களே (மார்ட்டின் குடும்பத்தினர்) இன்று தமிழ்நாட்டை நேரடியாக ஆள்கிறார்கள்.

லாட்டரியின் விளைவுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்: ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரது அப்பா தினசரி லாட்டரி வாங்கும் போதைக்கு ஆட்பட்டிருந்தார். சில ஆயிரங்களைத் தவிர அவர் எதையும் லாட்டரி மூலம் வெல்லவில்லை. பல லட்சங்களை இழந்துவிட்டார். அப்பணம் இருந்திருந்தால் அவர் ஒரு வீடு கட்டியிருக்கலாம், தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருக்கலாம். இம்மாதிரி குடும்பங்களை ஏமாற்றிப் பறித்த பல லட்சம் கோடிகளையே மார்ட்டின் இன்று அரசுகளை விலைக்கு வாங்கப் பயன்படுத்துகிறார். அவர் மீது பல ஆயிரம் கோடி முறைகேடு குற்றச்சாட்டுகள், வழக்குகள் உண்டு. ஆனால் பணத்தை அள்ளி இறைத்து தப்பித்து விடுகிறார். ஒரேயடியாக அதிகாரம் தம் வசம் இருந்தாலே வழக்குகள் இன்றி கொள்ளையடிக்க முடியும் என்றே அவர் அரசையே கைப்பற்றுகிறார். அவரது பணத்தின் துணிச்சலைக் கொண்டே இன்று ஆதவால் ஒரு கட்சியைத் துவங்கி, அதில் விஜய்யை பொம்மைத் தலைவராக்கி ஆட்டுவித்து, அப்பணத்தைக் கொண்டே விகடன், தந்தியையே வாங்க முடிந்தது என்கிறார்கள். யோசித்துப் பாருங்கள் - எப்படியான ஊடக நிறுவனங்கள் இவை. அப்பணத்தைக் கொண்டே அவர் திமுக கூட்டணிக் கட்சிகளை வாங்குகிறார். அதிமுக எம்.எல்.ஏக்களை பதவி விலக வைக்கிறார். ஊழல் பணத்தை வைத்து அரசியல் செய்வதை விட லாட்டரிப் பணமான மக்களின் குருதிப் பணத்தை வைத்து ஆட்சி நடத்துவது கொடூரமானது. எத்தனையோ கோடி பேர்களின் சாபம் அப்பணத்தின் பின் உள்ளது.
ஒரு குற்றவாளி வந்து மிகச் சுலபமாக இதையெல்லாம் சாதிக்கிறார். மக்கள் விஜய், விஜய் என்று சாதாரணமாக இதைக் கண்டு ஏமாறுகிறார்கள். அறிவுஜீவிகள் இது இளைஞர் புரட்சி, வெகுமக்களின் வருகை, தூய லட்சியவாதம் என மயங்குகிறார்கள்.

பாதிக்கப்படும் மக்கள், பொறுப்புணர்வுள்ள குடிமைச் சமூகம் எச்சரிக்கையாகி இதை எதிர்க்க வேண்டும். நான் எழுதினால், பேசினால் என்ன நடந்துவிடும் என நினைக்கலாகாது. சார்த்தர் சொன்னதைப் போல ஒரு தனிமனிதர் ஒன்றைக் குறித்து நினைப்பது, அதை நோக்கிச் செயல்படுவது, ஒரு சொல்லைச் சொல்வது, ஒரு விரலை அசைப்பது கூட அரசியல்தான். அது ஏதோ ஒரு சலனத்தைச் சமூகத்தில் ஏற்படுத்தும். ஒன்றுமே செய்யாமல் இருப்பதற்கு அது மேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...